search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், நாளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சையில், நாளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு

    • கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் போலீஸ் துறையில் காலியாக உள்ள 615 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கு 1-6-2023 முதல் 30-6-2023 வரை www.tnusrb.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.

    தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்விற்கு தயார் செய்யும் விதம், பாடக்குறிப்பு உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறும்.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×