என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு"

    • சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில் பின்னர் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு நேற்றிரவு வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சாரல் மழையாக இன்று காலையும் பெய்தது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் நேற்றிரவு முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விடிய, விடிய பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அவதி அடைந்தனர்.

    இதே போல டேனீஸ்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 26.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9, டேனீஸ்பேட்டை 25.2 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 61.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கொல்லிமலை செம்மேடு, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மங்களபுரம்-20.20, புதுச்சத்திரம்-9, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-2.20, கொல்லிமலை செம்மேடு-17 என மாவட்டம் முழுவதும் 80.40 மி.மீட்டர் மழை பெய்தது.

    • தலைவாசலை அடுத்த நத்தக்கரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் கனமழை கொட்டியது.

    குறிப்பாக தலைவாசலை அடுத்த நத்தக்கரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    இதே போல வீரகனூர், ஏற்காடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை தூறலுடன் நின்று விட்டது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    • நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது.
    • காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும்.

    சேலம்:

    தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இங்கு 5 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக அராபிகா வகை காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது. காபி செடிகளில் காய்ப்பு பிடித்துள்ளது. அவ்வாறு காய்த்துள்ள செடிகளை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த காபி விவசாயிகள் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவேரிபீக், கொட்டச்சேடு, தலைச்சோலை உள்பட பல கிராமங்களில் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது. காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை அறுவடை செய்யப்படும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்ப்பு பிடித்துள்ள காபி கொட்டைகளில் புழு, பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியும், அவ்வப்போது பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • ஏற்காட்டில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. பின்னர் இரவு முழுவதும் சாரல் மழையாக பெய்தது . தொடர்ந்து ஏற்காட்டில் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    இதே போல வாழப்பாடி, ஏத்தாப்பூர் , ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 3.2, வாழப்பாடி 16, ஆனைமடுவு 7, ஆத்தூர் 9, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 5, ஏத்தாப்பூர் 14, கரியகோவில் 4, வீரகனூர் 2, நத்தக்கரை 7, சஙககிரி 3, எடப்பாடி 5.4, ஓமலூர் 10.5, டேனீஸ்பேட்டை 18 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 129.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
    • ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர்.

    வேலூர்:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    இரவு மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கிருந்த மர்ம நபர் அவசர உதவி என் 100 மற்றும் 108-க்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்த போகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்தார்.

    இதனால் பதற்றம் அடைந்த போலீசார் இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

    மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.

    உஷாரான ரெயில்வே போலீசார் இது குறித்து ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

    அதற்குள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்ட்டர் பத்ம ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போஸ்ட் கமாண்டன்ட் அழகர்சாமி மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர். அதிகளவில் போலீசார் வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ரெயிலை கடத்த போவதாக மிரட்டிய வாலிபர் அப்பாவி போல அமர்ந்திருந்தார்.

    செல்போன் மூலம் அவரை மடக்கி பிடித்த போலீசார் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் மிரட்டல் விடுத்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த சபரீசன் (வயது 25) என தெரியவந்தது.

    நான் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்தேன். தற்போது வேலை தேடி வருகிறேன்.

    சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள மொரப்பூர் ரெயில் நிலையம் வந்தேன். வேலை இல்லாத விரக்தியில் ரெயிலை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தேன் என சபரீசன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் சபரீசனை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சேலம் ரெயில்வே போலீசார் சபரீசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.

    போலீசாரை அலறவிட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

    இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கோடை விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இந்த கோடை விழாவின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் ஏற்காடு கலையரங்கில் நடக்கிறது.

    தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து அவர்கள் வேளாண்மை துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சித்துறை, பட்டுவளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்.

    இந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, மலையரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் 1½ லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக வன விலங்குகளை பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யானை, காட்டு மாடு, குதிரை, முயல், முதலை, குரங்கு உள்பட வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்ட மலர் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், பக்கோடா பாயிண்ட், லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த கோடை விழாவையொட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி, கால்பந்து, கிரிக்கெட் போட்டிகள், கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    கோடை விழாவையொட்டி சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஏற்காடு மலைப்பாதை இன்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. அதாவது ஏற்காட்டுக்கு செல்லும் போது வாகனங்கள் கோரிமேடு-அடிவாரம் வழியாகவும், அங்கிருந்து கீழே இறங்கும் போது கொட்டச்சேடு-குப்பனூர் வழியாகவும் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

    • கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை (23-ந் தேதி) தொடங்கி 29-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியும், ஏற்காடு கலையரங்கத்தில் குழந்தைகளுக்கான இளம் தளிர் நடைபோட்டி, அடுப்பில்லா சமையல், நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், தவளும் போட்டிகளும் நடக்கிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    25-ந் தேதி திறந்தவெளி அரங்கத்தில் நாய்கள் கண்காட்சியும், மிமிக்கிரி, செமி கிளாசிக் நடனம், கோலாட்டம், பம்பை இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், படகு இல்லத்தில் படகுப்போட்டியும் நடக்கிறது.

    27-ந் தேதி காலை 10 மணிக்கு ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கதக் மற்றும் குச்சிபுடி நடனமும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், 29-ந் தேதி கலையரங்கத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலம் மூலம் பொதுமக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு இயக்கப்படும் 12 பஸ்களுடன் கூடுதலாக 32 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கூடுதலாக 2 உள்வட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

    • வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது. அதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய சாரல் மழை இன்று காலையும் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டியது.

    இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையின் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

    இதே போல சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • சேலத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது.
    • இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரி தேர்வு வருகிற 13-ந் தேதி அன்று ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சேலம் மாவட்டத்தை குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இந்த மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
    • சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வளர்க்கப்படும் பூச்செடிகள் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அங்குள்ள சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

    இந்த பூங்காக்களில் 650-க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டபுள் டிலைட், மார்கோ போலோ, மேஜிக் லேண்டர், பேமிலி, மூன் ஸ்டோன், சம்மர் ஸ்நோ, ரெட் பிரான், சம்மர் டைம், பர்புல் மூன், மில்கி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண்டைன், புளோரி போன்ற ரகங்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதழ்கள் விரிந்து பூத்து குலுங்குகிறது.

    அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா போன்ற இடங்களில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    இனிவரும் காலங்களில், சூழல் பூங்கா மற்றும் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளை வருகை அதிகமாக இருக்கும் என்பதால், ரோஜா தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளது.

    • கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
    • ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இதேபோல், பள்ளி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    நடப்பு ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதையொட்டி, ஏற்காட்டு சுற்றுலா தலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுகிறது.

    எனவே இந்த இதமான சூழலை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் இங்குள்ள பூங்காக்களிலும் வண்ணமயமான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் வகைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றனர்.

    • தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது.
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம் உள்பட பல மாவட்டங்களில், 103 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகரிப்பு மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் சொகுசு விடுதி, ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து ரசிக்கின்றனர். ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்ததால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×