search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanuman chalisa"

    வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளசிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான். வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் இதை பாராயணம் செய்யலாம். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.

    ஸ்ரீஅனுமன் சாலீஸா

    புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|

    பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

    ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|

    ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

    ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்

    பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

    ராமதூத அதுலித பலதாமா|

    அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

    மஹாவீர் விக்ரம பஜரங்கீ|

    குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

    கஞ்சன பரண விராஜ ஸுவேசா|

    கானன குண்டல குஞ்சித கேசா||

    ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|

    காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

    சங்கர ஸுவன கேசரி நந்தன|

    தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

    வித்யாவான் குணீ அதி சாதுர|

    ராம காஜ கரிபே கோ ஆதுர||

    ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|

    ராம லஷண ஸீதா மன பஸியா||

    ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|

    விகட ரூப தரி லங்க ஜராவா||

    பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |

    ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

    லாய ஸஜீவந லகந ஜியாயே |

    ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

    ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |

    தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

    ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |

    அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

    ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |

    நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

    ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |

    கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

    தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |

    ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

    தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |

    லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

    ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |

    லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

    ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |

    ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

    துர்கம காஜ ஜகத கே ஜேதே |

    ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

    ராம துஆரே தும ரகவாரே |

    ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

    ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |

    தும ரச்சக காஹூ கோ டர நா ||

    ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |

    தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

    பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |

    மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

    நாஸை ரோக ஹரை ஸப பீரா |

    ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

    ஸங்கட தே ஹநுமாந சுடாவை |

    மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

    ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |

    திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

    ஔர மநோரத ஜோ கோஇ லாவை |

    ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

    சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |

    ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

    ஸாது ஸந்த கே தும ரகவாரே |

    அஸுர நிகந்தந ராம துலாரே ||

    அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |

    அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

    ராம ரஸாயந தும்ஹரே பாஸா |

    ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

    தும்ஹரே பஜந ராம கோ பாவை |

    ஜநம ஜநம கே துக பிஸராவை ||

    அந்த கால ரகுபர புர ஜாஈ |

    ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

    ஔர தேவதா சித்த ந தர ஈ |

    ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

    ஸங்கட கடை மிடை ஸப பீரா |

    ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

    ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |

    க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

    ஜோ ஸத பார பாட கர கோஈ |

    சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

    ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |

    ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

    துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |

    கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

    பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |

    ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||
    ஸ்ரீ அனுமன் சாலிஸாவை தினமும் பாராயணம் செய்த துளசிதாசருக்கு அனுமன் செய்த அற்புதத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே... எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்" என்றார்.

    நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத்தார்.

    ‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழிபட்டார்.

    இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.

    படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.

    அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது.

    துளசிதாசரை விடுவித்தால் பிரச்சனை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர்.

    அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.

    துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’.

    இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்
    ×