search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck collision"

    • முகமதுரிதுவான் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்:

    வடலூர் ஆபத்தாணபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ஹஜ்முகமது மகன் முகமதுரிதுவான் (வயது 15). இவர் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடலூர் ரெயில்வே கேட்டுக்கு முன் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி யதில் பலத்த காயமடைந்த முகமது ரிதுவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த அணுகம்பட்டை சேர்ந்தவர் சிவா (வயது 48). பால் வியாபாரி. இவர் பால் வியாபாரம் செய்துவிட்டு கடலூர் பச்சையாங்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). கூலி தொழிலாளி. இவர் திருவலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். சம்பவத்தன்று பெருமுகை அருகே சர்வீஸ் சாலையில் இரவு 7 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்க கலக்கத்தில் டிரைவர் வாகனம் ஓட்டியதால் விபரீதம்
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

    போளூர்:

    போளூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் செங்கம் நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

    செங்கத்தில் இருந்து கண்டெய்னர் லாரி போளூர் நோக்கி வந்தது. காங்கேயனூர் அருகே வரும்போது தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் லாரி எதிர்பாராத விதமாக எதிரே வந்த பஸ் மீது மோதியது.

    இதில் பஸ் சேதமானது. லாரி சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வர்கள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக 4 பேரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் போலீசார் பஸ்சையும், லாரியும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கே விழுந்தது.
    • உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து முந்திரி தொலும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவில் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியது. இதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கோ விழுந்தது. மேலும், மின்கம்பத்தில் இருந்த கம்பிகள்அறுந்து சாலையில் தொங்கியது. உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சரிசெய்து மின் இணைப்பு வழங்கினர்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ இன்று காலை ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ராஜா சேகரன் என்பவர் ஓட்டி சென்றார்.

    பெட்ரோல் நிரப்பிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத பைக் மீது மோதி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சாலையில் கவிழ்ந்த ஆட்டோவால் ஆம்பூர் -வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து ஆட்டோவை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார்.

    கடலூர்:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார் ஓட்டி வருகிறார். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை :

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மனைவி வளர்மதி (வயது 40), கோவிந்தராஜ் (34), குணசேகரன் (28), அசோக் மனைவி பிரியா (23) ஆகியோர் பச்சூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்.

    நேற்று செங்கல்கள் ஏற்றிக் கொண்டு வெலக்கல்நத்தம் பகுதிக்கு டிராக்டரில் சென்றார். வண்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி ெசன்றார்.

    செங்கலை இறக்கிவிட்டு வீடு திரும்பிய போது சுண்ணாம்புகுட்டை கிராமம் அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டரில் பயணித்த 4 பேரும் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சை க்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.

    • சம்பவம் இடத்திலேயே இறந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை சேர்ந்தவர் லிங்கப்பன் இவரது மகன் சதீஷ் சர்மா (வயது 30).

    இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.

    இதில் தனது திருமணம் ஏற்பாடுகளை செய்வதற்காக சதீஷ்சர்மா கடந்த 15 நாட்கள் முன்பு, விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ் சர்மா தனது பைக்கில் பச்சூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குப்பம் பகுதியில் இருந்து காய்கறிகள் ஏற்றிவந்த மினி லாரி பைக் மீது மோதியது.

    படுகாயமடைந்த அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் இவரது மகன் வெங்கடேஷ் (வயது 31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெப்போலியன் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி பாத்திமா பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஷிணி (33) காரைக்கால் ஒ.என்.சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    இவர்களது சொந்த ஊர் மன்னார்குடி வேலை காரணமாக காரைக்காலில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நெப்போலியன் தனது காரில் நாகை மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். இதனையடுத்து காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மயிலாடுதுறை மாவட்டவத்தை சேர்ந்த மணிவண்ணன் (36) ஓட்டிச் சென்றார்.

    அப்போது காரைக்கால் நிரவி அருகே நெடுஞ்சாலையில் நெப்போலியன் காரில் வந்தபோது எதிரே மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் காருக்குள் சிக்கிகொண்ட நெப்போலியனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு நெப்போலியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்ட அடுத்த வி.சாத்தனுரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் விக்கிவாண்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி லாரி ஷெட் பகுதியை சேர்ந்தவர் கவியரசு என்பவரின் மனைவி வசந்தி (வயது 42).

    இவர் காலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அதிகாலை சாலை நகர் பகுதி அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த லாரி ஒன்று முன்னே சென்ற காரை முன்ந்தி செல்ல முயன்ற போது திடீரென வசந்தி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வசந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

    பின்னர் இதுகுறித்து கவியரசு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரை வாடிப்பட்டி அடுத்த அவாடமருதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×