search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery attempt"

    • மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர்.
    • அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 30). இவரது கணவர் சஞ்சய் காந்தி. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சஞ்சய் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் ஜெயலட்சுமி குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு துணையாக அவரது மாமனார் வைரக்கண்ணு (82) வந்து தங்குவது வழக்கம்.

    இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமி மற்றும் அவரது மாமனார் இருவரும் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பின்பக்கம் வழியாக முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    மெதுவாக வீட்டின் உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கத்தி வைத்து அவர் அணிந்திருந்த தங்கநகைகளை பறித்தனர். இதனை கண்ட அவரது மாமனார் வைரக்கண்ணு அதனை தடுக்க முயன்றார். அப்போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வைரக்கண்ணு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி வீசினார்.

    இதனால் பயந்த கொள்ளையர்கள் பெண்ணிடம் இருந்து பறித்த நகைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு அலறிஅடித்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களை விரட்டி சென்று தேடினர். ஆனால் அவர்கள் அதற்குள் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) திருவாரூர் சரவணன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எடையூர் ஆனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், புஷ்பநாதன் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக திருத்துறைப்பூண்டி அடுத்த கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (26), அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா, கச்சனம் பகுதியை சேர்ந்த சினநேசன் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் புகுந்த கொள்ளையர்களை துணிச்சலுடன் அரிவாளை கொண்டு விரட்டிய முதியவரின் வீரதீர செயலை கண்டு அனைவரும் வியந்தனர். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல்கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது.

    திருவள்ளூர்:

    ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியில் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 500-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு மற்றும் நகைகடன் கணக்கு வைத்து உள்ளனர். மாலையில் பணி முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நள்ளிரவில் வந்த மர்ம வாலிபர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றான். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றபோது ஒலி எழுந்ததால் மர்ம வாலிபர் கொள்ளை திட்டத்தை கைவிட்டு தப்பி சென்று விட்டான்.

    இதற்கிடையே காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல்கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் பணம் வைத்துள்ள லாக்கரை உடைக்க முயன்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் வைத்தியநாதன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார்.
    • பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காதர்கான் தெருவை சேர்ந்தவர் எபினேசர். இவரது மனைவி சிமிலி ஏஜென்ஸ் (வயது 42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வீராணம் அருகே உள்ள பருத்தி காடுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் இருந்து எதுவும் திருடு போகவில்லை.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் சேலம் கந்தம்பட்டி பகுதியில் வரதராஜன் மனைவி ராஜாமணி என்பவர் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். இதற்காக அந்த மர்ம நபர் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் முதலில் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை அடித்து உடைத்துள்ளார்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இருந்தாலும் அவரால் பணத்தை திருட முடியவில்லை. இதனையடுத்து அந்த மர்மநபர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளார். இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வீரப்பன்சத்திரம் போலீசார் மட்டும் வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேலாளரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதேப்போல் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர் நள்ளிரவில் வந்து இந்த துணிகர கொள்ளை முயற்சி ஈடுபட்டது தெரிய வந்தது. நல்ல வாய்ப்பாக பணம் கொள்ளை போகாததால் லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வாலிபரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாசலில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க மர்ம நபர் முயன்றுள்ளார். அப்போது எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் அடித்துள்ளது. இருந்தபோதும் ஏ.டி.எம். மிஷினை உடைக்க முடியாததால் கொள்ளையன் வேகமாக வெளியேறினார். இதையடுத்து அலாரம் அடித்து வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனால் வங்கி மேலாளர் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் கொள்ளையனை தேடும் பணியில் இறங்கினர். அப்போது வங்கி அருகில் இருந்த 2 செல்போன் கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ரூ.16,000 பணம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் உடமைகளை சோதித்த போது செல்போன்கள் மற்றும் திருடு போன ரூ.16 ஆயிரம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதையும், செல்போன் கடையில் கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டார்.

    அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சூரியகாந்தி (வயது 21) என தெரிய வந்தது. அவரை கைது செய்து இவர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    • ஏ.டி.எம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார்.
    • பின்னர், வெல்டிங் எந்தி ரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, மெட்ட லாவில் தனியார் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு அந்த மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார். பின்னர், வெல்டிங் எந்திரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு அருகே இருந்த கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் அங்கு வந்துள்ளனர். அதைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்ப வம் தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மையத்திற்குள் சென்று திருட முயற்சித்துள்ளார். மற்றொருவர் வெளியே நின்று பொதுமக்களின் நடமாட்டத்தை கண்கா ணித்து வந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவ ரங்கள் தெரியவந்துள்ளது.

    எனினும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆயில்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பல்வேறு தடயங்க ளைக் கொண்டு, ஏ.டி.எம் மையத்தை கொள்ளை யடிக்க முயற்சித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்றனர்.
    • போலீசார் ரோந்து வந்ததால் போட்டுவிட்டு தப்பினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் -மானாசாைல ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் , சூப்பர்வைசராக இருளாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் நேற்று இரவு வசூல் பணம் ரூ.2லட்சத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக சில மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் முதலில் கடையின் முன்பு இருந்த சி.சி.டி.வி. காமிராவை உடைத்து சேதப்படுத்தினர். பின்பு அவர்கள் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பணம் கொள்ளையடிக்கலாம் என்று பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை.

    இதனால் விரக்தியடைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச்செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஒரு சாக்கில் ஏராளமான மதுபாட்டில்களை வைத்து மூட்டை கட்டினர். மேலும் தங்களிடம் இருந்த ஜவுளிக்கடை கட்டை பையிலும் மதுபாட்டில்களை அடுக்கினர்.

    பின்பு அவற்றை கடைக்கு வெளியே எடுத்து வந்தனர். அப்போது அந்த வழியாக வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த மர்மநபர்கள், மூட்டை மற்றும் பையில் கட்டிவைத்திருந்த மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    மதுக்கடையில் இருந்து மர்மநபர்கள் தப்பி ஓடுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால் அந்த மர்மநபர்கள், வேகமாக ஓடி போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர்.

    மதுக்கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது மற்றும் காமிராவை உடைத்த சம்பவம் தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் பணத்தை கடையில் வைத்துவிட்டு செல்லாமல் கொண்டு சென்றதால், கொள்ளையர்களிடம் பணம் சிக்கவில்லை.

    மேலும் போலீசார் ரோந்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் தப்பின. கடையில் வைக்கப்பட்டிருந்த காமிரா மட்டும், கொள்ளையர்கள் உடைத்ததால் சேதமாகிவிட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

    மதுக்கடையில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    • வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெள்ளகுளம் அடுத்த பி.என். கண்டிகை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் தாய் சரோஜம்மாவுடன்(68) கடையை திறக்க சென்றார்.

    வெள்ளகுளம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சரோஜம்மாள் கழுத்தில் இருந்த 7 ½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறிய சரோஜம்மா ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.
    • மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சின்னியம்பாளையம் - இருகூர் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை அருகே உள்ள இருப்பு அறையில் வைத்து செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் இருப்பு அறையை திறந்து மதுபாட்டில்களை எடுப்பதற்காக சென்றார். அப்போது அறை கதவின் பூட்டு பாதி உடைந்தும், பாதி உடைக்கப்படாத நிலையிலும் இருந்தது.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை இருப்பு அறையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    கடந்த மாதம் திருவண்ணாமலையில் ஏடிஎம் எந்திரங்கள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தினம்தோறும் இரவு வேலைகளில் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் ஏடிஎம் மையங்கள் உள்ள பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் பக்கத்திலேயே வங்கிகள் உள்ளன.

    அதில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தை இன்று அதிகாலை மர்மநபர் உள்ளே புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து தன் கையில் இருந்த சுத்தியலால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அந்த வழியாக சென்றனர். அப்போது ஏடிஎம் எந்திரம் உள்ள இடத்தில் உள்ளே ஒருவர் இருப்பதை கண்டதும் சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பார்த்தபோது கையில் சுத்தியலுடன் வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தார்.

    சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் லட்சுமி அவனை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏடிஎம் ஏந்திரத்தை உடைக்க முயற்சி செய்தவர் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் உள்ள நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கார்த்தி (வயது 24) என்றும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்தி செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து அவரிடமிருந்து சுத்தியல் கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி வேறு ஏதாவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு ஏடிஎம் கொள்ளை முயற்சியை தடுத்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசாரை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் நேற்று நள்ளிரவு மதுபோதையில் கற்களுடன் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். ஆனால் நீண்ட நேரம் போராடியும் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் காட்சிகளை ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக நெசப்பாக்கம் காணுநகர் பகுதியை சேர்ந்த அசோக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அசோக் தினசரி மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த அசோக்கிற்கு மேலும் மது குடிக்க பணம் தேவைப்பட்டது. அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக உடைத்து பணத்தை எடுத்து சென்றுவிடலாம் என்று எண்ணிய அவர் கற்களுடன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது தோல்வியில் முடிந்ததால் விரக்தியடைந்த அசோக் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

    • ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு வாலிபர் அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாப்பூர், பஜார் வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதை வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை அறியாத வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க சில வினாடிகள் உள்ள நிலையில் வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்தார்.

    இதனைக் கண்டு அச்சப்படாத வாலிபர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    வீடியோ எடுத்த நபர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம்.மை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சேஜ்பர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.

    போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×