search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி"

    • பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.
    • கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

    அரபு நாடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் குறைவு என கூறப்படும் நிலையில் 22 சக்கர கனரக வாகனத்தை ஒரு பெண் ஓட்டி அசத்தியுள்ளார். துபாயை சேர்ந்தவர் பவுசியா சஹுரான். 22 வயதான இவர் பிறக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இவர் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்தார். வணிக வரி துறையில் பட்டம் பெற்ற இவர் ஆணுக்கு நிகராக பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.

    துபாயில் கனரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெறுவது சுலபமல்ல. 2013-ம் ஆண்டு முதல் முறையாக இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்ற இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கனரக வாகன உரிமம் பெற முயற்சி செய்தார். கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

    ஆனாலும் தனது விடா முயற்சியால் முதல் முயற்சியிலேயே கனரக வாகன ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். புஜாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக சேர்ந்த இவர் 2 மற்றும் 3 அச்சுகள் கொண்ட 22 சக்கர கனரக வாகனத்தை ஓட்டி அசத்தி வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கனரக வாகனம் ஓட்டுவது சாதாரணமாக கார் ஓட்டுவது போன்று அல்ல. நீண்ட தூர பயணத்தில் முழு கவனம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம். அதே போல டீசல், தண்ணீர் மற்றும் டயரில் போதிய அளவு காற்று இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். 

    • போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
    • மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக லாரியில் மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை த்தொடர்ந்து அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரியில் சுமார் 45 எருமை மாடுகள் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கமாக கட்டி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

    போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியுடன் மாடுகளை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 45 மாடுகளை மறைமலைநகரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் படி இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
    • விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், புவனகிரி பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.

    லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அரியலூர் மவராட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த கார் அந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது. இதனால் பைக் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தது. உடனே பைக் ஒட்டி வந்த நபர் லாரி மீது ஏறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனால் அதைப் பொருட்படுத்தாது ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்றைய தினம் இதே லாரி மற்றொரு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

    இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

    அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

    சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விழுப்புரம்:

    கம்பத்திலிருந்து அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பஸ்சை தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு சொகுசு பஸ் லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுக்கியது.பஸ் கண்டக்டர் சென்னையைச் சேர்ந்த செல்வம் சிறுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மற்றொரு விபத்து : சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( வயது 47) ஓட்டி சென்றார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரியானது திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது இதனால் அரசு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
    • சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி:

    சூளகிரி அருகே பயங்கரம் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றார்.

    அப்போது அந்த வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் வந்த சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் காரில் இருந்த 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ், திருப்பூரைச் நரேன்யஷ்வந்த், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழ்அன்பன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் என்பதும், காயமடைந்த வாலிபர்கள் மேட்டூர் தர்வின், திருச்சியைச் சேர்ந்த பர்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. காரில் வந்த 5 பேரும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு இன்று அதிகாலை சூளகிரி அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    • வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது
    • 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் கொல் லங்கோடு பகுதியை சேர்ந்த வர் இர்வின் (வயது 50), லாரி டிரைவர். இவர் ஈரோடு பெருந்துறையில் இருந்து களியக்காவிளை அருகே பனச்சமூட்டிற்கு லாரியில் மாட்டு தீவ னங்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டார். இன்று அதிகாலையில் வட சேரி அண்ணா சிலை யிலிருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட் டின் நடுவே வைக்கப்பட்டி ருந்த தடுப்பு கற்கள் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன் சக்கரமும் உடைந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடுரோட் டில் லாரி தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. இதுகுறித்து நாகர்கோ வில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரை வர் இர்வினை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். வடசேரியில் இருந்து பார்வதிபுரம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. வட சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லை மற்றும் வெளியூர்க ளுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது.

    ஆனால் லாரி விபத்தில் சிக்கிய பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்ட தையடுத்து போலீசார் அந்த பகுதியில் நின்று அதை சரி செய்யும் பணியை மேற் கொண்டனர். காலை நேரம் என்பதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து சென்றன.

    விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியை போலீசார் மேற்கொண்ட னர். லாரியில் இருந்த மாட்டு தீவன மூட்டைகள் இறக்கி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து கிரைன் மூலமாக லாரியை அகற்றும் பணியை போலீசார் மேற் கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் லாரியினுடைய ஸ்டேரிங் உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக லாரி டிரைவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத் திற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.
    • லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    திருவொற்றியூர்:

    டிரைலர் உரிமையாளர்கள், மற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என மொத்தம் 37 சங்கங்கத்தினர் 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்க்கிங் யார்டு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதையொட்டி அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.

    லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே டிரைலர் லாரி டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த காளி, ஆசைத்தம்பி ஆகியோர் டிரைவர் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போராட்டம் அறிவித்திருப்பதால் வெளியூர் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பண்டிகை காலம் முடிந்த பின் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் பல்வேறு தரப்பிலும் தீபாவளியையொட்டி போராட்டம் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்ததால் நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக டிரைலர் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.எம். கோபி தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் டிரைலர் லாரிகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கின.

    ×