என் மலர்
நீங்கள் தேடியது "தடை"
- இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
- விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆபத்து அதிகமாக இருப்பது தெரிந்தால் அவற்றுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வகையில் தற்போது 100 மி. கிராமுக்கு மேலான 'நிம்சுலைடு' மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அதிகமாக காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்,
"100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன" என கூறப்பட்டுள்ளது.
- சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கவலைகளை சீரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடியரசு தினமான ஜனவரி 26 முதல் இந்த தீர்மானம் அமலுக்கு வருகிறது
- குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தின் கீழ் உள்ள 15 கிராமங்களில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் கேமராக்கள் பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்களை பயன்படுத்த அக்கிராம பஞ்சாயத்துகள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காசிபூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இக்கிராமங்களின் தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒரு சமூக கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தடை ஜலோர் மாவட்டத்தின் காஜிபுரா, பாவ்லி, கல்ரா, மனோஜியா வாஸ், ராஜிகாவாஸ், டட்லாவாஸ், ராஜ்புரா, கோடி, சிட்ரோடி, அல்ரி, ரோப்சி, கானாதேவல், சாவிதர், பின்மாலின் ஹாத்மி கி தானி மற்றும் கான்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களுக்கு பதில் மருமகள்கள் மற்றும் இளம் பெண்கள் பேசுவதற்கு கீபேட் ஃபோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்,
இது தவிர, பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு மொபைல் போன்கள் தேவைப்பட்டால் வீட்டில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், சமூக நிகழ்வுகள் அல்லது பக்கத்து வீட்டிற்கு கூட மொபைல் ஃபோன்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த மாதம் ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தங்கள் வீடுகளில் பெண்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இது அவர்களின் பார்வைத்திறனை பாதிக்கக்கூடும் என்றும் சவுத்ரி தெளிவுபடுத்தினார். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விதிமுறைகள் இக்கிராமத்தில் அடிக்கடி விதிக்கப்படுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு, ஒரு இளம் ஜோடி காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அக்கிராம தலைவர்கள் இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கிவைத்து உத்தரவிட்டனர். மேலும் மீண்டும் அவர்கள் ஊருக்குள் நுழைய ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த ஜோடி இதுதொடர்பாக காவல்துறையை அணுக, அதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பெரும்பாலான பெரியவர்களுடன் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் ஒரு சிலர் அவர்களை ஒதுக்கி வைத்ததை நியாயப்படுத்தினர். இதுபோல பல சம்பவங்கள் அக்கிராமத்தில் அரங்கேறி உள்ளன.






