search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narasimha"

    • பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
    • குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது.

    நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மரிடத்தில் நம்பிக்கையோடு கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவர் உடனுக்குடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. சில தலங்கள் மிகவும் விசேஷமானவை. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது.

    தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூர் இருந்தது. தற்போதைய காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.

    ஒருசமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, பெரியோர்களிடம் அதற்கான வழியை கேட்டான். அவர்கள் தவமியற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள். ஒருநாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது 'இந்த குன்றே ஹரி. இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்' என்ற அசரீரி வாக்கு எழ, அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்ம மூர்த்தியை நினைத்து தவமியற்றினான்.

    ஒரு சித்ரா பவுர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் 'தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும்' என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலைக்குன்றில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நரசிம்ம மூர்த்தியை தன் தவத்தால் தரிசித்த அந்த இளைஞனே பிற்காலத்தில் இடைக்காடர் என்று அழைக்கப்பட்ட சித்தர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்.

    இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்ட அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம். இக்குன்று 'இடர்குன்று' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'இடர்குன்றம்' என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    எழுபத்தியோரு படிக்கட்டுகளை கடந்து சென்றால் சிறிய கருவறையில் சுயம்பு மூலவராக நரசிம்மர் காட்சி தருகிறார். கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். பெரியாழ்வார், பேயாழ்வார், உடையவர், தேசிகர் ஆகியோர் சிலா ரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். சுயம்பு நரசிம்ம மூர்த்திக்கு எதிர்புறத்தில் பெரிய திருவடி கருடாழ்வார் மூலவரை நோக்கி அமைந்துள்ளார். லட்சுமி நரசிம்மர் உற்சவராகவும் அமைந்துள்ளார்.

    சுயம்பு நரசிம்மருக்கு அருகில் இடைக்காடர் காட்சி தருகிறார். மலைப்பாதையின் வழியில் சிறிய திருவடி அனுமனுக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    தினமும் காலை வேளைகளில் ஒருகால பூஜை நடைபெறுகின்றது. இத்தலத்திற்கு வந்து சுயம்பு நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் மட்டும் காலை ஏழு மணி முதல் பதினொன்று முப்பது வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருப்போரூர்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர்குன்றம் அமைந்துள்ளது. மானாமதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர்குன்றம் அமைந்துள்ளது.

    • ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.
    • இந்த மூன்று ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம், நரசிம்மர். இவர் அவதரித்த தலமாக ஆந்திராவில் உள்ள அகோபில மடம் போற்றப்படுகிறது. நரசிம்மருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி ஆகிய 8 தலங்களும் `அட்ட நரசிம்ம தலங்களாக' உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை, சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய தலங்களாகும். இந்த மூன்று ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சிங்கிரிக்குடி

    புதுச்சேரியில் இருந்து இந்த தலம் மிக அருகில் உள்ளது. எனவே ஒரே நாளில் 3 நரசிம்மரை வழிபட விரும்புபவர்கள், புதுச்சேரியில் இருப்பவர்கள் இங்கிருந்து நரசிம்மர் வழிபாட்டைத் தொடங்கலாம். சிங்கிரிக்குடியில் வீற்றிருக்கும் நரசிம்ம மூர்த்தியின் திருநாமம், 'லட்சுமி நரசிம்மர்' என்பதாகும். இங்கு இவர் உக்கிர நரசிம்மராக அருள்கிறார். தாயாரின் திருநாமம் கனகவல்லி ஆகும். திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், இங்குவந்து லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த உக்கிர நரசிம்மரை வணங்கினால் எதிரி களின் தொல்லை நீங்கும். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். புதுச்சேரியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிங்கிரிக்குடி.

    பூவரசங்குப்பம்

    சிங்கிரிக்குடியில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஊரை அடையலாம். நேர்கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் நாம் 2-வதாக வழிபட வேண்டியது இது. இந்த ஆலயத்திலும் இறைவன், 'லட்சுமி நரசிம்மர்' என்ற திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். தாயாரின் பெயர், அமிர்தவல்லி என்பதாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்து வந்தால், உடல்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    பரிக்கல்

    பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. நரசிம்மர் ஆலயத்தில் மூன்றாவதாக வழிபட வேண்டிய கோவில் இது. இந்த ஆலய இறைவனின் பெயரும், 'லட்சுமி நரசிம்மர்'தான். தாயாரின் பெயர் கனகவல்லி என்பதாகும். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், பதவி இழந்தவர்கள் அந்தப் பதவியை மீண்டும் பிடிப்பதற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டரில் பரிக்கல் இருக்கிறது.

    • இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
    • ஆனி சனிக்கிழமை பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு உள்ள நரசிம்மர் சிறப்பு வாய்ந்தவர். பொதுவாக நரசிம்மர் இடது புறத்தில் இருக்கும் லெட்சுமி இங்கு நரசிம்மர் வலது புறத்தில் இருப்பது அபூர்வமான ஒன்றாகும்.

    இந்த நிலையில் இன்று ஆனி சனிக்கிழ மையை முன்னிட்டு வராகப்பெரு மாள் மற்றும் வலது புறத்தில் லெட்சுமி அமர்ந்துள்ள நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெ ற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    • 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும்.
    • சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் 'பக்தவச்சலப் பெருமாள்'. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார்.

    108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 65-வது திவ்ய தேசமாகும். தொண்டை நாட்டில் உள்ள 22 திவ்ய தேசங்களில் இந்த சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் இந்த திவ்ய தேசம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தை பராங்குச சோழன் என்ற மன்னன் 3-ம் நூற்றாண்டில் கட்டியிருக்கிறான். எனவே இவ்வாலயம் சோழசிம்மபுரம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சோளிங்கபுரம் என்றானது. அதுவே மருவி 'சோளிங்கர்' என்று அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தரிசிக்க, வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் ஆகிய சப்த ரிஷிகளும் விரும்பினர். ஆனால் பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த உக்கிர கோலத்தை நீக்கி, சாந்தமாக காட்சியளிக்க வேண்டும் என்று அவர்கள் நரசிம்ம பெருமாளை வேண்டினர். அதற்காக அவர்கள் 7 பேரும் நரசிம்மரை நினைத்து தவம் இருந்த தலம் இதுவாகும். ஒரு காலத்தில் விஸ்வாமித்திர முனிவர், இத்தலத்தில் சிறிதுநேரம் நரசிம்மனை வழிபட்டு, 'பிரம்மரிஷி' பட்டத்தைப் பெற்றார். அதுபோல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சப்த ரிஷிகளும் இந்த தலத்தை தேர்வு செய்து தவம் இயற்றினர். இதையடுத்து சப்த ரிஷிகளின் விருப்பப்படி, நரசிம்மர் தன்னுடைய கோபத்தை தணித்து யோக நிலையில் காட்சி அளித்தார். அந்த கோலத்திலேயே இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் செய்கிறார்.

    சுமார் 600 அடி உயரம் உள்ள மலை மீது யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. அடிவாரத்தில் இருந்து இந்த ஆலயத்தை அடைவதற்கு 1,305 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். மலையின் மீது ஒரு ஏக்கர் பரப்பளவில், 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் யோக நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கே சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். இந்த நரசிம்மப் பெருமாளை, திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    மூலவரான யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். இவர் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்று போற்றுகின்றனர். அருகில் தாயார் அமிர்தவல்லி இருக்கிறார். ஊரின் மையத்தில் உற்சவருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. பிரம்மோற்சவம் போன்ற விழாக்கள் அனைத்தும் அங்குதான் நடைபெறும். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மலை மீதுள்ள யோக நரசிம்மர் ஆலயம்.

    இந்த மலை மீது 24 நிமிடங்கள் இருந்தாலே, ஒருவர் முக்தியை அடைவார் என்று சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது, நரசிம்மர் அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார் என்று பறைசாற்றிய அவதாரம் இது. அதோடு தன் பக்தர்களுக்காக உடனடியாக காட்சி தந்து அருள்பாலிப்பவர். எனவே நரசிம்மரை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டிய வரம் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெருமாளுக்கு, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வழிபாட்டு நடைமுறைகள் இருக்கின்றன. சில கோவில்களில் மொட்டை போடுவார்கள், சில கோவில்களில் உண்டியல் காணிக்கை செலுத்துவார்கள். ஆனால் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்தில் இவை எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒரே கல்லின் மீது குன்றுபோல் அமைந்த இந்த மலை மீது 1,300 படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலேயே போதுமானது, பக்தர்கள் கேட்கும் வரங்களை அவர் அளித்து விடுவார்.

    இத்தல இறைவனுக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கிறார்கள். வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் இத்தல நரசிம்மருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெறும். அப்போது இறைவனை அபிஷேகிக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, ஆகியவற்றை பிரசாதமாக வழங்குகிறார்கள். மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இந்த கோவிலுக்கு மலையேறும் பக்தர்கள், மலைப்பாதையின் வழியில், சிறுசிறு கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் புதிய வீடு கட்டும் யோகம் வாய்க்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கார்த்திகை மாதத்தில்5 வெள்ளிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ பூஜைகள் செய்யப்படும். சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசியில் நரசிம்மர் ஜெயந்தி, காஞ்சி கருடசேவை, ஆடிப் பூரம், ஆவணியில் பவித்ரோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனி உற்சவம், மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம், தை பொங்கல் விழா, மாசியில் தொட்டாச்சாரியா உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. யோக நரசிம்மராக கண் மூடிய நிலையில் இருக்கும் இத்தல மூலவர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து அடியாளர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.

    சங்கு, சக்கரத்துடன் ஆஞ்சநேயர்

    யோக நரசிம்மர் அருளும் மலைக்கு எதிரில் 406 படிகளுடன் அமைந்த அழகிய குன்றின் மீது, யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன் இருக்கும் இவர் ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் சக்கரமும், மீதமுள்ள இரண்டு கரங்களில் ஜெபமாலையும் தாங்கி காட்சி தருகிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம்.

    சப்த ரிஷிகள் இந்த மலையில் தவம் இருந்தபோது, அவர்களுக்கு காலன், யோகன் என்ற இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள், ஆஞ்சநேயரை இத்தலம் சென்று சப்த ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஆணையிட்டார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து, இரண்டு அரக்கர்களுடன் போரிட்டார். ஆனால் அரக்கர்களை வெல்ல முடியவில்லை. இதையடுத்து பெருமாளிடம் இருந்து அவரது சங்கு, சக்கரத்தை வாங்கி, அதனைக் கொண்டு இரண்டு அரக்கர்களையும் விரட்டியடித்து, ரிஷிகளுக்கு பாதுகாப்பு அளித்தார். அதன்பிறகுதான் சப்த ரிஷிகளுக்கு பெருமாள், யோக நரசிம்மராக இங்கு காட்சியளித்தார். அந்தக் காட்சியை ஆஞ்சநேயரும் கண்டுகளித்தார்.

    அப்போது நரசிம்மர், "நீயும் இங்கு யோக நிலையில், என்னுடைய சங்கு, சக்கரத்தை ஏந்தி இரு. என்னுடைய பக்தர்களின் குறையை போக்கி அவர்களுக்கு அருள்புரிவாயாக" என்றார். அதன்படியே நரசிம்மர் கோவிலுக்கு அருகில் உள்ள குன்றில், ஆஞ்சநேயரும் யோக நிலையில் அருள்பாலித்து வருகிறார்.

    அமைவிடம்

    வேலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்திலும், ராணிப்பேட்டையில் இருந்து 29 கிலோமீட்டர் தூரத்திலும், திருத்தணியில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்திலும் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம் இருக்கிறது.

    • அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
    • திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர்.

    பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    முற்காலத்தில் இரணியன் என்ற அரக்கனை அழிக்க நாராயணன் நரசிம்மராக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    5 நரசிம்மர்கள்

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 நரசிம்மர்களும் ஒரே நேர்கோட்டில் கோவில் கொண்டுள்ளனர். இந்த நரசிம்மர்களை அவர்கள் அவதாரம் செய்த சுவாதி நட்சத்திரத்தன்று அல்லது சனிக்கிழமைகளில் ஒரே நாளில் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும் என்பதில் ஐயம் இல்லை.

    திருமங்கை மன்னன் என்பவர் திருக்குரவலூரை தலைமை இடமாக கொண்டு அரசாட்சி புரிந்ததாகவும், ஒரு கட்டத்தில் மேற்கண்ட நரசிம்மர் மீது கொண்ட பற்றால் துறவறம் பூண்டு திருமங்கை ஆழ்வாராக திருநாமம் கொண்டு 5 நரசிம்மர்களுக்கும் பணிவிடை செய்ததாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. இன்றளவும் திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற பெருமாள் கோவில்கள் 108 வைணவ திவ்ய தேச கோவில்களாக அழைக்கப்படுகிறது.

    திருமங்கையாழ்வார்

    திருமங்கையாழ்வார் திருகுரவலூர் பகுதியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வீர நரசிம்மர் மங்கை மடத்தில் கோவில் கொண்டு வீரத்தின் அடையாளமாக கருதப்படுகிறார். இவரை வணங்குபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குவதோடு வீரத்தை தருபவர் என புராண வரலாறுகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் தினமும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த கோவிலில் அன்னதானம் வழங்கியதால் மங்கையர் மடம் என்றும் தற்போது அது மருவி தற்போது கோவில் உள்ள இடம் மங்கைமடம் என அழைக்கப்படுகிறது.

    பூமியின் வடிவம்

    உக்கிர நரசிம்மர், திருமங்கையாழ்வார் பிறந்த திருக்குரவலூரில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உக்கிர நரசிம்மரை வழிபட்டால் பித்ருக்கள் தோஷம், எதிரிகளால் பயம் நீங்கி செல்வ செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக ஐதீகம். இவருக்கு மாதம்தோறும் அமாவாசை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    யோக நரசிம்மர் திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். பூமியின் வடிவமாக கருதப்படும் இவரை வணங்கினால, பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்குவதோடு, வாழ்வில் மிகப்பெரிய யோகத்தை இவர் அருள்வாா் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ேயாகநரசிம்மருக்கு வில்வத்தை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்படும். இந்த நரசிம்மருக்கு வெல்ல பானகத்தை நெய்வேத்தியம் செய்து வழிபடுவது மிக உகந்ததாகும்.

    ஹிரண்ய நரசிம்மர், திருநகரி கல்யாண ெரங்கநாதர் பெருமாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் ஆகாயத்தை நோக்கி தனி சன்னதியில் கோவில் கொண்டிருப்பது மிகவும் விசேஷமானது. இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். இவர், 8 கைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

    மகாலட்சுமி

    லட்சுமி நரசிம்மருக்கு திருவாலியில் கோவில் உள்ளது. இங்கு மகாலட்சுமி வலதுபுரத்தில் அமர்ந்து கைகூப்பி காட்சியளிக்கிறார். தீர்த்த வடிவமான இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமணத்தடை நீங்கி, வேலைவாய்ப்பு கிடைப்பது நிச்சயம்.

    பாவங்கள் போக்கும் பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் வழிபடுவது பல்வேறு சிறப்புகளை தரும் என்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்த கோவில்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது.

    முக்கிய விழாக்கள்

    மங்கை மடம் வீர நரசிம்மர் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம், திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கும்.

    சர்வ தோஷங்களையும் நீக்கும் பஞ்சநரசிம்மர்கள்

    உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர். தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் பஞ்ச நரசிம்மர்களை தரிசனம் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வருகிறார்கள்.

    கோவில்களுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.

    • மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.
    • பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    பாவங்கள் போக்கும் வைணவ திருத்தலங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பஞ்ச நரசிம்மா்கள் அருள்பாலிக்கும் இடமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் உள்ளன. உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், வீர நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி அனைத்து நன்மைகளையும் பெற்று நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    உயிரிழந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமைகளை செய்ய தவறும்போது பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதேபோல முற்பிறவியில் நாம் செய்த பாவத்தின் விளைவு மறுபிறவியில் நம்மை இன்னலுக்குள்ளாக்குகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் அருகே கோவில் கொண்டுள்ள பஞ்ச நரசிம்மர்களும் சர்வதோஷங்களை போக்கும் நரசிம்மர்களாக உள்ளனர்.

    தீராத நோய்களை தீர்த்து பித்ரு தோஷம், பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை ஆகியவற்றை தங்கள் பக்தர்கள் வாழ்வில் இருந்து நீக்குவதால் பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளனா். வேலைவாய்ப்பின்மை, திருமணத்தடை போன்றவற்றை போக்கி மழலை செல்வ பாக்கியம் பெற பஞ்ச நரசிம்மர்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பது பக்தா்கள் நம்பிக்கை.

    சென்னையில் உள்ள பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள இந்த பஞ்ச நரசிம்மர் கோவில்களை(5 கோவில்கள்) தரிசிக்க பஸ் அல்லது ரெயில் மூலம் சீர்காழிக்கு வந்து அங்கிருந்து பூம்புகாா் செல்லும் பஸ்சில் ஏறி மங்கைமடம் என்ற பகுதியில் இறங்கி அருகருகே இருக்கும் 5 நரம்சிம்மர் கோவில்களையும் ஒருங்கிணைந்து தரிசிக்கலாம்.

    நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து இந்த கோவில்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் முதலில் மயிலாடுதுறை வந்து பூம்புகார் மார்க்கமாக மங்கை மடத்தை அடைந்து 5 நரசிம்மர்களையும் தரிசிக்கலாம்.

    • 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

    நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தினசரி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிம்மம், ஹனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    அடுத்தமாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்ய உள்ளனர். இதையொட்டி மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. 5-ந் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஏப்ரல் 6-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம்.
    • சிறந்த பிரார்த்தனைத்தலம்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது, அரியக்குடி என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கிறார். இத்தல லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து, எழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், கடன் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம்.

    மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீதேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.

    காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது.

    • இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது.
    • இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.

    மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று. ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது. மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும். இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.

    இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான். அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும்

    ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.

    மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு, ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு, மங்களகிரியில் பானகம் அருந்தி, திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு, ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.

    திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம். சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு. அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

    பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை ஸ்பதகுல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது. ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன. வேதபுராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.

    இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான். அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி, மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.

    மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற, அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற, அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.

    கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது, அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின. இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன், எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.

    இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட, திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார். அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக, பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.

    தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க, பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க, நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு, அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார். அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.

    அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர் திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும், நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம். மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும், தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர். சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.

    ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார். புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய, அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது. வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில் மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.

    வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும், ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

    அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம். இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர், சங்கு - சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய் அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார். இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.

    ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் "மடக் மடக்" என பருகும் சத்தம் கேட்கும்.

    சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

    கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில் அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர். பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற, இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது. பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது.

    தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர். பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது. அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

    இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது. தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம். மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு, இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம் வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க, மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.

    அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால், ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர். ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார். ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.

    ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது. ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார். இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார். இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது. இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.

    குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான். அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து, மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை. மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.

    ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம். உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு, இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன், நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.

    ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில் பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை. பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில், ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார். தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன. இக்கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது. முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.

    லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில் பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும், கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள். இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.

    பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது. தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார். மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.

    இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர். இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.

    கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும், பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர். போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர் கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.

    மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும், மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம், நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது. இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

    • 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது
    • 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது.

    நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார்.

    திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்த படி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிரித்த முகத்துடன் நரசிம்மர் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி இன்று முதல் ஜூலை 1-ந்தேதி வரை தினசரி உற்சவர் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 3-ம் நாள் 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது. 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.
    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.

    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். “நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:-

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.

    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!

    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!

    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!

    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!

    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே!

    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை

    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
    ×