search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruporur"

    • திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
    • திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    திருப்போரூா் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்த முருகன் கோவில் ஆகும்.

    இக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

    திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

    திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    அகத்திய மாமுனிவர் ஒருமுறை, "போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?"

    என்று கேட்டார்., "சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை.

    அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)" என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர்.

    சிதம்பர ஸ்வாமிகள் அருள் பெற்ற தலமும் கூட!

    திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    • பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
    • குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது.

    நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மரிடத்தில் நம்பிக்கையோடு கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவர் உடனுக்குடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. சில தலங்கள் மிகவும் விசேஷமானவை. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது.

    தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூர் இருந்தது. தற்போதைய காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.

    ஒருசமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, பெரியோர்களிடம் அதற்கான வழியை கேட்டான். அவர்கள் தவமியற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள். ஒருநாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது 'இந்த குன்றே ஹரி. இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்' என்ற அசரீரி வாக்கு எழ, அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்ம மூர்த்தியை நினைத்து தவமியற்றினான்.

    ஒரு சித்ரா பவுர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் 'தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும்' என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலைக்குன்றில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நரசிம்ம மூர்த்தியை தன் தவத்தால் தரிசித்த அந்த இளைஞனே பிற்காலத்தில் இடைக்காடர் என்று அழைக்கப்பட்ட சித்தர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்.

    இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்ட அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம். இக்குன்று 'இடர்குன்று' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'இடர்குன்றம்' என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

    எழுபத்தியோரு படிக்கட்டுகளை கடந்து சென்றால் சிறிய கருவறையில் சுயம்பு மூலவராக நரசிம்மர் காட்சி தருகிறார். கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். பெரியாழ்வார், பேயாழ்வார், உடையவர், தேசிகர் ஆகியோர் சிலா ரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். சுயம்பு நரசிம்ம மூர்த்திக்கு எதிர்புறத்தில் பெரிய திருவடி கருடாழ்வார் மூலவரை நோக்கி அமைந்துள்ளார். லட்சுமி நரசிம்மர் உற்சவராகவும் அமைந்துள்ளார்.

    சுயம்பு நரசிம்மருக்கு அருகில் இடைக்காடர் காட்சி தருகிறார். மலைப்பாதையின் வழியில் சிறிய திருவடி அனுமனுக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    தினமும் காலை வேளைகளில் ஒருகால பூஜை நடைபெறுகின்றது. இத்தலத்திற்கு வந்து சுயம்பு நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் மட்டும் காலை ஏழு மணி முதல் பதினொன்று முப்பது வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருப்போரூர்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர்குன்றம் அமைந்துள்ளது. மானாமதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர்குன்றம் அமைந்துள்ளது.

    திருப்போரூரில் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் வேண்டவராசி அம்மன்கோயில் அருகே வசித்து வருபவர் ரவி. டைலர் கடைவைத்துள்ளார். நேற்று இரவு வீட்டில் ஏ.சி. வேலை செய்யாததால் முன்பக்க வீட்டை பூட்டி விட்டு தூங்கினார்.

    அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்தனர். சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கம் முன்னாள் கவுன்சிலர் வைன் குரல் கொடுத்து கொண்டு எழுந்து வந்தார். அவரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் 2 பேர் அரிவாளுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனணர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சாலையில் தீப்பொறி வரும் அளவுக்கு தேய்த்தவாறு மிரட்டியபடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளையில் 2 பேர் ஹெல்மெட் அணிந்தும் 4 பேர் முகத்தை மூடியபடியும் இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. #DMK #ADMK

    திருப்போரூர்:

    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களான தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் திருப்போரூர் தொகுதியை சேர்ந்த கோதண்டபானியும் ஒருவர். எனவே திருப்போரூர் தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருகிறது.

    திருப்போரூர் தொகுதியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

    இடைத்தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி விட்டனர். அவர்கள் திருப்போரூர் தொகுதியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர் தொகுதிக்கு அ.தி.மு.க.சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியை மீண்டும் தக்கவைக்க அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். கடந்த வாரம் கட்சி பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் திருப்போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அனைத்து பூத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தொகுதியை தக்கவைக்க பல்வேறு ஆலாசனைகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, காஞ்சி எம்.பி மரகதம்குமரவேல் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் காலையில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றதை போல் மாலையில் வேறொரு தனியார் மண்டபத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இதில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதை நினைவு படுத்தினார். இடைத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பூத் பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் வைதியலிங்கம், கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., தாயகம் கவி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா, இ.கருணாநிதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் இதயவர்மன், சேகர், கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கோதண்டபாணி தலைமையில் அவருடைய இல்லத்தில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியசெயலாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே அரசியல் கட்சியினர் திருப்போரூர் தொகுதியை தக்கவைத்துக் கொள்ள இப்போதே போட்டி போட்டு இறங்கிவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. #DMK #ADMK

    திருப்போரூர் அருகே வெல்டிங் கடையில் ரூ. 1 லட்சம் பொருட்கள் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் மன்னாரு என்பவருக்கு சொந்தமான வெல்டிங்கடை உள்ளது. தொழிற்சாலை மற்றும் மாடிவீடுகளுக்கு இரும்பு மற்றும் ஸ்டீல் உலோகங்களில் அலங்கார டிசைன்கள் செய்து கொடுப்பது வழக்கம்.

    இன்று காலை கடையின் ஷெட்டர் திறந்து கிடப்பதாக உரிமையாளர் மன்னாருக்கு தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்த போது கடையில் இருந்த வெல்டிங், கட்டிங், டிரில்லிங் மிஷின்களின் நீண்ட கேபிள்கள் மற்றும் வெல்டிங் கட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    கடையின் வெளிப்புறத்தில் உள்ள தகர ஷீட்டை ஒரு ஆள் துழையும் அளவுக்கு துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி இதே கடையில் ‌ஷட்டர் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள கேபிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய நபர்கள் இது வரை போலீசாரிடம் சிக்க வில்லை.

    இதற்கிடையே நேற்று இரவு இதே கடையில் மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×