search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அருகே ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி
    X

    நாமக்கல் அருகே ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி

    • ஏ.டி.எம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார்.
    • பின்னர், வெல்டிங் எந்தி ரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, மெட்ட லாவில் தனியார் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு அந்த மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் தடயங்கள் எதுவும் பதிவா காதபடி கருப்பு நிற பெயிண்ட் பூசியுள்ளார். பின்னர், வெல்டிங் எந்திரத்தைக் கொண்டு ஏ.டி.எம் மையத்தை உடைக்க முயற்சித்துள்ளார்.

    அப்போது சத்தம் கேட்டு அருகே இருந்த கோழி இறைச்சிக் கடைக்காரர்கள் அங்கு வந்துள்ளனர். அதைக் கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இச்சம்ப வம் தொடர்பாக ஆயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் மையத்திற்கு வந்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் மையத்திற்குள் சென்று திருட முயற்சித்துள்ளார். மற்றொருவர் வெளியே நின்று பொதுமக்களின் நடமாட்டத்தை கண்கா ணித்து வந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவ ரங்கள் தெரியவந்துள்ளது.

    எனினும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆயில்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பல்வேறு தடயங்க ளைக் கொண்டு, ஏ.டி.எம் மையத்தை கொள்ளை யடிக்க முயற்சித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×