search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navagraha dosha"

    கோட்டை எனும் மலைக்கு மேல், திறந்த வெளியில் கம்பீரமாக நின்றபடி அருள்கிறார் ஆஞ்சநேயர். வானளாவிய உயரத்தோடு, மேற்கூரையின்றி இந்த அனுமன் அருள் புரிந்து வருகிறார்.
    புராணங்களில் நாமகிரி என்று குறிப்பிடப்படும் புண்ணிய நகரம், நாமக்கல். இந்த நகரின் மத்தியில் ஒரே கல்லால் ஆன குன்று நடுநாயகமாக இருக்கிறது. நகரத்தை பேட்டை, கோட்டை என்று இரு பிரிவுகளாக பிரிக்கிறது இந்தக் குன்று. இந்த நாமக்கல் நகரில் இருக்கும் சிறப்புமிகு தெய்வங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    இந்த நகரில் வீற்றிருக்கும் நாமகிரி அம்மனின் மகிமையும், குடவரைக் கோவில்களில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளின் அழகும், கார்கோடசாமியாக அருள்புரியும் ரங்கநாதர் திருமேனியும், வானளாவ உயர்ந்து நிற்கும் விஸ்வரூப ஆஞ்சநேயரின் கம்பீரமும், நகரின் மையத்தில் அமைந்துள்ள சாளகிராமக் குன்றின் பெருமையும் அளவிடற்கரியது.

    கோட்டை எனும் மலைக்கு மேல், திறந்த வெளியில் கம்பீரமாக நின்றபடி அருள்கிறார் ஆஞ்சநேயர். வானளாவிய உயரத்தோடு, மேற்கூரையின்றி இந்த அனுமன் அருள் புரிந்து வருகிறார்.

    நரசிம்மர் ஆலயத்தின் வெளிப்புறம், கிழக்குப் பார்த்த நிலையில் மிகவும் சக்தி வாய்ந்த நாமகிரித் தாயாரின் சன்னிதி உள்ளது. மலைக் குகையில் குடவரைக் கோவிலில் ரங்கநாதர், கார்கோடகன் எனும் பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்ட பெருமாளாக காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    நரசிம்மர், ரங்கநாதர், ஆஞ்சநேயர் என்று இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கும் பல சிறப்புகள் இருந்தாலும், நாமகிரி அம்மனின் பெருமை அளவிட முடியாதது. காரணம், இந்த அன்னை கமலாலய புஷ்கரணியில் அமர்ந்து நரசிம்மரை நினைத்து கடும் தவம் செய்து, பல சக்திகளைப் பெற்றதாக வரலாறு சொல்கிறது. எனவே முறைப்படி அவளைப் பணிந்து வணங்கும் பக்தர்களுக்கு, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    நாகர்களின் அரசனான கார்கோடகன் என்னும் நாகம், தினமும் இங்குள்ள கமலாலயத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து ரங்கநாதருக்கு பூஜை செய்வதாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சான்றாக மலைப் பாறையில் குளத்தில் இருந்து கோவில் வரை பாம்பு ஊர்ந்து சென்ற தடங்கள் காணப்படுகின்றன.

    இங்கு சிறிய திருவடி என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வடை மாலை சாத்துதல், நல்லெண்ணெய் அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் , சீயக்காய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம், பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், சொர்ண அபிஷேகத்துடன் வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், முத்தங்கி அலங்காரம் போன்றவை செய்யப்படுகின்றன.

    நரசிம்ம மூர்த்தியின் ஆணைப்படி, நேபாள தேசத்தில் இருந்து எடுத்து வந்த சாளகிராமத்தை இங்கு ஸ்தாபித்து, நாமகிரி என்னும் பெயரை உலகறியச் செய்த பெருமை ஆஞ்சநேயரையேச் சாரும். இதற்கு சான்றாகவே நரசிம்மரை கைகூப்பி தொழுதபடி, விஸ்வரூப தரிசனம் தருகிறார் அனுமன். இவரது திருமேனி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. எனவேதான் மேல்கூரை விமானம் கட்டப்படவில்லை.

    இங்குள்ள தீர்த்தக் குளங்கள் தெய்வீக அம்சம் பொருந்தியவை. பலராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு நீர்நிலை உருவாக்கி வழிபட்டிருக்கிறார். அந்த தீர்த்தம் பலராம தீர்த்தமாக இருக்கிறது. அனந்தன் எனும் வேதியர் ஒரு தீர்த்தம் உருவாக்கி தாயாரை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளார். அந்த தீர்த்தம் அனந்த தீர்த்தம் எனப்படுகிறது. தாயார் உருவாக்கிய மகிமை மிகு தீர்த்தம் கமலாலய தீர்த்தம் ஆகும். தேவர்கள் இத்தலத்து தெய்வங்களை வழிபட உருவாக்கிய தீர்த்தம் தேவதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அசுரனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய நரசிம்மருக்கு, பக்தர் ஒருவர் உருவாக்கி வழிபட்ட தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது.
    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
    கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நவக்கிரகங்களை பற்றியும், அவற்றின் தோஷங்கள் விலகுவதற்கான எளிய பரிகாரங்களையும் இங்கே பார்க்கலாம்.

    சூரியன்: காசியப முனிவரின் மகன். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை நட்பு கிரகங்கள். புதன் சமமான கிரகம், சுக்ரன், சனி, ராகு-கேது ஆகியவை பகை கிரகமாகும். அதி தேவதை அக்னி, உச்ச ராசி மேஷம், நீச்ச ராசி துலாம். சூரியனுக்கான நட்சத்திரங்கள் உத்திரம், கிருத்திகை, உத்திராடம். தசாபுத்தி காலம் 6 ஆண்டுகள். நைவேத்தியம் சர்க்கரை பொங்கல்.

    சூரியன் லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்று நின்றால், அதிக அளவில் சுப பலனைத் தருவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் உயர்வான இடத்தில் இருந்தால், அந்த நபர் ஆரோக்கியம், ஐஸ்வரியம், சந்தான பாக்கியம், நீண்ட ஆயுள், அரசு வேலைவாய்ப்பு, அரசியல் யோகம் பெறுவார். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, உஷ்ண ரோகம், எலும்பு பிரச்சினை வரலாம்.

    சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க, ஞாயிற்றுக்கிழமையில் கோதுமை, செம்பு பாத்திரங்களை தானம் செய்யலாம். பார்வை இழந்தவர்களுக்கு உணவளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கோதுமை மீது 10 தீபம் ஏற்றி வழிபட சூரியனின் அருளைப் பெறலாம்.

    சந்திரன் : பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. சூரியன், புதன் இருவரும் சந்திரனின் நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு, சுக்ரன் ஆகியவை சமமான கிரகங்கள். ராகுவும் கேதுவும் பகை கிரகங்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை. சந்திரனின் தசா புத்தி காலம்- 10 ஆண்டுகள். இவரது அதி தேவதை நீர் ஆகும். உச்ச ராசி ரிஷபம், நீச்ச ராசி விருச்சிகம்.

    சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 3, 4, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் நின்று உச்சம் பெற்றால், நல்ல சுப பலன்களை அதிக அளவில் கொடுப்பார். தாய் பாசம், குடும்ப பாசம், விவசாய விருத்தி, கடல் வணிகம், கல்வி ஸ்தாபனம், பால் மற்றும் உணவு வணிகள் சிறப்பான லாபத்தை அளிக்கும். அதே நேரம் 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் தேய்பிறை சந்திரனாக நின்று நீச்சம் பெற்றால், ரத்த சோகை, நீர் சம்பந்தமான வியாதி, தொண்டை பிரச்சினை, விரும்பிய வாழ்க்கை அமைய கால தாமதம் ஏற்படும்.

    சந்திரனின் தோஷம் நீங்க, திங்கட்கிழமை அம்பாள் சன்னிதி முன்பு நெல் மீது 11 தீபம் ஏற்றுங்கள். திங்கட்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது, பவுர்ணமி விரதம் இருப்பது நல்லது. பச்சரிசியை தானம் தரலாம்.

    செவ்வாய்: இவர் வீரபத்திரர் அம்சம். சுப்பிரமணியரை தெய்வமாக கொண்ட இவர், பாவ பலனை கொடுக்கும் குரூரர். இவருக்கு சூரியன், சந்திரன், குரு நட்பு கிரகங்களாகும். சுக்ரனும், சனியும் சமமான கிரகங்கள். புதன், ராகு-கேது பகை கிரகங்கள். செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இவரது தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். இவருக்கு உச்ச ராசி மகரம், நீச்ச ராசி கடகம் ஆகும்.

    செவ்வாய் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில், 3, 6, 11 ஆகிய இடங்களில் இருப்பது 100 சதவீத சுப பலன்களைத் தரும். செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தால் தலைமை பதவி, ரியல் எஸ்டேட், சகோதர உதவி, எதிரியை வெல்லும் துணிச்சல் வந்து சேரும். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தால், சிறைவாசம், உடலில் ஆறாத காயம், திருமண தடை, பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருப்பது, பித்த நோய் உண்டாகக்கூடும். செவ்வாய்க்கிழமைகளில் வெண் பொங்கல் நைவேத்தியமாக படைத்து வைத்து, செண்பக மலர் தூவி 108 முறை செவ்வாய் கிரக துதியை படியுங்கள்.

    புதன்: இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவருக்கு சூரியனும் சுக்ரனும் நட்பு கிரகங்கள், செவ்வாய், குரு, சனி, ராகு-கேது சமமான கிரகங்கள், சந்திரன் மட்டும் பகை கிரகமாகும். புதன் கிரகத்தின் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவையாகும். புதனின் தசாபுத்தி காலம் 17 ஆண்டு. புதனின் அதி தேவதை திருமால்.

    புதன் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் 100 சதவீதம் சிறப்பான பலனைப் பெறுவது உறுதி. புதன் நல்ல இடத்தில் இருந்தால் கல்வியில் வெற்றியும், இசை, கவிதை, ஞானம் ஏற்படும். பூர்வீக சொத்து சேரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். நீதி துறையிலும், கணிதத் துறையிலும் மேதையாகும் யோகமுண்டு. புதன் நீச்சம் பெற்றிருந்தால், மந்த புத்தி, குடும்ப பிரச்சினை, தொழில் தடை, மனக்குழப்பம், தோல் வியாதி வந்து சேரும். புதன் கிரக தோஷங்கள் அகல, மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். புதன்கிழமை புதன் ஓரையில் புதன் காயத்ரி மந்திரம் சொல்லி வருவது நல்லது. மதுரை மீனாட்சி வழிபாடு நன்மை தரும். புதன்கிழமை அசைவத்தை தவிர்த்து, துளசி பொடி சாதம் சாப்பிடவும்.

    குரு: இவர். பூரண சுப கிரகம் என்பதால், இவரது பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சூரியன், சந்திரன், செவ்வாய் இவருக்கு நட்பு கிரகங்கள். சனி, ராகு-கேது சமமான கிரகங்கள். புதனும் சுக்ரனும் பகை கிரகங்கள். குருவின் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவரது தசாபுத்தி காலம் 16 ஆண்டுகள் ஆகும். குருவின் அதி தேவதை பிரம்மன், உச்ச ராசி கடகம், நீச்ச ராசி மகரம்.

    குரு, லக்னத்தில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடத்தில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். அவரே உச்சம் பெற்றிருந்தால் நல்ல ஞானம், படிப்பில் உயர்வு, அரசுப் பணி, பணப்புழக்கம், நல்ல மண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், நிரந்தர பணி, உடல் ஆரோக்கியம், ஜோதிட ஞானம், லட்சுமி கடாச்சம் ஏற்படும். அதே வேளையில் நீச்சம் பெற்றிருந்தால் மறதி, பக்தி குறைவு, மூளைக்காய்ச்சல், புத்திர பாக்கியம் தடை, உடல் சோர்வு, பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை தோன்றும். வீட்டில் பொன் பொருள் தங்காது.

    குருவின் தோஷம் விலக, வியாழக்கிழமை அசைவத்தை தவிர்த்து, 16 வியாழக்கிழமை இரவு கொண்டை கடலையை மஞ்சள் துணியில் முடிந்து, தலையணை அடியில் வைத்து படுத்து, 17-வது வாரம் ஓடும் நீரில் விடவேண்டும்.

    சுக்ரன்: அசுர குருவான இவரும் சுப கிரகம் தான். புதன், சனி, ராகு-கேது ஆகியவை இவருக்கு நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு போன்றவை சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன் இருவரும் பகை கிரகங்கள். சுக்ரனின் நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகும். சுக்ரனின் தசாபுத்தி காலம் 20 வருடங்கள். இவரது அதிதேவதை லட்சுமி, உச்ச ராசி மீனம், நீச்ச ராசி கன்னி.

    சுக்ரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 2, 3, 4, 5, 8, 9, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன் களைத் தருவார். நீச்சம் பெற்றிருந்தால் உயிர் அணுக்கள் குறைபாடு, திருமண கால தாமதம், அவப்பெயர், சிறை தண்டனை, உறவில் பிரிவு, தொழில் நஷ்டம் உண்டாகும்.

    சுக்ரனின் தோஷம் விலக, வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஓரையில் ராஜராஜேஸ்வரியை வழிபடுவதோடு விரதம் இருப்பது சிறந்தது. வெள்ளை நிற ஆடை, மொச்சை தானம் வழங்கலாம்.

    சனி: இவர் சூரியனுடைய குமாரர். இவருக்கு புதன், சுக்ரன், ராகு-கேது ஆகியோர் நட்பு கிரகங்கள். குரு சமமான கிரகம், சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் பகை கிரகங்கள். சனியின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. சனியின் தசா புத்தி காலம் 19 ஆண்டுகள். சனியின் அதி தேவதை எமதர்மன், உச்ச ராசி துலாம், நீச்ச ராசி மேஷம்.

    சனி கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து, 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் தீர்க்க ஆயுள், விவசாயம், இரும்பு, எண்ணெய் தொழிலில் யோகம், கல்வி ஞானம், பொன், பொருள் சேர்க்கை, வாகன யோகம், வெளிநாட்டு யோகம், தலைமைப் பதவி, சுயதொழில் யோகம் தருவார். அதுவே நீச்சம் பெற்றிருந்தால், தீராத பிணி, நரம்பு சோர்வு, மனைவி, குழந்தை வழியில் அவப்பெயர், தொழிலில் பின்னடைவு, வழக்குகள் உண்டாகும்.

    சனியின் தோஷம் விலக, அண்டங் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைக்க வேண்டும். பாதாள சனியையும், குடும்பத்துடன் உள்ள சனியையும் ஒரே நாளில் வழிபட வேண்டும்.

    ராகு: இவர் அசுரத் தலையும், நாக உடலும் கொண்டவர். மிகுந்த வீரம் உடையவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதன், குரு சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் பகை கிரகங்கள். ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவையாகும். இவரது தசாபுத்தி காலம் 18 ஆண்டுகள். அதிதேவதை காளி மற்றும் துர்க்கை, இவரது உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம் ஆகும்.

    ராகு ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மறைமுக வருமானம், குடும்ப ஒன்றுமை, வெளிநாட்டு பயணம், நல்ல மண வாழ்க்கை, பூர்வீச சொத்து, அரசியல் ராஜ்ஜிய சுகம் போன்றவை கிடைக்கும். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் பாம்பு தீண்டுதல், சிறைவாசம், பொருள் களவு போகுதல், குடிப்பழக்கம், தோல் சார்ந்த நோய்கள், மனக்குழப்பம் தோன்றும்.

    ராகு தோஷம் விலக, இரண்டு சர்ப்பம் சேர்ந்து உள்ள கருங்கல் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம்.

    கேது: இவர் நாகத் தலையும், அசுர உடலும் கொண்டவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதனும், குருவும் சமமான கிரகங்கள். சூரியன், செவ்வாய், சந்திரன் பகை கிரகங்கள். கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகும். கேதுவின் தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன். உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம்.

    கேது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஞான மோட்சம் ஏற்படும். ஆன்மிகம், ஆலய சேவை, மருத்துவ சேவை, பொன் பொருள், பூமி, வாகன யோகம் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியுறும். ஆசிரம சேவை செய்வீர்கள். நீச்சம் பெற்றால் எதிரியால் பயம், தீய பழக்கம் ஏற்படும். கலைத் துறையில் பின்னடைவு, குடும்ப பிரிவு உண்டாகும்.

    கேது தோஷம் விலக, செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் கதம்ப சாதம் வைத்தும், கதம்ப பூ வைத்தும், கேது கவசம் படிப்பது நல்லது. மேலும் குதிரைக்கு எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்வதன் மூலம் நினைத்த எல்லா சுபகாரியம் தடையின்றி நடக்கும்.

    நாடி ஜோதிடர் பாஸ்கர்
    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
    தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.

    இந்த கோவில் இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.

    இது ஓரு குடைவரை கோயில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணை காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.

    இங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள் மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயமாகும். 
    எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் பரிகாரம் ஒன்று உண்டு. அதன்படி நவக்கிரகங்களில் எந்தெந்த கிரக தோஷத்திற்கு எப்படிப்பட்ட எளிய பரிகாரத்தைச் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
    நவக்கிரக சுழற்சியைக் கொண்டே, ஒரு மனிதனின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட நூல்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. அதனால் தான் நவக்கிரக வழிபாடு என்பது நம்மிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் பரிகாரம் ஒன்று உண்டு. அதனை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர். சிலர் விலங்குகளுக்கு உண்ணும் பொருட்களை வழங்குவதால் சில தோஷங்கள் விலகும் என்று சொல்லி வைத்துள்ளனர். அதன்படி நவக்கிரகங்களில் எந்தெந்த கிரக தோஷத்திற்கு எப்படிப்பட்ட எளிய பரிகாரத்தைச் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

    ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானால் கிரக பாதிப்பு ஏற்பட்டு, தோஷம் உண்டாகிறது என்றால், அந்த ஜாதகர் குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த தோஷம் நிவர்த்தியாகும்.

    குரு பகவானால் ஒரு சிலருக்கு பிரச்சினைகளும், தோஷங்களும் உருவாகலாம். இதனால் அந்த நபர்களுக்கு திருமணம் தள்ளிப்போகும். கல்வியும் பாதிக்கப்படலாம். அதை நிவர்த்தி செய்வதற்கு, பசு அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

    சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தால், அதைச் சரி செய்ய நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்க வேண்டும். அதன்படி கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடலாம்.

    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடும். அதுபோன்ற நேரத்தில் வெள்ளாடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் கெட்ட வினைகள் குறையும். மேலும், குரங்குகளுக்கும் தானியங்கள், பழ வகைகளை வழங்கலாம்.



    ஒருவரது ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில், அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். அதே நேரம் புதன் திசை பிரச்சினையாக உள்ளவர்கள், கிளி களுக்கு உணவு வைப்பது சிறந்தது. இல்லாவிட்டால் தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

    சுக்ரன் உச்சம் பெற்றால் அந்த நபரின் வாழ்க்கையே செல்வச் செழிப்பாக மாறும் வாய்ப்பு உண்டு. அதே நேரம் சுக்ர தோஷம் ஏற்பட்டால், அதன் விளைவும் கடுமையாக இருக்கும். சுக்ரனால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்க புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக வைக்கலாம்.

    நம்மில் அதிகம் பேர் அச்சப்படுவது சனியால் ஏற்படும் தோஷத்திற்குத் தான். சனி திசை சிறப்பாக இல்லாத காலகட்டத்தில், சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் போன்றவை.

    ராகு - கேதுவால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், நாய்களுக்கு உணவளிப்பது, எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். 
    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு வழிபாடு செய்வது உகந்தது.
    சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 வரிசையில் வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும்.

    நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவக்கிரக தோஷம் நீங்க சிவன் கோவில்களில் மட்டுமே நவக்கிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும், நவக்கிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால், நவக்கிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்றைய தினங்களில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 
    ×