search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக மர லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பிகளில் மோதி விபத்து
    X

    அதிக பாரம் ஏற்றி வந்த லாரி.

    அதிக மர லோடு ஏற்றி வந்த லாரி மின் கம்பிகளில் மோதி விபத்து

    • கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.
    • வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.

    அப்போது சாலையில் உள்ள மின்சார கம்பிகள் மீது மோதியதில் மின்கம்பிகள் அறுந்து சாலையிலேயே விழுந்தது. அப்போது சாலையில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து காரணமாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, செட்டி சாவடி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    Next Story
    ×