என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நெல்லை நான்கு வழிச்சாலையில் அதிகாலை நின்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதல்- மாணவிகள் உள்பட 15 பேர் காயம்
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
ரெயில் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ஒன்று குஜராத் மாநிலத்திற்கு சென்றது.
இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ரெட்டியார்பட்டி அருகே டி.வி.எஸ். நகர் 4 வழிச்சாலையில் சென்ற போது டீசல் இல்லாமல் திடீரென சாலையில் நின்றுவிட்டது.
இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கல்லூரி பஸ்சில் சுற்றுலா சென்றனர்.
அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினர். கல்லூரி பஸ்சை முனியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். கிளீனராக வீரசெல்வம் என்பவர் இருந்தார்.
கல்லூரி பஸ் இன்று அதிகாலை டி.வி.எஸ். நகர் பகுதிக்கு வந்தபோது ஏற்கனவே டீசல் இல்லாமல் நின்ற கனரக லாரியின் பின்னால் வேகமாக சென்று மோதியது.
இதில் டிரைவர் முனியசாமி, கிளீனர் வீரசெல்வம், மாணவிகள் அன்னை தெரசா, ரஞ்சிதா, சசிகலா, பொன்மலர், சாந்தி உள்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறிதளவு காயம் அடைந்த 12 மாணவிகள் குணம் அடைந்து இன்று காலை ஊர் திரும்பினர். இதில் சுமித்ரா, முனியசாமி, வீரசெல்வம் ஆகிய 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்