search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தானிய சேமிப்பு கிடங்கு சீரமைப்பு பணிகள்- சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு
    X

    தானிய சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர்.

    தானிய சேமிப்பு கிடங்கு சீரமைப்பு பணிகள்- சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு

    • நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
    • லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.

    மன்னாா்குடி எம்.எல்.ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன்,அருள், அன்பழகன், பாலசுப்ர மணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார் , முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் வந்தனர். வேதாரண்யம் தாலுகா ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆசியாவி லேயே 2வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொ ருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

    கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில்மேற்கொ ள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, பார்வை யிட்டு இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தற்போது ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை, கோடியக்காடு வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    Next Story
    ×