என் மலர்
இந்தியா

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 8 பிஎஸ்எஃப் வீரர்கள் காயம்
- பதற்றத்தை பயன்படுத்தி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஏற்கனவே இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் 8 வீரர்கள் தற்போது காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவம முகாமுக்கு சிகிச்சைக்கான கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை சுமார் 2000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இந்த எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.
Next Story






