search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமன்"

    இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருப்பதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது.

    சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
    1. வடைமாலை பலன்:

    சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    2. நல்லெண்ணை அபிஷேக பலன்:

    இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.

    3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:

    மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.

    4. சீயக்காய் அபிஷேக பலன்:

    சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.

    5. பால் அபிஷேக பலன்:

    வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.

    6. தயிர் அபிஷேக பலன்:

    வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.

    7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:

    பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.

    8. சந்தனம் அபிஷேக பலன்:

    மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.

    9. ஸ்வர்ண அபிஷேக பலன்:

    பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
    வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.
    அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும். வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாத்தி வழிபடலாம்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.
    ×