என் மலர்

    நீங்கள் தேடியது "Motor cycle"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலகணேஷ் நெல்லையில் ரெயில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • நேற்று இரவு சுத்தமல்லி விலக்கில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    நெல்லை அருகே சுத்தமல்லி யாதவர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் பாலகணேஷ் (வயது 32). இவர் நெல்லையில் ரெயில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு சுத்தமல்லி விலக்கில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய அவர் சுத்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
    • பேரிகார்டு மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியை சேர்ந்தவர் மெ. சரவணன் (வயது 54 ).

    இவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீரங்கத்தி தஞ்சை நோக்கி புறப்பட்டார் .

    நள்ளிரவில் நாஞ்சிக் கோட்டை ரோடு கருணாவதி ஆர்ச் அருகே வந்தபோது சாலை பணிக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி உறையூரில் பரபரப்பு பா.ம.க.நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிப்புபோலீசில் புகார்
    • சம்பவ இடத்திற்கு வந்து உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

     திருச்சி 

    திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் கதிர் ராஜா. முன்னாள் பாமக மாவட்ட செயலாளரான இவர் திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக உள்ளார். இவரது வண்டியை வீட்டில் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர் .அது மட்டுமின்றி அருகில் உள்ள மற்றொருவரின் வாகனமும் எரிக்கப்பட்டது.இதுகுறித்து கதிர் ராஜா உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்து உறையூர் போலீசார்

    விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
    • லாரி மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது42).

    இவர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது மாரியம்மன் கோயில் அருகே பட்டுக்கோட்டை மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வாகனம் மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக

    பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

    இது குறித்து பட்டுக்கோ ட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 24).

    சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சூர்யா (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யாவை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமல்ராஜ் பிரபு நேற்று மதியம் எப்போதும் வென்றானில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி தாமஸ் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ் பிரபு (வயது 54). இவர் எப்போதும்வென்றான் மின்வாரிய அலுவலகத்தில் லைனிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம் எப்போதும் வென்றனில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அமல்ராஜ் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பூபால ராயபுரம் அருகே உள்ள சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. மீனவர். இவரது மகன் டிக்சன்(வயது 7) அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் இரவில் வீடு திரும்பினர். அவர்கள் தெற்கு கடற்கரை சாலை இனிகோ நகர் பகுதியில் வந்த போது தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ்(21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கி ளில் பின்னால் மோதியது.

    இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த வர்க ளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் செல் லும் வழியி லேயே டிக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆரோக்கிய சாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து ரித்திசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீஸ் காரர் மீது மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனல் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பழனிவேல் (வயது 39).

    இவர் கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார் அப்போது அந்த வழியாக ராமநாதன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஏட்டு பழனிவேல் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக தஞ்சை எஸ் பி ஆசிஷ் ராவத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விபத்தில் இறந்த ஏட்டு பழனிவேலுக்கு திருமணமாகி சத்தியா 32 என்ற மனைவியும், சாய் பிரசாத் 9, பத்ரிநாத் 7 என்ற இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
    • திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள காச வளநாடு புதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அப்பர் (வயது 52 ). சம்பவத்தன்று இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அவர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த சாந்தகுமார் என்பவர் ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை.
    • அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாந்தகுமார் (வயது42). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை சாந்தகுமார் வழக்கம் போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டுள்ளார்.

    ஆடு திருட்டு

    வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த அவரது ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை. அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    உடனே சுதாரித்துக் கொண்ட சாந்தகுமார் ஆறுமுகநேரி சந்தைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு தனது ஆட்டை இரு நபர்கள் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய வேறு ஒருவரிடம் பேசி கொண்டிருப்பதை கண்டார்.

    2 பேர் கைது

    உடனடியாக இதுபற்றி அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆடு திருடிய அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் காயல்பட்டினம் ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக்ராஜா (33), முத்துசாமி (34) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆடு மீட்கப்பட்டது. ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo