என் மலர்

    நீங்கள் தேடியது "robbery attempt"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்றனர்.
    • போலீசார் ரோந்து வந்ததால் போட்டுவிட்டு தப்பினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் -மானாசாைல ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் , சூப்பர்வைசராக இருளாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வசூல் பணம் ரூ.2லட்சத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக சில மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் முதலில் கடையின் முன்பு இருந்த சி.சி.டி.வி. காமிராவை உடைத்து சேதப்படுத்தினர். பின்பு அவர்கள் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பணம் கொள்ளையடிக்கலாம் என்று பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை.

    இதனால் விரக்தியடைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச்செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஒரு சாக்கில் ஏராளமான மதுபாட்டில்களை வைத்து மூட்டை கட்டினர். மேலும் தங்களிடம் இருந்த ஜவுளிக்கடை கட்டை பையிலும் மதுபாட்டில்களை அடுக்கினர்.

    பின்பு அவற்றை கடைக்கு வெளியே எடுத்து வந்தனர். அப்போது அந்த வழியாக வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த மர்மநபர்கள், மூட்டை மற்றும் பையில் கட்டிவைத்திருந்த மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    மதுக்கடையில் இருந்து மர்மநபர்கள் தப்பி ஓடுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால் அந்த மர்மநபர்கள், வேகமாக ஓடி போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர்.

    மதுக்கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது மற்றும் காமிராவை உடைத்த சம்பவம் தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் பணத்தை கடையில் வைத்துவிட்டு செல்லாமல் கொண்டு சென்றதால், கொள்ளையர்களிடம் பணம் சிக்கவில்லை.

    மேலும் போலீசார் ரோந்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் தப்பின. கடையில் வைக்கப்பட்டிருந்த காமிரா மட்டும், கொள்ளையர்கள் உடைத்ததால் சேதமாகிவிட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    மதுக்கடையில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெள்ளகுளம் அடுத்த பி.என். கண்டிகை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் தாய் சரோஜம்மாவுடன்(68) கடையை திறக்க சென்றார்.

    வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.
    • மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் - இருகூர் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை அருகே உள்ள இருப்பு அறையில் வைத்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் இருப்பு அறையை திறந்து மதுபாட்டில்களை எடுப்பதற்காக சென்றார். அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரங்கள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தினம்தோறும் இரவு வேலைகளில் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பக்கத்திலேயே வங்கிகள் உள்ளன.

    அதில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தை இன்று அதிகாலை மர்மநபர் உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து தன் கையில் இருந்த சுத்தியலால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக சென்றனர். அப்போது ஏடிஎம் எந்திரம் உள்ள இடத்தில் உள்ளே ஒருவர் இருப்பதை கண்டதும் சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பார்த்தபோது கையில் சுத்தியலுடன் வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமி அவனை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏடிஎம் ஏந்திரத்தை உடைக்க முயற்சி செய்தவர் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கார்த்தி (வயது 24) என்றும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்து சுத்தியல் கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நேற்று நள்ளிரவு மதுபோதையில் கற்களுடன் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். ஆனால் நீண்ட நேரம் போராடியும் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த அசோக்கிற்கு மேலும் மது குடிக்க பணம் தேவைப்பட்டது. அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக உடைத்து பணத்தை எடுத்து சென்றுவிடலாம் என்று எண்ணிய அவர் கற்களுடன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது தோல்வியில் முடிந்ததால் விரக்தியடைந்த அசோக் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு வாலிபர் அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாப்பூர், பஜார் வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதை வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை அறியாத வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க சில வினாடிகள் உள்ள நிலையில் வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்தார்.

    இதனைக் கண்டு அச்சப்படாத வாலிபர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    வீடியோ எடுத்த நபர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம்.மை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சேஜ்பர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.

    போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகைக்கடைக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • விசாரணையில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சிலம்பரசன் என்பது தெரியவந்தது.

    போரூர்:

    ராமாபுரம், ராயலா நகர் 1-வது மெயின் ரோட்டில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கேசியராக பரத்குமார் உள்ளார். நேற்று மாலை வழக்கம்போல் நகைக்கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் கடையில் இருந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு திடீரென நகைக்கடைக்குள் புகுந்தார். பின்னர் அவர் கேசியர் பரத்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி "கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை கொடு" என்று மிரட்டல் விடுத்தார். இதனை கண்டு நகை கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுதாரித்துக் கொண்ட பரத்குமார் அருகில் கிடந்த கட்டையால் கொள்ளையனை தாக்கினார். உடனே மற்ற ஊழியர்களும் சேர்ந்து மர்மவாலிபரை மடக்கி பிடித்தனர். இதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சிலம்பரசன் (வயது32) என்பது தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூரில் உள்ள நகைக்கடையின் ஷட்டரில் துளையிட்டு 9 கிலோ நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் இன்னும் குற்றவாளிகள் சிக்கவில்லை.

    இந்த நிலையில் நகைக்கடைக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் ஓசூர் வெங்கடேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றிருந்தார்.

    நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே ரவிச்சந்திரன் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டுக்கு 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வீட்டுக்குள் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.

    பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து முருகன் (வயது 38), சந்தோஷ்குமார் (26), யாரப்பாஷா (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
    • பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கவி. இவர் அங்குள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டைப்பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    இந்தநிலையில் அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.

    அப்போது பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அந்த விவசாயியிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சிக்கிய 2 பெண்களும் தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்றனர். மேலும் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கவி அங்கே வந்துள்ளார். இதையடுத்து 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா( 30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
    • நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குன்னத்தூர் சாலை பிரிவில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. பின்னர் வியாபாரம் முடிந்ததும் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    இந்த நகைக்கடையையொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகை கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் மரச்செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் மர்மநபர்கள் அரசு ஆண்கள் பள்ளிக்குள் சென்று நகை கடையின் பின்பகுதிக்கு வந்துள்ளனர். சுமார் 3 அடி அகலத்துக்கு சுவற்றைத் துளையிட்டுள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நகைக்கடைக்குள் சென்று உள்ளனர்.

    கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கடையின் இரவு நேர காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அப்போது கடையின் பின்பகுதி சுவற்றில் துளையிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து கடையின் உரிமையாளருக்கும் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் பரமசிவம் கடைக்குள் சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் தப்பியது.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. ஆனந்தகுமார், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கடையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo