search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லோடு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து
    X

    லோடு ஆட்டோ மீது லாரி மோதி விபத்து

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    வேலூர் அடுத்த பெருமுகை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லோடு ஆட்டோவின் டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது. லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு செல்ல டிரைவர் முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக லாரி வருவதைக் கண்ட டிரைவர் சாலையோரத்திற்கு ஓடினார். லாரி எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதியது. லாரி மோதியதில் லோடு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லோடு ஆட்டோவை சாலையோரம் கொண்டு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×