search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில், அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    மயிலாடுதுறையில் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறையில், அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

    • காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத் தலைவர் பேபி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் இரவு என்று பாராமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் பானு, குத்தாலம் லதா உள்ளிட்ட பொருப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×