search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical connection"

    • சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளது தெரியவருகிறது
    • உடனடியாக மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி மடவா மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி ராஜ்குமார்.

    இன்று காலை சீர்காழி பகுதியில் மழை பெய்தது. அப்போது இவரது வீட்டை மின்னல் தாக்கியது.

    அதில் வீட்டில் உள்ள அனைத்து மின்சார பொருட்களும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

    மேலும் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் இருந்து குழந்தைகளை மீட்டுக்கொண்டு அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினார்.

    இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அடிப்படையில் தாசில்தார் இளங்கோவன் நேரடியாக களத்தில் ஆய்வு செய்தார்.

    மேலும் மின்னல் தாக்கிய வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள சுமார் 10 வீடுகளில் மின்சாதன பொருள்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது .

    ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, மண்டல துணை வட்டாட்சியர் பாபு, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் பாரிவள்ளல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து தாசில்தார் தெரிவிக்கையில் சேத விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, இழப்பீடு பெற்று தர மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

    மேலும் வட்டாட்சியர் இளங்கோவனால் தமிழ்நாடு மின்சார வாரிய உதவிப் பொறியாளரிடம் உடனடியாக மின் இணைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டது.

    • லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
    • யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மின்நுகர்வோர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். குறிப்பாக மின்வாரியம் லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டிடம் கட்டும் போது தற்காலிக மின் இணைப்பு வழங்குகிறது. ஒருமுனை இணைப்புக்கு 2,200 ரூபாய் டெபாசிட், மும்முனை இணைப்புக்கு 4,400 ரூபாய் டெபாசிட் செலுத்தி இணைப்பு பெற வேண்டும். யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் மாதம் 1,200 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.

    தற்காலிக மின் இணைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கூடுதல் டெபாசிட் தொகை வழங்கப்படும். கடந்த சில நாட்களாக மாதா மாதம், கூடுதல் டெபாசிட் என்ற பெயரில், அதிக தொகை வசூலிப்பதாக மின்நுகர்வோர் அமைப்புகள் புகார் அளித்தன. மின்சார வாரியம் பல்வேறு வகையில் கட்டண உயர்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்காலிக இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவது குறித்து முறையிடப்பட்டது. 

    • இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார்
    • இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் உதயகுமார்(வயது20). இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி வீடு இருட்டாக இருக்கிறது என்று நினைத்து ஸ்விட்ச் போட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • மின்சாரத்துறை அதிகாரிகள் உத்தரவு
    • கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதால் நடவடிக்கை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக அருகில் இருந்த நிலத்தில் விடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து கழிவு நீரை நிலத்தில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அதிரடி உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்
    • மின்வாரிய அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முதல் அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

    விரைவு (தட்கல்)முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே, வேலூர் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய கோட்டங்களில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளில் விருப்பம் உள்ளவர்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறலாம்.

    இதற்காக தங்கள் பகுதி மின்வாரிய செயற் பொறியாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள வீட்டுமின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை சிறப்பு பெயர் மாற்றம் முகாம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    உடுமலை:

    உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய கோட்டங்களில் உள்ள வீட்டுமின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புகளுக்கு ஒரு மாதம் வரை சிறப்பு பெயர் மாற்றம் முகாம் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.இதுகுறித்து மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் இந்த பெயர் மாற்ற முகாம்கள் ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள் தவிர்த்து அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    *வளாகத்தின் விற்பனையின் காரணமாக பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள்*

    ஆதார் அட்டை, நகராட்சி மற்றும் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்துவரி ரசீது நகல்(அல்லது) விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல்(அல்லது) ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்(பரிசு பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை) அல்லது நீதிமன்ற உத்தரவு, நகராட்சி மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு விற்பனை பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் (அல்லது)ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்( பரிசு பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம் போன்றவை)அல்லது நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    *இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள்*

    செட்டில்மெண்ட் பத்திரம் (அல்லது) பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்த சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.ஆதார் அட்டை, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரிரசீது நகல் (அல்லது) உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல், நகராட்சி, மாநகராட்சி அல்லாத இதர பகுதிகளுக்கு உரிமை ஆவணத்தின் ஜெராக்ஸ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    *குழு வீடுகளில் பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளில் (வீதப்பட்டி ஐடி.,) பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள்*

    பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுஸிங்கில் உள்ள பொது சேவைகளுக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பெயரில் பதிவுச்சான்றிதழ் அல்லது வளாகம் அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே வீட்டு மின்இணைப்பு மற்றும் பொது மின்இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • கீழக்கரை மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
    • மாலை மலர் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு மருத்துவ மனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்காத தால் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது.

    கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இது குறித்து கடந்த 13-ந் தேதி மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து தற் போது எக்ஸ்ரே மெஷினுக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டு உள்ளது.

    இதனால் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருவதால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செய்தி வெளியிட்டு சம்பந்த பட்ட அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு சென்ற மாலை மலர் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • தஞ்சை கோட்டம், திருவையாறு உபகோட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு குறித்து கூட்டாய்வு செய்தனர்.
    • 5 மின் இணைப்புகளை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.45 ஆயிரத்து 985 அபராதம் விதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் கலைவேந்தன் தலைமையில் தஞ்சை மின் பகிர்மான வட்டம், தஞ்சை கோட்டம், திருவையாறு உபகோட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு குறித்து கூட்டாய்வு செய்தனர்.

    உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், வருவாய் பிரிவு அதிகாரிகளை கொண்ட 10 குழுவினர் 527 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர்.

    இதில் 5 மின் இணைப்புகளை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.45 ஆயிரத்து 985 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து மின் நுகர்வோர்களும் மின் இணைப்புகளை முறையாக பயன்படுத்துமாறும், மின் கட்டணத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறும் தஞ்சை செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டார்.

    • வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலியானார்.
    • முருகன் கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அடுத்த மங்களூர் காட்டுக்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
    • மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தமிழக மின்சார வாரியம், மானியம் பெறும் இணைப்புகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில், மின்நுகர்வோரின் ஆதார் விவரம் இணைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஆதார் இணைப்பு பணி ஆன்லைன் வாயிலாக நடந்தது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் இணைப்பு பணி மந்தமாக நடந்தது. அரசு அளித்த அவகாசத்துக்குள் ஆதார் இணைப்பு பணி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்தது. இருப்பினும் ஒரே உரிமையாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.

    கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக உரிமையாளர் ஆதார், அனைத்து இணைப்புகளிலும் இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளில், ஒரே குடும்ப உறுப்பினரின் ஆதார் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீடு வீடாக சென்று வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் விவரம் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.அதற்கு பிறகும் இரட்டைப்பதிவு போன்ற ஒரே ஆதார் பதிவு விவரங்களை சேகரித்து மீண்டும் தற்போது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் வாரிய அறிவிப்பை ஏற்று அனைவரும் ஆதார் இணைத்தனர். ஒரே உரிமையாளரின் பல கட்டடங்களுக்கு ஆதார் இணைப்பதில் சிக்கல் இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவரின் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்நுகர்வோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.

    • தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவி டர்களுக்கு 900 எண்ணிக்கை யும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையிலும் மொத்தம் 1000 விவசா யிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27 ஆயரத்து 500-ம், 10 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோ லை அளிப்பவ ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண். 106, முதல் தளம், பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை-625 020 என்ற முகவரியிலும், 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது. இந்த மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின் மாற்றியை கீழே தள்ளியதில் அதிலிருந்த சுமார் 200 லிட்டர் ஆயில் கீழே கொட்டி வீணாகியது. தொடர்ந்து மின் மாற்றியை கழற்றி அதனுள் இருந்த சுமார் 625 கிலோ தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தியாகதுருகம் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகை யில், மர்ம நபர்கள் மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை திருடி சென்ற தால் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள மின் மாற்றிகளுக்கு விவசாயமின் இணைப்பை பிரித்து வழங்க நடவடிக்கை என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×