search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டகுடியில் மனைவி கண் முன்பு சாலை விபத்தில் கணவர் பலி
    X

    திட்டகுடியில் மனைவி கண் முன்பு சாலை விபத்தில் கணவர் பலி

    • அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
    • உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×