search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற 3 பேர் கைது
    X

    ஓசூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற 3 பேர் கைது

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் ஓசூர் வெங்கடேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றிருந்தார்.

    நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே ரவிச்சந்திரன் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டுக்கு 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வீட்டுக்குள் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.

    பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து முருகன் (வயது 38), சந்தோஷ்குமார் (26), யாரப்பாஷா (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×