என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck collision"

    • நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த போலீசார் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வ. உ. சி நகரை சேர்ந்தவர் சரவணன் என்பவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 17) டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஆர்டிஓ அலுவலக சாலையில் இருந்து கெங்கை அம்மன் கோவில் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது‌.இதில் லாரி டயருக்குள் விக்னேஷ் சிக்கினார்.அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆர்.டி.ஓ.அலுவலக ரோடு மற்றும் கெங்கை அம்மன் கோவில் இடையே சாலையை கடக்க சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நர்மதா இவர் வழூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 வயதில் இசை செல்வன் என்ற குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சசிகுமார் நேற்று காலை வேலைக்கு சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு செல்வதற்காக தனது பைக்கில் ஆரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே லாரி சசிகுமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சசிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

    இதையடுத்து தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லோடு ஆட்டோவின் டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது. லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு செல்ல டிரைவர் முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக லாரி வருவதைக் கண்ட டிரைவர் சாலையோரத்திற்கு ஓடினார். லாரி எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. லாரி மோதியதில் லோடு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
    • கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து லாரியில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்றது. திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.

    இதனால் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் சவுக்கு மர கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியது லாரியின் முன் பக்கம் அப்பளம்போல் நொருங்கியது. 2 லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் முருகன் பலத்த படுகாயம் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் லாரியின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவர் முருகனை 1 மணி நேரம் போராடி மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரிகளை போலீசார் அப்புறப்ப டுத்தினர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அந்த இடம் பரப்பாக இருந்தது.

    • பாலத்தை கடக்க முயன்ற போது விபரீதம்
    • போக்குவரத்து பாதிப்பு

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு பெயிண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.

    இந்த லாரி ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் அக்ராவரம் ரெயில்வே தரைப் பாலத்தை கடக்க முயன்றது.

    அப்போது கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ரெயில்வே துறையால் பாலத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது வேகமாக மோதியது.

    இதில் தரையில் புதைத்து வைக்கப்பட் டிருந்த அடிப்பகுதி பெயர்ந்து வெளியே வந்தது. லாரியும் தடுப்பு கம்பியில் சிக்கிக் கொண்டது. டிரைவர் லாரியை பின்னால் நகர்த்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து புதுப்பாளையம் நோக்கி மீராஷா (வயது 50) என்பவர் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கம்மியம்பேட்டை சாலைக்கு செல்வதற்காக டிப்பர் லாரி ஒன்று திடீரென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மீராஷா தூக்கி வீசப்பட்டார். ஆனால் மோட்டார் சைக்கிள் முழுவதும் லாரிக்கு அடியில் சிக்கி சேதம் அடைந்தது. அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியதால் டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தினார்‌. இதனை தொடர்ந்து காயம் அடைந்த மீராஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.

    • சாலையில் நடந்து சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கூட்ரோடு மேலதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 68). இவர், அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
    • உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை திட்டக்குடியைச் சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (வயது 47) ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கு வராமல் எலவனாசூர்கோட்டை ஆசனூர் வழியாக சென்றது. அப்போது ஆசனூர் சிப்காட் அருகே ஒரு வழிப்பாதையில் சென்றது. அப்போது எதிரில் வந்த லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சின் கண்டக்டர் தேவேந்திரன் (54), திட்டக்குடியைச் சேர்ந்த பயணிகள் இந்திராகாந்தி (58), நீலாவதி (50), மோகன் (55), பெரம்பலூர் ராஜேந்திரன் (55), பெங்களூரு சந்துரு (25), லாரி கிளினர் அஜித் (25) ஆகியோர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வழிப்பாதையில் அரசு பஸ் சென்றதால் இந்த விபத்து நடந்தது. இது குறித்து எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். இவரும் காட்டுசெல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 42). இவர்து மகள்கள் ஜெயஸ்ரீ (16) பவித்ரா, (14) இவர்கள் இருவரும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களை பள்ளிக்கு தினமும் மொபட்டில் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக மொபட்டில் மகள்களை அமர வைத்து அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×