என் மலர்
நீங்கள் தேடியது "Missiles"
- ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
- 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.
வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.823 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.
ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்.ஜி.எம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறியதாவது:-
ராணுவ உபகரணங்களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆயுத விற்பனை இந்தோ- பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்க ளில் அரசியல் ஸ்திரத் தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத் திற்கு ஒரு முக்கிய சக்தியாகத் தொடர்ந்து இருக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியா பாதுகாப்பை மேம்படுத்தும்.
இந்த விற்பனை இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல் களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும். அதன் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல் களைத் தடுக்கும். இந்த ஆயுதங்களை இந்தியா தனது ஆயுதப் படைகளில் இணைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
எப்.ஜி.எம். 148 ஜாவெலின் ஏவுகணைகள், டாங்கி போன்ற இலக்குகளை நீண்ட தூரத்தில் இருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது.
- பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.
இந்தியா தனது வான்பாதுகாப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பை பயன்படுத்தி வருகிறது. சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் வான் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்காக ரஷியாவிடமிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வருகிறது.
- அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
- வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டகாக பரவிய செய்தியை அமெரிக்க அரசு மறுத்துள்ளது.
புதிய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பராமரிப்பதற்கு மட்டுமே என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்க போர் விவகாரங்கள் துறை கடந்த செப்டம்பர் 30 அன்று பல்வேறு நாடுகளுடனான ஆயுத ஒப்பந்தங்களின் திருத்தப் பட்டியலை வெளியிட்டது.
அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தங்களின் வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர AMRAAMS ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு விற்கும் ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 30, 2025 வெளியிடப்பட்ட அறிவிப்பு பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்களுக்கான ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதைக் குறிக்கிறது.
தவறான ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, இந்த குறிப்பிடப்பட்ட ஒப்பந்த திருத்தத்தில் எந்தப் பகுதியும் புதிய மேம்பட்ட வான் விட்டு வான் பாயும் நடுத்தர தூர ஏவுகணைகளையும் (AMRAAMS) வழங்குவதற்கானது அல்ல என்பதை நிர்வாகம் வலியுறுத்த விரும்புகிறது.
இந்த ஒப்பந்த திருத்தம், பாகிஸ்தானின் தற்போதைய திறன்களில் எதையும் மேம்படுத்த அல்ல" என்று தெரிவித்துள்ளது.
- லடாக்கில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
- குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிரித்வி-II, அக்னி-I சோதனை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா இன்று மூன்று ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. இந்த மூன்றும் வெற்றிகரமாக இலக்கை தாக்கி தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக்கில் சுமார் 4,500 மீ தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் புதிய ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஆகாஷ் மார்க்-I மற்றும் ஆகாஷ்-Is ஆகியவற்றின் புதிய வடிவம் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிரித்வி-II, அக்னி-I சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
- அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக இறக்குமதி செய்தது.
- இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது.
அவசரக்காலங்களுக்கான ஆயுத இருப்புக்காக ராணுவம் இந்த குறுகிய தூர தாக்குதல் ஏவுகணைகளை இறக்குமதி செய்தது.
சில வாரங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஏவுகணைகள் எல்லைக்கு கொண்டுசெல்லப்படுவதாகக் கூறப்படுகிறது..
ராணுவம் மொத்தம் ரூ. 260 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்துள்ளது. இவை மேற்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஏவுகணைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்லா-எஸ் என்பது இந்தியாவிடம் ஏற்கனவே உள்ள இக்லா ஏவுகணைகளின் மிகவும் மேம்பட்ட பதிப்பாகும்.
- வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.
- தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தென் கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றிய அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியா நோக்கி 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, 'வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது' என்று தெரிவித்தது.
இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, 'ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதி படுத்தி உள்ளோம்' என்றார்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வட கொரியா ஏவுகணையை வீசிய பிறகு ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளின் கீழ் பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.
- உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
- ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது
மாஸ்கோ:
உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷியா, பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏராளமான ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்தது. அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறி உள்ளது.
பெல்கோரோட் பிராந்தியத்தின் வான்வெளியில் நான்கு அமெரிக்க 'ஹார்ம்' ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பிராந்தியம் உக்ரைன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.
- வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
- தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது.
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த ஆண்டு மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி உள்ளது.
கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது. இதுவரை மொத்தம் 38 முறை இந்த சோதனை நடந்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று வடகொரியா 3 குறுகிய அளவிலான பாலிடிக்ஸ் ஏவுகணை ஏவி சோதணை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. தெற்கு பினாங் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சென்றது .
இதேபோல் தென்கொரியா வான்வெளி பரப்பில் 5 டிரோன் விமானங்களை வடகொரியா பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு டிரோன் விமானம் தெற்கு சியோல் பகுதியில் பறந்தது. இதையடுத்து தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது டிரோன் விமானங்களை அனுப்பி வடகொரியா அச்சுறுத்தி இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவாகி உள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து சகிக்க முடியாது. இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
- பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.
ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார்.
அப்போது அவர் பிரிட்டனில் "புயல் நிழல்" (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் "ஸ்கால்ப்-ஈஜி" (SCALP-EG) என்றும் அழைக்கப்படும் தொலைதூர வழிகாட்டி ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக அறிவித்தார்.
உக்ரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர்தாக்குதலின் போது ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளை வலுவாக தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் அந்த நாட்டிற்கு உதவும் என கூறினார்.
இந்த ஏவுகணை 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த மேற்கத்திய ஆயுதங்களிலுமே இதுதான் மிக தொலைவு சென்று தாக்கப்படும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன், கடந்த மே மாதம் மேம்பட்ட திறன் கொண்ட ஆயுதங்களின் தொகுப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு பதிலடி கொடுத்த ரஷியா "பிரிட்டன் நேரடியாக மோதலுக்கு இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது" என எச்சரித்தது. சில மேற்கத்திய நட்பு நாடுகள் கூட உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் சென்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்தது.
தற்போது பிரான்ஸ் வழங்கும் ஏவுகணைகளை உக்ரைன் தனது சுயபாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பதாக மேக்ரான் கூறினார்.
பிரான்ஸின் வசம் இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 400 உள்ளது. ஆனால், எத்தனை ஏவுகணைகள் உக்ரைனுக்கு அளிக்கப்படும் என்று மேக்ரான் கூறவில்லை.
- 10 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தியுள்ளனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்.
- F-18 போர் விமானம் இந்த தடுப்பு நடவடிக்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.
செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப் படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு ஏவுகணை, டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

10 மணி நேர கால இடைவெளியில் 12 டிரோன்கள், மூன்று கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு தரைவழி தாக்குதல் ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
- ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
- கடந்த 3 நாளில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போா் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிது. இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி.
செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள்.
உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவுடன் ஐரோப்பாவையும், வட அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய வா்த்தகப் பாதையை ஹவுதி அமைப்பினா் சீா்குலைத்துள்ளனா். இந்தப் பாதையையே பல கப்பல்கள் தவிா்க்கத் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கும் வழிவகுத்துள்ளது.
இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் செங்கடல் பகுதியைக் கடந்த ஒரு கப்பல் மீது ராக்கெட் மற்றும் டிரோன் உள்ளிட்ட தாக்குதல்களை ஹவுதி அமைப்பினா் நடத்தினர். அதனை முறியடிக்கும் விதமாக அமெரிக்க ராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்தது.
இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க ராணுவப் படை சுட்டு வீழ்த்தியது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஏமன், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கிறது
- அமெரிக்க கடற்படை டெஸ்ட்ராயர் போர்கப்பல்களை பயன்படுத்தி தாக்குதலை முறியடித்தது
மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு.
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரிடையே தொடங்கிய போர் 90 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏமன், கத்தார், லெபனான் மற்றும் ஈரான், ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் நாடுகள்.
செங்கடல் (Red Sea) பகுதியில் அமெரிக்கா மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகள் "ஆபரேஷன் பிராஸ்பரிட்டி கார்டியன்" (Operation Prosperity Guardian) எனும் அப்பகுதி கடல் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இணைந்துள்ளன.
இந்நிலையில், நேற்று முன்னிரவு 09:15 மணியளவில் தெற்கு செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து ஏமனின் ஹவுதி அமைப்பினர் 21 ஏவுகணைகளால் தாக்க முனைந்தனர்.
இவற்றில் 18 ஒரு வழி டிரோன்களும், 2 கப்பல்களை தாக்கும் க்ரூயிஸ் ஏவுகணைகளும் (cruise missiles) மற்றும் கப்பல்களை தாக்கும் பெரும் தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றும் அடங்கும்.
ஆனால், ஹவுதியின் இத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்டு அந்த தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.
மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.
"டெஸ்ட்ராயர்" (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.






