என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Co Operative Bank"
- மதுரை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.
- மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா கொடியேற்றி வைத்தார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் கூட்டுறவு அமைப்புகளின் தற்போ தைய வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. கூட்டுறவு வார விழா குழு தலைவரும், மதுரை மண்டல இணைப் பதிவாளருமான குருமூர்த்தி தலை மை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் ஜீவா கொடியேற்றி வைத்தார். பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனை தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு வைக்கப் பட்டது.
விழாவில் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய துணைப் பதிவாளர்,முதல்வர் அமிர்தா, மதுரை சரக துணைப்பதிவாளர் பாபு, துணைப் பதிவாளர்(பயிற்சி) விநாசாந்தினி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் தீனத யாளன், கூட்டுறவு சார் பதிவாளர், கண்காணிப்பாளர் உஷா நந்தினி, மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் வெற்றி வேலன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பயனடைய முடியும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி யினை கனிமொழி எம்.பி, திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தர வின்படி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மீனவர் கூட்டுறவு நகைக்கடன் வழங்கும் வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தொழில், கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ப்படும். இந்த வங்கியை பயன்படுத்தி உங்கள் தொழிலை, வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நோக்க மாகும். மீனவர்களின் கோரி க்கைகளை மீன வர்கள் மாநாட்டிலேயே நிறைவேற்றியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இவ்வாறு அவர் பேசினார்.
ெதாடாந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அமைத்து தரவேண்டும் என்ற மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு மீனவர் சங்கங்கத்தில் உள்ளவர்களும் இந்த வங்கியின் மூலம் பய னடைய முடியும் என்றார்.
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு நகைக்கடன் கொடுக்கப்படும். மாலத்தீவு அரசினால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமிபதி, துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை த்தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், மீன்வள நலவாரிய மாநில உறுப்பினர் அந்தோணி ஸ்டாலின், மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் விஜய ராகவன், மீன்பிடித்து றைமுக மேம்பாட்டு செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி பொறியாளர் தயாநிதி, ஆய்வாளர்கள் ஜெகன், சுப்பிரமணியன், ஷிபாணி, கவுன்சிலர்கள் எடின்டா, மரியகீதா, சரவணக்குமார், நாகேஸ்வரி, பவாணி மார்ஷல், வைதேகி, சுப்புலட்சுமி, சுதா, ரெக்ஸின், ஜெயசீலி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ராம கிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சண்முகவடிவு, வட்டசெயலாளர் டென்சிங், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி துணை தலைவர் நலம் ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மற்றும் கருணா, மணி, மகேஷ்வரசிங், டோலி, கன்னிமரியாள், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
- 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பட்டி:
ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கனரக வாகனங்கள் வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என பல்நோக்கு சேவை திட்டத்தின் மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மேலும் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் இத்திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமையில் ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
- இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி :
இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது.
நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும். அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும்.
அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது.
எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவையை செய்ய ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
- ஆய்வில் மண்டல இணைப்பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவையை செய்ய ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணி முன்னேற்றம் குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர வங்கி அலுவலர்களின் பணியினை தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கி இணையத்தின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான சிவமலர் ஆய்வு செய்தார்.
இதில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் சிவகாமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை சங்க தலைவர் அறவாழி வழங்கினார்.
சாயர்புரம்:
சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கி, 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 849 மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் பெருமாள், காசாளர் கிருபாகரன் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக்காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டது. இந்தக் குழுக்கள் தற்போது தங்களது பரிந்துரைகளை அளித்து உள்ளன.
மேலும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர்களும், இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தினை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பின்வரும் கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்படுகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 13 ஆயிரத்து 140 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.988-ம், அதிகபட்சம் ரூ.4,613-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.
மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 4,767 பேர் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,114-ம், அதிகபட்சம் ரூ.16,963-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.
நகர கூட்டுறவு வங்கிகளுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் 1,286 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.455-ம், அதிகபட்சம் ரூ.16,485-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதம்.
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனால் 1,378 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,200-ம், அதிகபட்சம் ரூ.12,500-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.57 மடங்காகும்.
நகர கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப் படும். இதனால் 462 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500-ம், அதிகபட்சம் ரூ.18 ஆயிரமும் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 2.70 மடங்காகும்.
தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். மொத்தம் 485 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,189-ம், அதிகபட்சம் ரூ.7,815-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 20 சதவீதமாகும்.
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத்தொகை வழங்கப்படும். இதன் காரணமாக 117 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,521-ம், அதிகபட்சம் ரூ.15,526-ம் கிடைக்கும். அதிகபட்ச ஊதிய உயர்வு 15 சதவீதம்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் 413 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.3,456-ம், அதிகபட்சம் ரூ.28,017-ம் கிடைக்கும். அதிகப்பட்ச ஊதிய உயர்வு 21 சதவீதம்.
இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22,048 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.143.72 கோடி ஆகும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
அந்த வேளையில் மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். வங்கியின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் வங்கி லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டனர். இன்று காலையில் வங்கியின் தற்காலிக பணியாளர் முத்துமாரி வங்கிக்கு வந்தார்.
அப்போது வங்கியின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கி ஜன்னலையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி வங்கி செயலர் கணபதிமள்ளு என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வங்கி லாக்கரில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்தன. கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாமல் சென்றதால் அந்த நகைகள் அனைத்தும் தப்பின. இந்த் கொள்ளை முயற்சி சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்