search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த கோரிக்கை
    X

    கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த கோரிக்கை

    • கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தினம் தினம் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். தரத்திலுள்ள ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்த போது பள்ளிக்கல்வி இயக்குநராக பணிபுரிபவர் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார். இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு ஆசிரியர்களின் பணி சம்மந்தமான அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல் மாணவர்களின் உளவியல் சம்மந்தமான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்.

    தமிழ்நாடு கல்வித்து றையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்தவரை பள்ளி கல்வித்துறை சிறப்பாக இருந்தது. ஆனால் கல்வித்துறையில் இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதில் இருந்து கல்வித்துறையில் பல குழப்பங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்யப்படாமல் இருப்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி அப்பணியிடத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அனுபவமிக்க இணை இயக்குநர்களை பள்ளிக்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×