என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
11 அடி உயர பக்த ஆஞ்சநேயர் சிலை
Byமாலை மலர்2 Jun 2022 3:53 AM GMT (Updated: 2 Jun 2022 3:53 AM GMT)
இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருப்பதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது.
சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது.
சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X