திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

திருப்போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம், சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி காவேரி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணியளவில் ராஜசேகரனின் மனைவி காவேரி தனது கணவரை எழுப்பி வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக கூறினார். இதையடுத்து எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com