search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீடியோ எடுப்பது தெரியாமல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    ஏ.டி.எம். எந்திரத்தை வாலிபர் உடைத்த காட்சி.

    வீடியோ எடுப்பது தெரியாமல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

    • ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு வாலிபர் அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாப்பூர், பஜார் வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஒருவர் வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதை வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை அறியாத வாலிபர் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க சில வினாடிகள் உள்ள நிலையில் வெளியில் இருந்து ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்தார்.

    இதனைக் கண்டு அச்சப்படாத வாலிபர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் தன்னை வீடியோ எடுத்த வாலிபரிடம் நன்றாக வீடியோ எடுத்துக் கொள் என போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

    வீடியோ எடுத்த நபர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் ஏ.டி.எம்.மை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சேஜ்பர் பாஸ்கர் என்பது தெரியவந்தது.

    போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×