search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரியில் லாரி மோதி தொழிலாளி சாவு
    X

    சத்துவாச்சாரியில் லாரி மோதி தொழிலாளி சாவு

    • நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த போலீசார் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வ. உ. சி நகரை சேர்ந்தவர் சரவணன் என்பவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 17) டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஆர்டிஓ அலுவலக சாலையில் இருந்து கெங்கை அம்மன் கோவில் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது‌.இதில் லாரி டயருக்குள் விக்னேஷ் சிக்கினார்.அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆர்.டி.ஓ.அலுவலக ரோடு மற்றும் கெங்கை அம்மன் கோவில் இடையே சாலையை கடக்க சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சாலையை கடக்க சுரங்க நடை பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×