search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NCP"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா மாநிலத்தில பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.
    • சுப்ரியா சுலே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராமதி தொகுதி அஜித் பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. 48 தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியது.

    இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா தலையிட்டு இரண்டு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது.

    பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்குகிறது. தற்போது சரத் பவார்- அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.

    • சரத் பவார் கட்சியை உடைத்து, அதை கைப்பற்றிக் கொண்டவர் அஜித் பவார்.
    • அரசியல் ரீதியாக மோதல் இருந்து வரும் நிலையில் சரத் பவார் மகள், அஜித் பவாரை சந்திக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.

    இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அந்த கட்சியை கைப்பற்றிக் கொண்டார் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியதுடன், கடிகாரம் சின்னமும் அவருக்கு கிடைத்துள்ளது.

    இதனால் சட்டப்போராட்டம் முடியும் வரை சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்த்ரா பவார் என்ற பெயரில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

    இரு கட்சி தலைவர்களுக்கும் இடையில் கட்சி ரீதியில் மோதல் இருந்து வந்த நிலையில், இன்று காலை சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான அஜித் பவாரை சந்திக்க வந்தார்.

    இரு கட்சிகளுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில் திடீரென சுப்ரியா சுலே அஜித் பவாரை சந்திக்க வந்தது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.

    எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    இந்த நிலையில் சுப்ரியா சுலே கூறியதாவது:-

    அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர். புனே மாவட்டத்தின் பாதுகாவலர் மந்திரியும் கூட. உஜ்ஜானி, நஜார் அணைகள் என்னுடைய தொகுதியான பாராமதியில் உள்ளது. தற்போது இந்த அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளத. இது குடிநீர் மற்றும் பாசன நீர் தொடர்பாக கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என சந்திப்பின்போது வேண்டுகோள் விடுப்பேன்.

    எனது தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து அஜித் பவாரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரை சந்திக்க வந்தேன்.

    இவ்வாறு சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    • தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி- அஜித் பவார் அணி என பிரிந்து செயல்பட்டது.
    • அஜித் பவார் அணிதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அஜித் பவார் தலைமையில் இயங்கும் அணிக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என அங்கீகரித்தது. மேலும், கடிகாரம் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்தது.

    இதனால் சரத் பவார் தனது அணிக்கு "தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார்" கட்சி எனப் பெயர் சூட்டினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என சரத் பவார் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணியினர் முறையீடு செய்துள்ளனர்.

    முன்னதாக,

    அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து சென்று தனியாக செயல்பட்டு வந்தார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலர் அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.

    கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்படும் அஜித் பவார் உள்ளிட்டோரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்தனர். ஆனால், சபாநாயகர் சரத் பவார் அணியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அதனைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்தது.

    • மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்.
    • அமலாக்கத்துறை அலுவலகம் வரை சுப்ரியா சுலே உடன் சென்றார்.

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ரோகித் பவார். இவர் சரத் பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ.-வாகவும் உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

    அதன்படி இன்று காலை ரோகித் பவார் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே உடன் சென்றார். அமலாக்கத்துறை அலுவலகம் வரை சென்ற அவர், ரோகித் பவார் கையில் அரசியலமைப்பு நகலை வழங்கினார். ரோகித் பவார் அலுவலகம் உள்ளே சென்ற நிலையில், உண்மையே வெல்லும் என சுப்ரியா சுலே தெரிவித்தார்.

    தெற்கு மும்பையில் இருந்து நூற்றுக்காணக்கான தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன் கூடியிருந்தனர். ரோகித் பவாருக்கு ஆதராவாக முழக்கமிட்டனர். அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?
    • நான் சொல்வது சரியா அல்லது இல்லை?

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிதேந்திர அவாத் மகாராஸ்டிரா மாநிலம் ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    கடவுள் ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?. நான் சொல்வது சரியா அல்லது தவறா? (மக்களை நோக்கி கேள்வி கேட்டார்.)

    மேலும் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி ஓபிசி என்பதால் அவர்களால் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு சாதிவெறிதான் உண்மையான காரணம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரே கட்சி ஆட்சியிலும் உள்ளது. எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது
    • உலகத்தில் இதுபோன்று நான் பார்த்தது இல்லை

    மகாராஷ்டிர மாநிலத்தின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு நிகழ்ச்சில் கலந்து கொண்டபோது பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை, கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளன. எதிர்க்கட்சியாகவும் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலை, நம்முடைய மாநிலத்தில் மட்டுமே உள்ளன. உலகில் வேறு எங்கேயும் இல்லை.

    இந்த அபத்தமான, அசிங்கமான அரசியல் நிலையை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. சிவசேனா கட்சியின் ஒரு கோஷ்டி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு கோஷ்டி ஆட்சி அதிகாரத்தில் உள்ளன. அந்த கட்சிகளின் மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சிகளாக உள்ளனர்.

    இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    கடந்த வருடம் சிவசேனா காட்சியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அதிகமான எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியை தன்வசமாக்கினார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்பட்டு வரும் அஜித் பவார், 8 எம்.எல்.ஏ.-க்களுடன் ஆட்சியில் இணைந்துள்ளார்.

    • ரூ.2.5 லட்சம் கோடி அதானி குழுமம் வருவாய் ஈட்டி வருகிறது
    • பொதுமக்கள் பாக்கெட்டிலிருந்து பணம் கையாடப்பட்டு வருகிறது

    குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த கவுதம் அதானி (61).

    உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.

    இந்நிலையில் அதானி குழுமம், 2019லிருந்து 2021 வரை உள்ள காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விலைக்கு இறக்குமதி செய்து மறைமுக மோசடியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவில் பயனர்களுக்கான மின்சார கட்டணம் உயர்ந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதற்கிடையே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 25 கட்சிகளை கொண்ட எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒரு அங்கமான மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன் கவுதம் அதானியை சந்தித்து பேசியிருந்தார்.

    இச்சந்திப்பு குறித்து இந்திய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் புது டெல்லியில், "அதானி சந்திப்பு பற்றி ஏன் நீங்கள் சரத் பவாரிடம் கேட்கவில்லை?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது:

    நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை பாதுகாக்கவும் இல்லை. ஆனால், நரேந்திர மோடிதான் இந்திய பிரதமர். அவர்தான் அதானியை பாதுகாத்து வருகிறார். எனவே நாங்கள் அவரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இம்முறை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதானி பாக்கெட்டுக்கு பணம் போகிறது. உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் எதுவும் நடைபெறவில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • ஜூலை 2023ல் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு வெளியேறினார்
    • சின்னத்தை மட்டுமே நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை என சரத் பவார் கூறினார்

    1999 ஜூன் மாதம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் (82) தொடங்கியது, தேசிய காங்கிரஸ் கட்சி (NCP).

    கடந்த ஜூலை 2023ல் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும், சரத் பவாரின் உறவினருமான அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் மகராஷ்டிர மாநிலத்தின் ஆளும் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அம்மாநில துணை முதல்வரானார்.

    இதன் காரணமாக என்.சி.பி. இரண்டாக உடைந்தது. கட்சியின் சின்னத்திற்கும் பெயருக்கும் உரிமை கொண்டாடிய அஜித் பவார், இது தொடர்பாக தனக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் பிற பிரமுகர்களின் ஆதரவு கடிதத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

    சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, "கட்சியில் பிளவு ஏதும் இல்லை" என கூறி வந்தார்.

    தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்த முடிவையும் தான் ஏற்பதாக அஜித் பவார் கூறி வந்தார்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்க, தேர்தல் ஆணையத்தின் டெல்லி அலுவலகத்திற்கு வர இரு பிரிவு தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

    இதையடுத்து, டெல்லி அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவத் மற்றும் பிற முக்கிய தலைவர்களுடன் சரத் பவார், இன்று வருகை தந்தார். "வாக்காளர்கள் கட்சி சின்னத்தை மட்டுமே நம்பி வாக்களிப்பதில்லை" என முன்னரே சரத் பவார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அஜித் பவார் தரப்பில் பிரபல வழக்கறிஞர்கள் மகேஷ் ஜெத்மலானி மற்றும் மனிந்தர் சிங் ஆஜராகின்றனர். சரத் பவார் தரப்பில் காங்கிரஸ் முக்கிய தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகிறார்.

    இரண்டு ஆணையர்கள், தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் தனியாக செயல்பட்டு வருகிறார்
    • அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

    அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

    நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று சரத் பவார் தெரிவித்து வருகிறார். அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என்று அஜித் பவார் தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே இருதரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வருகிற 6-ந்தேதி (அக்டோபர்) இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அன்றைய தினம் இருதரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் சரத் பவார் பிரிவுக்கும், அஜித் பவார் பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் "எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்'' என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டே அரசில் இணைந்தது மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக...
    • அனைத்து மக்களையும் பாதுகாப்பதுதான் எங்களது பணி

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பீட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அஜித் பவார், பேசியபோது "நாங்கள் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசில் இணைந்தது, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான். நாங்கள் இந்த முடிவை மாநில வளர்ச்சிக்காக எடுத்தோம்.

    அரசியலில், நிரந்தர எதிரியும் கிடையாது. நண்பனும் கிடையாது. நாங்கள் மகாயுதி கூட்டணியில் உள்ளோம். எங்களுடைய பணி அனைத்து சாதி மற்றும் மத மக்களை காப்பாற்றுவதுதான். இதை மகாராஷ்டிர மாநிலத்தை ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.

    நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக பணிபுரிவோம். நிலத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. நீர்வளத்துறை மந்திரியாக இருக்கும்போது இதற்கான ஏராளமான பணிகளை செய்துள்ளேன்" என்றார்.

    • அஜித் பவார் தலைமையிலான குழு தனியாக இயங்கி வருகிறது
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என சரத் பவார் உறுதியாக கூறுகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரசியலில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சரத் பவாரே, தனது கட்சியை தக்கவைத்துக் கொள்வதில திண்டாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சி பிளவுப்படும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அதிகமாக யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும்.

    ஆனால், சரத் பவார் எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சிகள் என்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சில எம்.எல்.ஏ.-க்கள் விலகியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் அரசியல் கட்சி என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடைய பெயர்கள் கூறி, பிரிந்து சென்றவர்களுக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

    நேற்று சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. அஜித் பவார் அதன் தலைவராக தொடர்கிறார்'' என்றார்.

    இதற்கு முதலில் பதில் அளித்த சரத் பவார், ''இந்த விசயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை'' எனக் கூறியிருந்தார். பின்னர், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

    கடந்த ஜூலை 2-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டசபை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மந்திரிசபையில் இணைந்தனர்.

    • சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தது கூட்டணியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
    • சரத் பவார் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பதாக வதந்தி வெளியானது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார்.

    இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக சந்தித்துள்ளனர். முன்னதாக ஒருமுறை சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசிய சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.

    ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.

    சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.

    சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

    ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன.

    இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நானா பட்டோல் கூறியதாவது:-

    இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை'' என்றார்.

    ×