search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashtavarata"

    • அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நடந்தது.
    • நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மாயூர நாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலில் அமைந்துள்ள அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    2 நாட்கள் நடந்த விழாவில் முதல் நாள் பாண்டுரங்கன் பஜனை மண்டலி குழுவினரின் பஜனைகளுடன் விழா தொடங்கியது. அதிகாலை கும்ப ஜெயம் அபிஷேகம், வெள்ளி கவசஅலங்காரம் நடந்தது. 2-ம் நாள் காலை தீபாராதனையும், பஜம் கோவிந்தம் சாதனா குழுவினரின் ஆன்மீக பக்தி பஜனையும் நடந்தது.

    அனுமன் சுவாமிக்கு 108 வடை மாலை, 108 அதிரச மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தன. பூசாரி கண்ணன்சுவாமி, தியாேனஸ், ராம்சிங் பூஜைகளை நடத்தினர். குழந்தைகள், பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.

    ஹரி நாம சங்கீர்த்தனம் நந்தலாலா பஜன்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரி சந்திரசேகர் குழுவினரால் நடத்தப்பட்டது .

    அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அன்னதானம் நடந்தது. விழாவில் ராஜுக்கள் மகிமைப்பட்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்தி ராஜா, தொழிலதிபர் டாக்டர் குவைத்ராஜா, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    ×