என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "market value"

    • மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
    • தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.

    நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்த படியாக உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டி சாதனை படைத்துள்ளது. #Amazon #JeffBezos
    நியூயார்க்:

    இ-காமர்ஸ் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்க நிறுவனமான அமேசான், கடந்த சில ஆண்டுகளாக கனிசமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அமேசான் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கடக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய பங்குச்சந்தை திறந்ததும் அந்நிறுவனத்தின் மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. 

    ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அமேசான் எட்டியது. கடந்த 10 மாதங்களில் அந்த நிறுவனத்தின் மதிப்பு இரண்டு மடங்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 2-ம் தேதி ஆப்பிள் இந்த சாதனையை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை எட்டியது.
    ×