search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்
    X

    கடன் தள்ளுபடி சான்றிதழ்களை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி வழங்கிய காட்சி.


    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்

    • சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை சங்க தலைவர் அறவாழி வழங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கி, 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 849 மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் பெருமாள், காசாளர் கிருபாகரன் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×