search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjaneya"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 22-ந்தேதி அயோத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
    • அயோத்தி ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சாதனைப் படைத்தவர்கள், துறவிகள், முக்கிய பிரபலங்கள் என அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்கிறார்கள். சிலர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

    கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையாவும் முறைப்படியாக அழைப்பிதழ் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவர் பங்கேற்பாரா? என்றும் தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் கர்நாடக மந்திரி ஆஞ்சநேயா, சித்தராமையா எங்களுடைய ராமர் எனக் கூறியுள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

    இது தொடர்பாக கர்நாடக மாநில மந்திரி ஆஞ்சநேயா கூறுகையில் "அவர் (சித்தராமையா) எங்களுடைய ராமர். ஏன் அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள அயோத்தி செல்ல வேண்டும். அவரது சொந்த கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு செய்வார்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அவர் ஏன் செல்ல வேண்டும். பா.ஜனதாவின் ராமர்தான் அங்கே நிறுவப்படுகிறது. அவர்கள் பா.ஜனதாவினருக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதேபோல் பஜனை பாடுபவர்களுக்கும் அனுப்பியுள்ளனர். ஆகவே, அவர்கள் அதை செய்யட்டும். எங்களுடைய ராமர் எல்லா இடத்திலும் இருக்கிறார். அவர் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார்."

    இவ்வாறு கர்நாடக மாநில மந்திரி ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார்.

    மேலும், மதம் மற்றும் சமூக அடிப்படையில் பா.ஜனதா மக்களை பிரிக்கிறது. நாடு எதிர்கொண்டு வரும் சமூக பிரச்சினைகளுக்கு பா.ஜனதா முக்கியத்துவம் கொடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுபோன்ற அறிவு இல்லாதவர்கள், இந்து எதிர்ப்பு தலைவர்களை நாம் மந்திரிகளாக பெற்றுள்ளது நம்முடைய துரதிருஷ்டம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பாட்டீல் யாத்னால் பதில் கொடுத்துள்ளார்.

    • பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
    • குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது.

    நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மரிடத்தில் நம்பிக்கையோடு கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவர் உடனுக்குடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. சில தலங்கள் மிகவும் விசேஷமானவை. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது.

    தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூர் இருந்தது. தற்போதைய காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.

    ஒருசமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, பெரியோர்களிடம் அதற்கான வழியை கேட்டான். அவர்கள் தவமியற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள். ஒருநாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது 'இந்த குன்றே ஹரி. இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்' என்ற அசரீரி வாக்கு எழ, அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்ம மூர்த்தியை நினைத்து தவமியற்றினான்.

    ஒரு சித்ரா பவுர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் 'தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும்' என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலைக்குன்றில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நரசிம்ம மூர்த்தியை தன் தவத்தால் தரிசித்த அந்த இளைஞனே பிற்காலத்தில் இடைக்காடர் என்று அழைக்கப்பட்ட சித்தர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்.

    இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்ட அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம். இக்குன்று 'இடர்குன்று' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'இடர்குன்றம்' என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    எழுபத்தியோரு படிக்கட்டுகளை கடந்து சென்றால் சிறிய கருவறையில் சுயம்பு மூலவராக நரசிம்மர் காட்சி தருகிறார். கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். பெரியாழ்வார், பேயாழ்வார், உடையவர், தேசிகர் ஆகியோர் சிலா ரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். சுயம்பு நரசிம்ம மூர்த்திக்கு எதிர்புறத்தில் பெரிய திருவடி கருடாழ்வார் மூலவரை நோக்கி அமைந்துள்ளார். லட்சுமி நரசிம்மர் உற்சவராகவும் அமைந்துள்ளார்.

    சுயம்பு நரசிம்மருக்கு அருகில் இடைக்காடர் காட்சி தருகிறார். மலைப்பாதையின் வழியில் சிறிய திருவடி அனுமனுக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    தினமும் காலை வேளைகளில் ஒருகால பூஜை நடைபெறுகின்றது. இத்தலத்திற்கு வந்து சுயம்பு நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் மட்டும் காலை ஏழு மணி முதல் பதினொன்று முப்பது வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருப்போரூர்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர்குன்றம் அமைந்துள்ளது. மானாமதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர்குன்றம் அமைந்துள்ளது.

    • கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார்.
    • ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

    ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார்.

    பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி, அன்றில் இருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

    • ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கரந்தை பஸ் நிறுத்தம் அருகில் ஆதி பீமராஜகோஸ்வாமி மடம் அமைந்துள்ளது.

    இங்கு ஆனி மாத பவுர்ணமி மற்றும் குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஆதி பீம ராஜகோஸ்வாமி ஜீவசமாதியில் அமைந்துள்ள ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது
    • 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.
    • அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை, புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் அணைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் மலை அடிவாரத்தின் வைகை ஆற்றுப்படுகையில், வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்த கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு 6½ அடி உயரத்தில் சிலை உள்ளது.

    வலது கையில் சஞ்சீவி மலையையும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி இக்கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரின் இடது கண் அயோத்தியையும், வலதுகண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்ப்பது போன்றும் உள்ளது.

    மனக்கஷ்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களை, தன் அருளால் ஆட்கொள்ளும் இந்த ஆஞ்சநேயரை, ஊரின் பெயரையும் சேர்த்து 'அணைப்பட்டி ஆஞ்சநேயர்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உருவான விதம் வியப்பானது.

    கி.பி.16-ம் நூற்றாண்டில் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில், அம்மையநாயக்கனூர் பகுதியில் காமயசாமி என்பவர் ஜமீன்தாராக இருந்தார். இவர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் வைகை ஆற்றின் கரையோரம் கூடாரம் அமைத்து ஓய்வு எடுப்பது வழக்கம்.

    அதன்படி ஒரு பவுர்ணமி தினத்தில் வைகை ஆற்றின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, 'வைகை ஆற்றில் தாழம்செடிக்கு நடுவே, நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்தில் எனக்கு கோவில் அமைத்து வழிபடு' என்று கூறி மறைந்தார்.

    ஆஞ்சநேயருக்கு கோவில்

    கனவு கலைந்ததும் திடுக்கிட்டு கண்விழித்த ஜமீன்தார், கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தை தேடினார். அப்போது கனவில் கண்டபடி, ஒரு இடத்தில் தாழம்செடி புதர் போன்று இருப்பதை கண்டார். அந்த தாழம்செடியை அகற்றிவிட்டு பார்த்தபோது, அங்கே ஒரு பாறை தென்பட்டது.

    அந்த பாறையை தோண்டி பார்க்க முயன்றார். என்ன அதிசயம்...! எவ்வளவு ஆழம் தோண்டியும் பாறையின் அடிப்பகுதியை காண முடியவில்லை. அந்த பாறையை வெளியே எடுக்கவும் முடியவில்லை. எனவே, அந்த இடமே ஆஞ்சநேயர் கூறிய இடம் என ஜமீன்தார் அறிந்து கொண்டார். அதன்படி அந்த இடத்திலேயே ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

    திருவிழாக்கள்

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கோவிலில் அமாவாசை நாட்களிலும், சனிக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

    செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கவும், பணி மாற்றம் விரும்புபவர்களும், பிற வேண்டுதல்களுக்காகவும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து வேண்டிச்செல்கின்றனர்.

    தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பீமன் வழிபட்ட ஆஞ்சநேயர்

    ஆஞ்சநேயர் கோவில் தோன்றிய விதம் குறித்து புராதனகால செவிவழி செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது அவர்கள் அணைப்பட்டியில் உள்ள சித்தர்கள் மலையில் சிறிது காலம் தங்கி இருந்தனர். ஒருநாள் பாஞ்சாலி சிவபூஜை செய்வதற்கு தயாரானாள். அந்த பூஜைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே மலை அடிவாரத்தில் உள்ள வேகவதி ஆற்றில் (தற்போதைய வைகை ஆறு) தண்ணீர் எடுத்து வரும்படி பீமனிடம் தர்மர் கூறினார். உடனே பீமன் தண்ணீர் கொண்டு வருவதற்காக மலையில் இருந்து கீழே இறங்கி ஆற்றுக்கு வந்தார்.

    அப்போது பீமனை தண்ணீர் எடுக்க விடாமல் ஒரு பெரிய வானரம் தடுத்தது. இது, பெரிய பலசாலியான பீமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இதையடுத்து வானரத்துக்கும், பீமனுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இறுதியில் பீமன் தோல்வி அடைந்து சித்தர்கள் மலைக்கு திரும்பினான். அங்கு தனது மூத்த சகோதரன் தர்மனிடம் நடந்தவற்றை கூறினான். அப்போது தர்மர் தனது ஞானத்தால் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். பின்னர் தம்பியிடம் உன்னை ஆற்றில் தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த வானரம் வேறுயாருமல்ல.. ஆஞ்ச நேயர் தான் என்றார்.

    பீமனும், ஆஞ்சநேயரும் வாயுபுத்திரர்கள் ஆவர். எனவே தர்மர், தம் தம்பியான பீமனிடம், 'ஆஞ்சநேயர் உனது அண்ணன் தான். அவரிடம் மன்னிப்பு கேட்டு தண்ணீர் எடுத்து வா' என்று கூறி பீமனை அனுப்பினார். மீண்டும் ஆற்றுக்கு சென்ற பீமன், ஆஞ்சநேயரை நினைத்து மனமுருகி மன்னிப்பு கேட்டார். உடனே அங்கு தோன்றிய ஆஞ்சநேயர், வேடிக்கை காண்பிக்கவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறி, ஆற்றில் தானே தண்ணீர் எடுத்து வந்து பீமனிடம் கொடுத்தார். பின்னர் அந்த இடத்தில் தன்னை வழிபட்டு வருமாறு கூறி மறைந்தார். அதன்படி ஆஞ்சநேயரை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து பீமன் வழிபட்டதாக அந்த செவி வழி செய்தி விளக்குகிறது.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 1001 முறை ராமநாம ஜெபம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி 10,12-ம் வகுப்பு மாணவர்கள் எழுத உள்ள அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், 1001 முறை ராமநாம ஜெபமும் நடைபெற்று, பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நடந்தது.
    • நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மாயூர நாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலில் அமைந்துள்ள அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    2 நாட்கள் நடந்த விழாவில் முதல் நாள் பாண்டுரங்கன் பஜனை மண்டலி குழுவினரின் பஜனைகளுடன் விழா தொடங்கியது. அதிகாலை கும்ப ஜெயம் அபிஷேகம், வெள்ளி கவசஅலங்காரம் நடந்தது. 2-ம் நாள் காலை தீபாராதனையும், பஜம் கோவிந்தம் சாதனா குழுவினரின் ஆன்மீக பக்தி பஜனையும் நடந்தது.

    அனுமன் சுவாமிக்கு 108 வடை மாலை, 108 அதிரச மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தன. பூசாரி கண்ணன்சுவாமி, தியாேனஸ், ராம்சிங் பூஜைகளை நடத்தினர். குழந்தைகள், பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.

    ஹரி நாம சங்கீர்த்தனம் நந்தலாலா பஜன்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரி சந்திரசேகர் குழுவினரால் நடத்தப்பட்டது .

    அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அன்னதானம் நடந்தது. விழாவில் ராஜுக்கள் மகிமைப்பட்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்தி ராஜா, தொழிலதிபர் டாக்டர் குவைத்ராஜா, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    • 25-ந்தேதி சூரிய கிரகண பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
    • மூலை அனுமாரை தரிசனம் செய்தால் சூரிய, சந்திர கிரகணத்தால் பிடிக்கும் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

    தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு 6 மணிக்கு மூலை அனுமாருக்கு ஜாங்கிரிகளால் ஆன சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

    பாம்பு (ராகு/கேது) சூரிய மற்றும் சந்திரனை நோக்கி கவ்வி பிடிக்கும் சிற்பங்கள் மூலை அனுமார் கோவிலில் உள்ளது.இதன் கீழ் நின்று மூலை அனுமாரை தரிசனம் செய்தால் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தால் பிடிக்கும் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

    வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணத்தை முன்னிட்டு இரவு 7.30மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பரிகாரம் அர்ச்சனை நடைபெறுகிறது. அப்போது சித்திரை, விசாகம், திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலை அனுமாரை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    மூலை அனுமாருக்கு பக்தர்கள் வெற்றிலை மாலை சாற்றி வழிபடும் பக்தர்கள் தங்களது வெற்றிலை மாலையை திரும்ப பெற்று அதில் உள்ள வெற்றிலையை ஒவ்வொன்றாக கழற்றி தனித்தனியாக எடுத்து வெற்றிலையுடன் வாழைப்பழத்துடன் சேர்த்து பசுமாடுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் முடிந்த உடன் மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • அன்னதானம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
    • புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு.

    பஞ்சமுக ஜெயமாருதி சேவா அறக்கட்டளை தலைவர் மற்றும் அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டிவனம் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெற உள்ளன. வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை தோறும் சுவர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது. உலக நன்மை வேண்டி இந்த பூஜைகள் பஞ்சமுக ஜெயமாருதி சேவா அறக்கட்டளை மூலம் செய்யப்பட உள்ளது.

    மேலும், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மகா சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். ஆகவே பக்தர்கள் மேற்படி பூஜைகளில் கலந்து கொண்டு இந்தச் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    இந்த நிகழ்ச்ஜெயமாருதி சேவா அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், செயலாளர் எஸ்.நரசிம்மன், உபதலைவர் ஆர்.யுவராஜன், அறங்காவலர்கள் எம்.பழனியப்பன், வி.கச்சபேஸ்வரன், ஜி.செல்வம், கே.வெங்கட்டராமன் மற்றும் ஆலய நிர்வாக அலுவலர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது.
    • அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.

    தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவள்ளித் தாயார் எழுந்தருளியுள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலின் வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை தரிசனத்துக்கு எழுத்தருள செய்யும் கிழக்கு நோக்கிய மண்டபம் உள்ளது. இக்கோவில் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார். இந்த மூலவருக்கு அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள், ருக்மணி-சத்யபாமாவுடன் அருள் பாலிக்கிறார்.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் எழுந்தருளி உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், 10 கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சி அளிக்கிறார். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக்கோவிலில் மட்டுமே உள்ளது.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து கடந்த 1978-ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய சாமி சிலைகள் கொள்ளை போனது. இந்த சிலைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டு தற்போது இந்த கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். ஆனந்த வாழ்வு தரும் அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் தல வரலாறு மிகவும் பிரசித்தி பெற்றது.

    இலங்கையில் யுத்தம் செய்து சீதையை மீட்டபின், புஷ்பக விமானத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் ஆயோத்திக்கு திரும்பினர். வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர், ராமபிரானிடம், ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு உள்ளனர். அவர்களுள் இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்போது கடலுக்கடியில் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவம் நிறைவேறினால் அவர்கள் ராவணனைப்போல பலம் பெற்றுவிடுவார்கள். எனவே உலக நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதை ஏற்ற ராமபிரான், அரக்கர்களை அழிக்க மாவீரனான அனுமனை பணித்தார். அனுமனோ, அழியாவரம் பெற்றவர். அளவில்லா ஆற்றல் உடையவர். இருப்பினும் அரக்கர்களை அழிக்க திருமால் தன் சங்கு சக்கரத்தையும் அனுமனுக்கு அளித்தார். பிரம்மா, பிரம்ம கபாலத்தை அனுமனுக்கு வழங்கினார். ருத்ரன் மழுவையும், ராமபிரான் வில்- அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும் வழங்கினா்.

    இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை தாங்கி அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார். அப்போது கருடாழ்வார் தன் இரு சிறகுகளையும் அவருக்கு தந்தார். கடைசியாக அங்கு வந்த சிவபெருமான், 10 கரங்களிலும் ஆயுதங்களுடன் நின்ற ஆஞ்சநேயரை கண்டு தான் என்ன தருவது என சிந்தித்து தனது 3-வது கண்ணை அனுமனுக்கு அளித்தார்.

    3 கண்கள்(திரிநேத்ரம்), 10 கைகளுடன் வீர அனுமான் புறப்பட்டு சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமரை சந்திக்க வந்தார். வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள இடத்தை கண்ட அனுமன் ஆனந்த மிகுதியால் அங்கு தங்கினாா். அந்த இடமே அனந்தமங்கலமானது. இந்த கோவிலில் 6 கால பூஜை நடந்து வருகிறது. அமாவாசை தோறும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவராதனங்களுடன் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர். மார்கழி மாதம் அமாவாசையின்போதும் சிறப்பு வழிபாடு மிகவும் பிரமாண்டமாக நடக்கிறது.

    ஆஞ்சநேயர் வழிபாட்டின் பயன்கள்

    * அனந்தமங்கலம் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான், பிரம்மன், ராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பயன் கிடைக்கும்.

    * சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.

    * ஆஞ்சநேயர் வழிபாட்டால் அறிவு கூர்மையாகும்.

    * உடல் வலிமை பெருகி மன உறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய்கள் நீங்கும்.

    * வாக்கு வன்மை வளமாகும்.

    நவக்கிரக njhஷம் நீக்கும் ஆஞ்சநேயர்

    அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும்போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

    மாதந்தோறும் அமாவாசை திதியிலும் மூல நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபட்டு் பயன்பெறலாம். ராகுகாலம், அஷ்டமி திதி ஆகிய தீய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கி கொள்ளலாம். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவை அனுமனுக்கு உகந்தவை ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அனுமனுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல், வடைமாலை ஆகிய பிரசாதங்களை நைவேத்யம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கியும் நலம் பெறலாம். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளதால் அவரை வழிபட்டால் நவக்கிரகங்களால் பாதிப்புகள் ஏற்படாது. உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்பப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்க சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக திருக்கடையூருக்கு சென்று அங்கிருந்து அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சென்னையில் இருந்து ரெயில் மூலம் வர வரும்பும் பக்தர்கள் சோழன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து அனந்தமங்கலத்துக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து பின்னர் அங்கிருந்து அனந்தமங்கலம் வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

    • ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.
    • ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயர் தன் உள்ளம் உருகுகிறார்.

    வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார்.

    இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம். போர்க்களத்தில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை, தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர்.

    அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து, அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர்.

    ×