search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் மீது லாரி மோதி தந்தை-மகள்கள் படுகாயம்
    X

    மொபட் மீது லாரி மோதி தந்தை-மகள்கள் படுகாயம்

    • பள்ளிக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 42). இவர்து மகள்கள் ஜெயஸ்ரீ (16) பவித்ரா, (14) இவர்கள் இருவரும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களை பள்ளிக்கு தினமும் மொபட்டில் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக மொபட்டில் மகள்களை அமர வைத்து அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×