search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workplace"

    • பதவி உயர்வு மூலம் 44 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டது.
    • 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மாதிரி பள்ளி உட்பட 71 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-1 வகுப்பிலும், 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2021-2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வு முடிவில் 97.20 சதவீதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம் பெற்றது. கடந்தாண்டு கல்வியாண்டில் 95.30 சதவீதம் பெற்று மாநில அளவில் 12-ம் இடத்திற்கு பின்னோக்கி சென்றது. தேர்வு விகிதம் குறைந்த தற்கான காரணங்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது சில மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வராமல் கடைசி நேரத்தில் தேர்விற்கு வந்ததாலும், இது போன்று தலைமையாசிரியர்கள், காலிபணியிடம் உள்ள பள்ளிகளில் தேர்வு விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனை யடுத்து உடனடியாக தலைமையாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 44 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    இதில் தற்போது நடந்த பதவி உயர்வு கலந்தாய்வில் 44 அரசு மேல்நிலைப்பள்ளி களுக்கும் தலைமையாசி ரியர் பணிடங்கள் நிரப்பப் பட்டன. மேலும் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்ளை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அரசு உத்தர விட்டது. அதன்படி மாவட்டத்தில் 90 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பாதுகாப்பு பிரிவில் 1.70 லட்சம் இடங்கள் காலியாக உள்ளது.
    • ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு பதில் அனுப்பியுள்ள ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே துறையில் 2.74 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இதில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் மட்டுமே 1.70 லட்சத்துக்கு அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ரெயில்வே அனுப்பியுள்ள பதிலில், '2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி இந்திய ரெயில்வேயில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் 2,74,580 பணியிடங்கள் காலியாக உள்ளன' என்று கூறியுள்ளது.2023 ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி ரெயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் குரூப் சி (நிலை-1 உள்பட) பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 9,82,037 ஆகும் என கூறியுள்ள ரெயில்வே அமைச்சகம், இதில் 8,04,113 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும், 1,77,924 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    முன்னதாக ரெயில்வேயில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • புவிசார் குறியீடு கிடைத்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
    • ஏற்றுமதியாளர்களிடையே ராமநாதபுரம் குண்டு மிளகாய் தனி கவனம் பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் கைவிட்டாலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஒரே பணப்பயிர் மிளகாய் தான். குறிப்பாக மாவட்டத்தில் மட்டும் விளையும் குண்டு மிளகாய்க்கு அதன் தரம், காரம், சுவை என அனைத்திற்கும் தனி மவுசு உண்டு.

    தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளிலும் குண்டு மிளகாய் என்று அழைக்கப் படும் முண்டுவுக்கு தனி கிராக்கி எப்போதும் உண்டு. ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரம் எக்டருக்கு மேல் குண்டு மிளகாய் பயிரிடப்படுகிறது.இந்த மிளகாய் மூலம் மிளகாய் தூள், மிளகாய் ஊறுகாய், மிளகாய் பேஸ்ட் போன்றவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோ னேசியா, இலங்கை, நேபா ளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் போன்றவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் விளையும் இந்த குண்டு மிளகாய்க்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத் துள்ளது. இதன்காரணமாக மாவட்ட குண்டு மிளகாய்க்கு அதிகளவிலான ஏற்றுமதி வாய்ப்பு உருவாகி உள்ளது. இங்கிருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு குண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப் பட்டு வந்த நிலையில் புவிசார் குறியீடு கிடைத்துள் ளதால் உலக அரங்கில் ஏற்றுமதி யாளர்களிடையே ராமநாதபுரம் குண்டு மிளகாய் தனி கவனம் பெற்றுள்ளது.

    இதனை பயன்படுத்தி மாவட்டத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரிகள் குண்டு மிளகாய் ஏற்றுமதி தொழிலில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். மிளகாய் ஏற்றுமதியாளர்கள் குண்டு மிளகாய்களில் உள்ள காம்புகளை அகற்றி தரமிக்க வகையில் அட்டைப் பெட்டி களில் அடைத்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு மேலும் மவுசு அதிகரித்துள்ளது,

    • பள்ளி கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடம் ஏற்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஆணையர் பணியிடத்தை ஏற்படுத்தி னார்கள். இதற்கு அப்போதே ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இயக்குநர்பணியிடம் இருந்த வரை பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து செயல்பாடுகளும் சீராக சென்றது, எந்த வித குழப்பமோ, குறைபாடுகளோ ஏற்பட்டதில்லை. ஆனால், ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்ட பிறகு பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டு முழுவதும் குறைகளும் குழப்பங்களும் உண்டானது.

    இதனை கருத்தில் கொண்டே ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகி யோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    மாநிலத்தலைவர் தியாக ராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும், ஜாக்டோ-ஜியோ சார்பாக வும் நன்றியை தெரிவித்துத் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் கலைப்பாட பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.
    • மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதம் உயர்த்தவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதே தீர்வாக அமையும் என்றனர்.

    மடத்துக்குளம்:

    கலைப்பாடப்பிரிவு இல்லாத பழைய பள்ளிகளுக்கும் நிரந்தர பணியிடம் உருவாக்கித்தர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அறிவியல் பாடப்பிரிவு துவங்க மட்டுமே பணியிடம் உருவாக்கி ஆசிரியர்கள் நியமிப்பது வழக்கம்.சேர்க்கை அதிகரிக்க அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் குழுவின் (பி.டி.ஏ.,) ஒப்புதலோடு தலைமையாசிரியர்கள் முயற்சியால், கலைப்பா டப்பிரிவு உருவாக்கப்படும். இதற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து தன்னார்வலர்கள் மூலம் ஊதியம் வழங்கப்படும்.மாதந்தோறும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடந்த காலங்களில் சில பள்ளிகளில், தற்காலிகமாக உருவாக்கப்பட்ட கலைப்பாடப்பிரிவுகள் மூடப்பட்டன.

    இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சமீபத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு அறிவியல், கலைப்பாடப்பிரிவுகளுக்கு பிரத்யேகமாக 9 நிரந்தர பணியிடங்கள் உருவாக்கித் தரப்படுகிறது.ஆனால் பல ஆண்டுகளாக செயல்படும் பள்ளிகளில், கலைப்பாடப்பிரிவில் நிரந்தர பணியிடம் உருவாக்கித் தருவதில் இழுபறி நீடிக்கிறது.

    சேர்க்கை அதிகமுள்ள இப்பாடப்பிரிவுகளுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க பரிந்துரைத்தாலும், கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக பலரும் புலம்புகின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், பி.டி.ஏ., மூலம் உருவாக்கப்பட்ட கலைப்பாடப்பிரிவுகள், அதில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் திரட்டி நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் கலைப்பாட பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பழைய பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவு உருவாக்கி தரப்படவில்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், தேர்ச்சி சதவீதம் உயர்த்தவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதே தீர்வாக அமையும் என்றனர்.அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சம்மந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதுடன், பள்ளிகளில் அவர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்ந்துள்ளது.

    ஆனால் இப்பணிகளை மேற்கொள்ள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்ற சூழலில் தன்னார்வல அமைப்பினர், நலன் விரும்பிகளிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதைத்தான் அரசும் ஊக்கு விக்கிறது.

    இருப்பினும் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு முழுமையடையவில்லை. சமீபத்தில் அவிநாசி மற்றும் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்க கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்படுகிறது என்று எழுந்த புகாரையடுத்து இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கவனம் செலுத்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இன்முகத்துடன் வந்து கல்வி பயின்று செல்வதற்குரிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, தங்கள் பிள்ளைகளை மாணவ, மாணவிகள் திருப்தியுடன் அனுப்பி வைக்கின்றனரா என்பதை கள ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தினம் தினம் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். தரத்திலுள்ள ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்த போது பள்ளிக்கல்வி இயக்குநராக பணிபுரிபவர் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார். இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு ஆசிரியர்களின் பணி சம்மந்தமான அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல் மாணவர்களின் உளவியல் சம்மந்தமான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்.

    தமிழ்நாடு கல்வித்து றையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்தவரை பள்ளி கல்வித்துறை சிறப்பாக இருந்தது. ஆனால் கல்வித்துறையில் இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதில் இருந்து கல்வித்துறையில் பல குழப்பங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்யப்படாமல் இருப்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி அப்பணியிடத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அனுபவமிக்க இணை இயக்குநர்களை பள்ளிக்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் போலீஸ் துறையில் காலியாக உள்ள 615 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கு 1-6-2023 முதல் 30-6-2023 வரை www.tnusrb.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

    தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்விற்கு தயார் செய்யும் விதம், பாடக்குறிப்பு உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது
    • தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர்ஈ.பி.அ.சரவ ணன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பொறு ப்பேற்றுள்ள மு.பெ.சாமிநாத னிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து ள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்மொழி வளர்ச்சி க்காக உருவாக்கப்பட்ட துறையானா 'தமிழ் வளர்ச்சித்துறை பல மாதங்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளாக துணை இயக்குனர் நியமிக்கப்படவில்லை தேனி மாவட்ட அதிகாரியே கூடுதல் பொறுப்பாக திருப்பூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மாதத்துக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே திருப்பூர் வந்து செல்கிறார். எனவே திருப்பூர் மாவ ட்டத்தில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பணியிடத்தை விரைவாக நிரப்ப தீர்வு கண்டு தமிழ் மொழி மென்மேலும் வளர்ந்து சிறக்க தாங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் இரவு என்று பாராமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் பானு, குத்தாலம் லதா உள்ளிட்ட பொருப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

    • திருவிடைமருதூா் தாசில்தார் சந்தனவேல் கும்பகோணம் முத்திரை கட்டண தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
    • பேராவூரணி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தரணிகா பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:-

    திருவிடைமருதூா் தாசில்தார் சந்தனவேல் கும்பகோணம் முத்திரைக் கட்டண தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் திருமால் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரியும் ட சுசீலா திருவிடைமருதூா் தாசில்தா ராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தரணிகா பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றும் பாஸ்கரன் பேராவூரணி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

    திருவையாறு ஆதிதிரா விடா் நல தனி தாசில்தார் பூங்கொடி பாபநாசம் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றும் மதுசூதனன் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணியாற்றும் பொ்சியா பூதலூா் தாசில்தா ராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக (நிலம்) தனி தாசில்தார் நெடுஞ்செழியன் திருவையாறு ஆதி திராவிட தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.

    சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது. சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள்.

    இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம் மாறி வேலையில் சேரமாட்டார்கள்.

    இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும். ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.

    அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
    நாகை அருகே பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள்-ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இரண்டாம் வகுப்பு ஆசிரியையாக இசபெல்லா ஜூலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பள்ளி ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லா ஜூலியை சூழ்ந்து கொண்டு, நீங்கள் வேறு பள்ளிக்கு போகக்கூடாது என்று கூறி அவரது கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    மாணவ, மாணவிகளின் பாசப்போராட்டத்தை கண்ட ஆசிரியையும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கு நடைபெற்ற மாணவர்கள், ஆசிரியையின் பாச போராட்டத்தை கண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டனர். மாணவ, மாணவிகள் ஆசிரியையை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. 
    ×