என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல்: 3 பேர் பலி
    X

    உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல்: 3 பேர் பலி

    • ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதல்.
    • 101 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு.

    உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கீவில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடம் ரஷியாவின் டிரோன்கள் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. 9 மற்றும் 16 மாடி குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றினர். 74 வயது மூதாட்டியால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

    மேலும் 19 வயது இளம் பெண் மற்றும் அவருடைய 46 வயது தாய் ஆகியோரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 101 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியு்ளது. இதில் 90 டிரோன்களை தடுத்து நிறுத்தியும், தாக்கியும் அழித்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்து்ளளது. ஐந்து டிரோன்கள் நான்கு இடங்களை தாக்கியது எனவும் தெரிவித்துள்ளது.

    நேற்று ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி 4 பேர் கொலை செய்த நிலையில், இந்த தாக்குதலை ரஷியா நடத்தியுளள்து.

    Next Story
    ×