search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missiles"

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
    • அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.

    செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.

    இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.

    ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    "டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    • ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
    • கடந்த 3 நாளில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போா் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிது. இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.

    செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.

    உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

    சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.

    இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்தது.

    இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க ராணுவப் படை சுட்டு வீழ்த்தியது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
    • F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

    செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

    • இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
    • பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.

    ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார்.

    அப்போது அவர் பிரிட்டனில் "புயல் நிழல்" (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் "ஸ்கால்ப்-ஈஜி" (SCALP-EG) என்றும் அழைக்கப்படும் தொலைதூர வழிகாட்டி ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக அறிவித்தார்.

    உக்ரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர்தாக்குதலின் போது ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளை வலுவாக தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் அந்த நாட்டிற்கு உதவும் என கூறினார்.

    இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த மேற்கத்திய ஆயுதங்களிலுமே இதுதான் மிக தொலைவு சென்று தாக்கப்படும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டன், கடந்த மே மாதம் மேம்பட்ட திறன் கொண்ட ஆயுதங்களின் தொகுப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த ரஷியா "பிரிட்டன் நேரடியாக மோதலுக்கு இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது" என எச்சரித்தது. சில மேற்கத்திய நட்பு நாடுகள் கூட உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் சென்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்தது.

    தற்போது பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.

    பிரான்ஸின் வசம் இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 400 உள்ளது. ஆனால், எத்தனை ஏவுகணைகள் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று மேக்ரான் கூறவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
    • தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த ஆண்டு மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி உள்ளது.

    கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது. இதுவரை மொத்தம் 38 முறை இந்த சோதனை நடந்து உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக இன்று வடகொரியா 3 குறுகிய அளவிலான பாலிடிக்ஸ் ஏவுகணை ஏவி சோதணை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. தெற்கு பினாங் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சென்றது .

    இதேபோல் தென்கொரியா வான்வெளி பரப்பில் 5 டிரோன் விமானங்களை வடகொரியா பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் ஒரு டிரோன் விமானம் தெற்கு சியோல் பகுதியில் பறந்தது. இதையடுத்து தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது டிரோன் விமானங்களை அனுப்பி வடகொரியா அச்சுறுத்தி இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவாகி உள்ளது.

    வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து சகிக்க முடியாது. இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
    • ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷியா, பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏராளமான ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்தது. அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறி உள்ளது.

    பெல்கோரோட் பிராந்தியத்தின் வான்வெளியில் நான்கு அமெரிக்க 'ஹார்ம்' ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பிராந்தியம் உக்ரைன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.
    • தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

    இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தென் கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றிய அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.

    வடகொரியா நோக்கி 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, 'வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது' என்று தெரிவித்தது.

    இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, 'ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதி படுத்தி உள்ளோம்' என்றார்.

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வட கொரியா ஏவுகணையை வீசிய பிறகு ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளின் கீழ் பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • இந்தப் போரில் பல்வேறு வகையான ஏவுகணைகளை ரஷியா ஏவியுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

    ரஷியா ராணுவம் 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் பாதுகாப்புத்துறை சமீபத்தில் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் நகரில் ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பள்ளிக்கூடம் இடிந்து சேதமானது. தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் பணியினர் 3 உடல்களைக் கைப்பற்றினர். மேலும் காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மீட்புக்குழு தெரிவித்தது.

    ரஷிய ராணுவம் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • இந்தப் போரில் பல்வேறு வகையான ஏவுகணைகளை ரஷியா ஏவியுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நகரங்கள் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன ரஷிய படைகள்.

    இந்நிலையில், உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷியா 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

    குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தின.

    கப்பல் கட்டும் தளம் உள்பட தொழில்துறை கட்டமைப்புகள், பொது உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டன என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 32 ஏவுகணைகள் தயார் செய்யப்பட்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #PSLVE44 #ISRO
    திருமலை:

    இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    ஏவுகணைகள் செலுத்தும் முன்பாக இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இன்று இரவு கலாம் சாட்லைட் 2 விண்ணில் ஏவப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். அதைத் தொடர்ந்து சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி.இ44 என்ற கலாம் சாட்டிலைட் 2 இன்று இரவு 11.37 மணிக்கு விண்ணில் ஏவப்படும்.

    மேலும் இந்த ஆண்டு மட்டும் 32 ஏவுகணைகள் தயார் செய்யப்பட்டு விண்ணில் செலுத்தப்படும்.

    இவற்றில் மிகப்பெரிய விண்கலமான சந்திராயன் 2 அடங்கும். அது மட்டுமன்றி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும்.

    அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PSLVE44 #ISRO

    அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் என்று ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார். #Putin #Russia #Missiles #US
    மாஸ்கோ:

    2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன.

    ஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி ஏற்பட்டது.

    இதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும் தீவிரம் காட்டின.

    எந்த நேரத்திலும் இருநாடுகளும் மோதிக் கொள்ளலாம் என்று சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ரஷிய அதிபராக இருந்த கோர்பசேவ் சற்று இறங்கி வந்தார்.

    இதன் காரணமாக 1987-ம் ஆண்டு அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இதன்படி குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த பல பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரு நாடுகளுமே பெரும்பாலான அணு ஆயுதங்களை அழித்தன. புதிய ஆயுதங்களும் தயாரிக்கப்படவில்லை.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டு வருவதாகவும், எனவே, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ இன்னும் 60 நாட்களில் குறிப்பிட்ட ஏவுகணைகளை ரஷியா அழிக்காவிட்டால் நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று கூறினார்.

    நேட்டோ நாடுகளும் ரஷியா ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. நடுத்தர ஏவுகணைகளை தயாரிக்க அமைப்பு ஒன்றை ரஷியா உருவாக்கி உள்ளது. இதுவே ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நேட்டோ கூறி இருக்கிறது.

    அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் குற்றச்சாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

    தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.

    அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் பல நாடுகள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து உள்ளன.

    ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. எனவே, தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

    இவ்வாறு புதின் கூறினார். #Putin #Russia #Missiles #US
    ×