search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "truck"

    • விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    • கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    • இந்திய விண்வெளி திட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.
    • காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிட்கோ தொழிற் பேட்டையில் பிரபல தனியார் நிறுவனத்தின் கனரக லாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவிற்கு தேவைப்படும் அதிநவீன கனரக லாரியை தயாரித்து சாலை மார்க்கமாக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தொழிற்சா லையின் தலைமை செயல் அலுவலர் தெரிவித்தாவது:-

    இந்திய விண்வெளிதிட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்பம் மகேந்திரகிரியில் உருவாக்கப்படுகிறது.

    அதன் பிறகு அவற்றை இஸ்ரோவின் ஏவுதளமான ஸ்ரீஹரி கோட்டாவுக்கு கொண்டு செல்ல இந்த பிரம்மாண்ட லாரி பயன்படும்.

    லாரியின் விலை ரூ.1.40 கோடி ஆகும். இந்த லாரி 74 அடிநீளமும், 17.5 அடி அகலமும் 17 அடி உயரமும் கொண்டது. இதன் மேற்புரம் தானாக திறந்து கொள்ளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வாகனம் எந்த பக்கமும் தானே திரும்பிக்கொள்ளும் சிறப்பு ஸ்டேரிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தின் மூலம் மகேந்திரகிரியில் தயாராகும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை மிகுந்த பாதுகாப்புடன் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு அனுப்ப முடியும்.

    மழை உள்ளிட்ட அனைத்து வித பாதிப்புகளையும் தாங்கி உள்ளே இருக்கும் ராக்கெட்டை பாதுகாப்புடன் கொண்டுச் செல்வதற்காக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்துடன் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவிற்கு இரு சிறிய ரக லாரிகளை அனுப்பி வைத்தோம். தற்போது மகேந்திரகிரிக்கு மிகவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட லாரியை உருவாக்கி அனுப்பி வைத்துள்ளோம்.

    மேலும் திருவனந்தபுரம் தும்பாவில் உள்ள இஸ்ரோ தளத்திற்கு ஒரு லாரி தயாரிக்கும் ஒப்பந்தம் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன என்றார்.

    இந்நிலையில் லாரி அரக்கோணத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மகேந்திரகிரிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

    அதன்படி லாரி நேற்று மாலை அரக்கோணம்-காஞ்சிபுரம் சாலையில் சென்றது. லாரி மிகவும் நீளமாகவும், அகலமாகவும் இருந்ததால் அந்த வழியில் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் காஞ்சிபுரம் சாலையில் சுமார் 3 மணி நெரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

    இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

    அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

    சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
    • சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி:

    சூளகிரி அருகே பயங்கரம் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றார்.

    அப்போது அந்த வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் வந்த சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் காரில் இருந்த 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ், திருப்பூரைச் நரேன்யஷ்வந்த், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழ்அன்பன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் என்பதும், காயமடைந்த வாலிபர்கள் மேட்டூர் தர்வின், திருச்சியைச் சேர்ந்த பர்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. காரில் வந்த 5 பேரும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு இன்று அதிகாலை சூளகிரி அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    • கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் லாரி மோதி கவிழ்ந்தது.
    • நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த ஜெயராஜ்(வயது42) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் கிளீனராக சேலம் மாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோகுல் (22) உடனிருந்தார்.

    இன்று அதிகாலை திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் லாரி மோதி கவிழ்ந்தது. இதில் நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து டிரைவர் ஜெயராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த கோகுலை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலிருந்து புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது.

    இதனை டிரைவர் பிரபாகரன் ஓட்டிச் சென்றார். இந்த லாரி ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகாட்டு பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது லாரியின் பின் பகுதியில் திடீரென்று தீ ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் மளமளவென தீப்பரவி லாரி முழுவதும் எரிய தொடங்கியது. டிரைவர் பிரபாகரன் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சாலையில் நடுவே லாரியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கி தப்பி ஓடினார்.

    இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் டீசல் டேங்க் அருகே தீ பற்றி பெரிய அளவில் எரிய தொடங்கியது. இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சாலையின் அருகில் மின் ஒயர் இருந்ததால் உடனடியாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதில் லாரி முழுவதும் எரிந்து தீக்கரையானது. மேலும் லாரியில் இருந்த சிமெண்ட் மூட்டைகளும் தீ விபத்தில் எரிந்து நாசமானது.

    சென்னை-நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், நடு ரோட்டில் லாரி எரிந்த காரணத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    லாரி திடீரென்று எப்படி எரிந்தது? காரணம் என்ன? என ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். திண்டிவனம் அடுத்த பட்டணம் அருகே வளைவில் வேகமாக திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் திண்டிவனம் காஞ்சிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் லாரியிலிருந்து டிரைவரை மீட்டனர். லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
    • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 43).

    இவர் தனது மனைவி வெண்ணிலா (40), உறவினர்கள் நடராஜன், ரஞ்சிதா ஆகியோருடன் காரில் வீட்டிலிருந்து தஞ்சை நோக்கி புறப்பட்டார்.

    காரை மேகநாதன் ஒட்டி வந்தார்.

    அந்த கார் தஞ்சை- பட்டுக்கோட்டை புறவழிச் சாலையில் வந்து கொண்டி ருந்தது.

    அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் வெண்ணிலா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேகநாதன், நடராஜன், ரஞ்சிதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த மேகநாதன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பூதலூர் தாலூகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் நேரக்கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி மாணவ - மாணவி களுக்கு இடையூறாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை (8.30 முதல் 9.30) மாலை (3.30 முதல் 5.30) வரை தடுத்திடவும், மணல் லாரியின் மேல் தார் படுதா போட்டு மூடி ச்செல்லவலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நாளை (11.7.23)நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகாஅலுவலகத்தில் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட உதவி செயற்பொறியாளர், ராஜா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ஏட்டு நெடுஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்காந்தி, கலைச்செல்வி, பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மணல் லாரியின் மேல் தார் படுதா போடாமல் வருபவர்கள் மீது உரிய அபராதத்தொகை காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் விதிக்கப்படும்.

    குவாரிகளில் இருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை 9.30 மணிவரையும் மாலை (3.30 முதல் 5.30) தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளி மாணவ -

    மாணவிகளுக்கு இடையூறு இல்லாமலும் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பின்றியும் வேக்கட்டுப்பாட்டுடன் லாரிகளை இயக்கிட அறிவுறுத்தப்படும் முடிவெடுக்க ப்பட்டதை தொடர்ந்து நாளை நடத்தயிருப்பதாக இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.
    • இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு ஒரு லாரி சென்றது. சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.

    அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. மேலும் சிறிது தூரம் தரதர வென காரை இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

    இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கி யதால் லோக நாதனின் உடல் காருக்குள் சிக்கிக் கொண்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் லோகநாதனின் உடல் காரில் இருந்து மீட்கப்பட்டது.

    உயிரிழந்த லோகநாதன், சேலம் இரும்பாலையில் சீனியர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அவரது நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றபோது விபத்துக்கு உள்ளாகி இறந்தது குறிப்பி டத்தக்கது. இதனிடையே இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றும் சிக்கியதா கவும், அதில் வந்த 2 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தில் இறந்த லோகநா தனின் உடலை பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×