என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நடப்பாண்டில் 4.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
- இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி பணியிலும் அதேபோன்று 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே குறுவை நெல் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2022 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 4.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முது நிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு 519 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் மட்டும் 2.70 லட்சம் மெட்ரிக் டென் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாயிக ளிடமிருந்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்ட வருவதாக தெரிவித்தார்.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு யாரேனும் ஊழியர்கள் கையூட்டு பெற்றால் அது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்