search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co Operative Bank"

    • மதுரை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.
    • மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா கொடியேற்றி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் கூட்டுறவு அமைப்புகளின் தற்போ தைய வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. கூட்டுறவு வார விழா குழு தலைவரும், மதுரை மண்டல இணைப் பதிவாளருமான குருமூர்த்தி தலை மை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் ஜீவா கொடியேற்றி வைத்தார். பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு வைக்கப் பட்டது.

    விழாவில் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப் பதிவாளர்,முதல்வர் அமிர்தா, மதுரை சரக துணைப்பதிவாளர் பாபு, துணைப் பதிவாளர்(பயிற்சி) விநாசாந்தினி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் தீனத யாளன், கூட்டுறவு சார் பதிவாளர், கண்காணிப்பாளர் உஷா நந்தினி, மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் வெற்றி வேலன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பயனடைய முடியும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி யினை கனிமொழி எம்.பி, திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தர வின்படி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ப்படும். இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நோக்க மாகும். மீனவர்களின் கோரி க்கைகளை மீன வர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார்.

    ெதாடாந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பய னடைய முடியும் என்றார்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மாலத்தீவு அரசினால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை த்தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வள நலவாரிய மாநில உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜய ராகவன், மீன்பிடித்து றைமுக மேம்பாட்டு செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி பொறியாளர் தயாநிதி, ஆய்வாளர்கள் ஜெகன், சுப்பிரமணியன், ஷிபாணி, கவுன்சிலர்கள் எடின்டா, மரியகீதா, சரவணக்குமார், நாகேஸ்வரி, பவாணி மார்ஷல், வைதேகி, சுப்புலட்சுமி, சுதா, ரெக்ஸின், ஜெயசீலி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராம கிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சண்முகவடிவு, வட்டசெயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி துணை தலைவர் நலம் ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மற்றும் கருணா, மணி, மகேஷ்வரசிங், டோலி, கன்னிமரியாள், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கனரக வாகனங்கள் வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என பல்நோக்கு சேவை திட்டத்தின் மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மேலும் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் இத்திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமையில் ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
    • இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது.

    நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும். அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும்.

    அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது.

    எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

    இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவையை செய்ய ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஆய்வில் மண்டல இணைப்பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவையை செய்ய ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணி முன்னேற்றம் குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர வங்கி அலுவலர்களின் பணியினை தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கி இணையத்தின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான சிவமலர் ஆய்வு செய்தார்.

    இதில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் சிவகாமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை சங்க தலைவர் அறவாழி வழங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கி, 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 849 மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் பெருமாள், காசாளர் கிருபாகரன் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

    நவம்பர் 1-ந்தேதி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த கடன் தொகையை வட்டியுடன் கணக்கிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க ஏதுவாக தற்போது கூட்டுறவு சங்கங்களிடம் அரசு விவரம் சேகரித்து வருகிறது.

    இதற்காக அரசாணை வெளியிட்டு நவம்பர் 1-ந்தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    தள்ளுபடி செய்த நகைக்கடன் தொகை தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்த தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அந்த தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க ஏதுவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
    கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 13-ந் தேதியன்று முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

    தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் எழுதியிருந்தார். அதில், கூட்டுறவு நிறுவனங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் ஒரு குடும்பத்தினர் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றதில், ஒரு சில கடன்தாரர்கள் தங்களின் கடன் தொகையை பகுதியாகவோ, முழுமையாகவோ செலுத்தியது நீங்கலாக, நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.17 ஆயிரத்து 115 கோடியே 64 லட்சம் தொகையாகும்.

    கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பொது நகைக்கடனை பகுதியாகவோ முழுமையாகவோ திருப்பி செலுத்தியது மற்றும் தகுதி பெறாத நேர்வுகளை நீக்கிய பின்னர், அசல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் உள்ளிட்ட நிலுவையாக ரூ.6 ஆயிரம் கோடி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இந்த நகைக்கடனை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

    நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் உள்ள கடனை, அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்பட்டமான நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நகைக்கடன் தள்ளுபடி திட்டம் மூலம் தமிழகத்தில் 16 லட்சம் பேர் பயன் அடைவார்கள். வழிகாட்டு நெறிமுறைகளில் கூடுதல் நெறிமுறைகளை தேவைக்கு ஏற்ப கூட்டுறவு சங்க பதிவாளர் ஏற்படுத்தலாம்.

    கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து, அதாவது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்பு தொகையில் இருந்து வழங்கப்பட்டு உள்ளதால், அசல் தொகை மற்றும் வட்டியை அரசு ஏற்றுக்கொண்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையை வழங்கும்.

    பொதுநகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை தொடர்ந்து, தகுதியான நபர்கள் கண்டறியப்பட வேண்டும். அதற்காக ரேஷன் கார்டு அடிப்படையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன் தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு, கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டு பல விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    எனவே கடன் தள்ளுபடி, தகுதியற்ற நபருக்கு சென்றடையக்கூடாது. அதே நேரம் முழுத்தகுதியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பம் விடுபட்டுவிடக்கூடாது.

    ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றிருந்து, அவர்களின் அனைத்து பொதுநகைக்கடனை சேர்த்து மொத்த எடை 40 கிராமிற்கு உட்பட்டு இருந்தால், மற்ற தகுதிகளுக்கு உட்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    5 பவுனுக்கு மிகாமல் நகையீட்டின் பேரில் நகைக்கடன் பெற்று மார்ச் 31-ந் தேதியன்று கடன் நிலுவையில் இருந்து, அரசாணை வெளியிடப்படும் நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தப்பட்ட கடன், தள்ளுபடிக்கு தகுதி பெறாத இனமாக கருதப்படும்.

    ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒரே நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் மூலம் 5 பவுனுக்கு மேற்பட்டு அடமானம் வைத்து பெற்ற அனைத்து நகைக்கடன் மற்றும் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன் தள்ளுபடி இனத்திற்கு வராது.

    மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன், 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதின் பயனடைந்தவர்கள் மற்றும் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அவரின் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்; எந்த பொருளும் வேண்டாத ரேஷன் கார்டுதாரர்கள், குடும்ப உறுப்பினர் பெற்ற நகைக்கடன்;

    மத்திய மற்றும் மாநிலத்தின் அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர், குடும்பத்தினர், அரசுத் துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் அல்லது காலமுறை அடிப்படையில் அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுவோர், அரசு ஓய்வூதியர்கள் (குடும்ப ஓய்வூதியர்கள் தவிர) பெற்ற நகைக்கடன்; நகையே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன்; போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

    சுயவிருப்பம் பேரில் நகைக்கடன் தள்ளுபடி பெற விருப்பம் இல்லாதவர்கள்; புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள் கொடுத்தவர்கள்; ஆதார் கார்டில் புதுச்சேரி உள்ளிட்ட வேறு மாநில முகவரிகள் இருப்பவர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படக்கூடாது.

    எடை, தரம், தூய்மைக்குறைவு, தரக்குறைவான நகைகளுக்கு வழங்கப்பட்ட கடனுக்கு, அந்த நகைக்கு வழங்கப்பட வேண்டிய அளவிற்கு அதிகமாக வழங்கப்பட்ட தொகையை மட்டும் தள்ளுபடியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கூட்டுறவு கடன் சங்கம், வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் 22 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவார்கள். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக்காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டது. இந்தக் குழுக்கள் தற்போது தங்களது பரிந்துரைகளை அளித்து உள்ளன.

    மேலும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர்களும், இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தினை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்படுகிறது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 13 ஆயிரத்து 140 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.988-ம், அதிகபட்சம் ரூ.4,613-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 4,767 பேர் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,114-ம், அதிகபட்சம் ரூ.16,963-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.

    நகர கூட்டுறவு வங்கிகளுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 1,286 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.455-ம், அதிகபட்சம் ரூ.16,485-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.

    பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 1,378 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,200-ம், அதிகபட்சம் ரூ.12,500-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.57 மடங்காகும்.

    நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப் படும். இதனால் 462 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500-ம், அதிகபட்சம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.70 மடங்காகும்.

    தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். மொத்தம் 485 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,189-ம், அதிகபட்சம் ரூ.7,815-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.

    தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் காரணமாக 117 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,521-ம், அதிகபட்சம் ரூ.15,526-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 15 சதவீதம்.

    தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 413 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,456-ம், அதிகபட்சம் ரூ.28,017-ம் கிடைக்கும். அதிகப்பட்ச ஊதிய உயர்வு 21 சதவீதம்.

    இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22,048 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143.72 கோடி ஆகும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கி கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கொள்ளையடிக்க முடியாமல் திரும்பியதால் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின.
    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆலடியூரில் பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி காவலாளியாக கோபால் கணேசன் என்பவர் உள்ளார். நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. காவலாளி கோபால் கணேசன் மட்டும் பணியில் இருந்தார். இரவில் அவர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    அந்த வேளையில் மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். வங்கியின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் வங்கி லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டனர். இன்று காலையில் வங்கியின் தற்காலிக பணியாளர் முத்துமாரி வங்கிக்கு வந்தார்.

    அப்போது வங்கியின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கி ஜன்னலையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி வங்கி செயலர் கணபதிமள்ளு என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வங்கி லாக்கரில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்தன. கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாமல் சென்றதால் அந்த நகைகள் அனைத்தும் தப்பின. இந்த் கொள்ளை முயற்சி சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×