என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தஞ்சையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை- கலெக்டர் உத்தரவு
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
- தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (ஞாயிற்றுகிழமை), நாளைமறுநாள் (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே, தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story