search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே வங்கி மேலாளரை கத்தியால் வெட்டிய கும்பல்
    X

    திருவள்ளூர் அருகே வங்கி மேலாளரை கத்தியால் வெட்டிய கும்பல்

    • திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
    • கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நண்பர்களுடன் ஸ்ரீதேவிகுப்பம் பெட்ரோல் பங்க் அருகில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென பிரதீப்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

    பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப்குமாருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×