search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Arrested"

    • அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார்.
    • நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சகாயராஜ் தனது மனைவி அனிதா(37) என்பவருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர். பஸ் ஏறியவுடன் நகையை பார்த்தபோது அது திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகையை திருடியது வத்தலக்குண்டு பண்ணப்பட்டியை சேர்ந்த சத்யா(44), மதுரையை சேர்ந்த முத்துமாரி(35), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணி(31) என தெரியவந்தது.

    இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
    • பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கவி. இவர் அங்குள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டைப்பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    இந்தநிலையில் அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.

    அப்போது பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அந்த விவசாயியிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சிக்கிய 2 பெண்களும் தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்றனர். மேலும் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கவி அங்கே வந்துள்ளார். இதையடுத்து 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா( 30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர்.
    • சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து குளிர்பானங்கள் கொடுத்தனர். பின்னர் மத்தியபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள பாளை ரோட்டில் ஒரு பிரபல ஜவுளிக்கடையுடன் இணைந்த நகைக்கடை இயங்கி வருகிறது.

    இந்தக் கடையின் நகைக்கடை பிரிவுக்கு நேற்று மாலை டிப்-டாப்பாக உடை அணிந்து 2 பெண்கள் வந்தனர். கடையில் உள்ள நகைகளை பார்த்த அவர்கள் சுமார் 10 பவுன் நகை தேர்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் உங்களது கடை முதலாளி எங்கே இருக்கிறார்? அவரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டனர்.

    அதற்கு ஊழியர்கள் என்ன காரணம்? எங்களிடம் சொல்லுங்கள்? என்று கேட்டும் பதில் அளிக்கவில்லை. உடனடியாக அருகில் இருந்த கடையின் மேலாளர் என்ன விவரம் என்று எங்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டார்.

    உடனே அந்த 2 பெண்களும், நாங்கள் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி தங்களிடமிருந்த அடையாள அட்டையை காண்பித்தனர்.

    மேலும் கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கேட்கும் நகையை தர வேண்டும் என கூறி உள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து குளிர்பானங்கள் கொடுத்தனர். பின்னர் மத்தியபாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சாலைத்தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (வயது40), சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பெரியகடை கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் லஞ்சஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. ராஜலட்சுமி ராமநாதபுரத்தில் மருத்துவமனை நடத்தி டாக்டர் என போலியாக தவறான சிகிச்சை அளித்ததில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து இந்தப் பெண்கள் தமிழகம் முழுவதும் வேறு நகைக்கடையில் கைவரிசை காட்டி உள்ளார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×