என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகைக்கடன் தள்ளுபடி- கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையை வட்டியுடன் வழங்க முடிவு
Byமாலை மலர்11 Nov 2021 5:32 AM GMT (Updated: 11 Nov 2021 9:43 AM GMT)
நவம்பர் 1-ந்தேதி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த கடன் தொகையை வட்டியுடன் கணக்கிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க ஏதுவாக தற்போது கூட்டுறவு சங்கங்களிடம் அரசு விவரம் சேகரித்து வருகிறது.
இதற்காக அரசாணை வெளியிட்டு நவம்பர் 1-ந்தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
தள்ளுபடி செய்த நகைக்கடன் தொகை தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்த தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அந்த தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க ஏதுவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X