என் மலர்
நீங்கள் தேடியது "மாநகராட்சி தேர்தல்"
- மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது.
- ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்
இஸ்லாமியர்களின் உருது மொழிக்கு எதிராக செயல்படும் பாஜக தேர்தலுக்காக உருது மொழியில் பிரசாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது. பாஜகவின் எதிர்ப்புகளுக்குப் மத்தியில் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தனது தொகுதியில் உருது மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை உருது மொழியில் அச்சிட்டு வாக்குகளை கோரியுள்ளார். அவரது படமும் உள்ளூர் தலைவர்களின் படங்களும் நோட்டீஸ்களில் அச்சிடப்பட்டுள்ளன.
பாஜக சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எம்என்எஸ் கட்சி, "அப்படியானால் இதுதான் பாஜகவின் தீவிர இந்துத்துவா அரசியலா? ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், "நேற்று வரை, பாஜக உருது மொழியை வெறுத்தது. அது ஒரு முழு சமூகத்தையும் அவமதிப்பதற்காக இருந்தது. உருது பேசுபவர்களைப் பற்றி மோசமான செய்திகளைப் பரப்பியது. ஆனால் இன்று அவர்களே முஸ்லிம் வாக்குகளுக்காக உருது சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். வாக்குகளைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள்" என்று சாட்டியுள்ளது.
சென்னை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது.
இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.
பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பதவிகளுக்கு 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டன. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர்கள், கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதன் அடுத்த கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற தேர்தல் நடத்தப்பட உள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அந்த பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
எந்தெந்த வார்டுகள் ஆண் வார்டு, பெண் வார்டு, பொது வார்டு உள்ளிட்ட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்துவது, 2-வது கட்டமாக எந்தெந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது என்ற அட்டவணை தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த பணி ஓரிரு நாளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வருகிற 25-ந் தேதி தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்திருந்தது.
ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வெள்ளசேத பயிர் நிவாரணம், பொங்கல் தொகுப்பு என அறிவித்து தி.மு.க. தேர்தலுக்கு தயாராகி விட்டது. ஓரிரு நாளில் வெள்ள நிவாரண உதவி அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து தி.மு.க. விருப்ப மனுவும் வாங்கி வருகிறது.
எனவே இம்மாத இறுதியில் தேர்தல் தேதி வெளியாகி விடும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி உள்ளிட்ட தரம் உயர்த்தப்பட்ட மாநராட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடைபெறாது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட 15 பழைய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மட்டுமே இப்போது தேர்தல் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... விவசாய சங்கங்கள் இன்று மீண்டும் ஆலோசனை- பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த முடிவு?
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலையில் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று மதியம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம், தென் மண்டல கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சசிகலா சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படியுங்கள்... 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து






