என் மலர்

    நீங்கள் தேடியது "Electrical connection"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி சவுண்டு சர்வீஸ் உரிமையாளர் பலியானார்.
    • முருகன் கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அடுத்த மங்களூர் காட்டுக்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த கனகாவின் வீட்டில் நேற்று மைக் செட் மற்றும் டியூப் லைட் கட்டி மின் இணைப்பு கொடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
    • மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தமிழக மின்சார வாரியம், மானியம் பெறும் இணைப்புகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில், மின்நுகர்வோரின் ஆதார் விவரம் இணைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஆதார் இணைப்பு பணி ஆன்லைன் வாயிலாக நடந்தது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் இணைப்பு பணி மந்தமாக நடந்தது. அரசு அளித்த அவகாசத்துக்குள் ஆதார் இணைப்பு பணி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்தது. இருப்பினும் ஒரே உரிமையாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.

    கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக உரிமையாளர் ஆதார், அனைத்து இணைப்புகளிலும் இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளில், ஒரே குடும்ப உறுப்பினரின் ஆதார் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீடு வீடாக சென்று வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் விவரம் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.அதற்கு பிறகும் இரட்டைப்பதிவு போன்ற ஒரே ஆதார் பதிவு விவரங்களை சேகரித்து மீண்டும் தற்போது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் வாரிய அறிவிப்பை ஏற்று அனைவரும் ஆதார் இணைத்தனர். ஒரே உரிமையாளரின் பல கட்டடங்களுக்கு ஆதார் இணைப்பதில் சிக்கல் இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவரின் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்நுகர்வோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவி டர்களுக்கு 900 எண்ணிக்கை யும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையிலும் மொத்தம் 1000 விவசா யிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27 ஆயரத்து 500-ம், 10 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோ லை அளிப்பவ ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண். 106, முதல் தளம், பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை-625 020 என்ற முகவரியிலும், 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது. இந்த மின்மாற்றியில் இருந்து சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் மாற்றி கீழே கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து மின் மாற்றியை கீழே தள்ளியதில் அதிலிருந்த சுமார் 200 லிட்டர் ஆயில் கீழே கொட்டி வீணாகியது. தொடர்ந்து மின் மாற்றியை கழற்றி அதனுள் இருந்த சுமார் 625 கிலோ தாமிர கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தியாகதுருகம் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகை யில், மர்ம நபர்கள் மின் மாற்றியில் இருந்த தாமிர கம்பிகளை திருடி சென்ற தால் மின் மோட்டார் களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்கும் வரை அருகில் உள்ள மின் மாற்றிகளுக்கு விவசாயமின் இணைப்பை பிரித்து வழங்க நடவடிக்கை என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
    • ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்சார வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.

    இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா். திருப்பூா் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு மின் அலுவலகங்களிலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

    மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள் ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

    மேலும் நுகர்வோர் வசதிக்காக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களில் பிரத்தியேகமாக உள்ள வாட்ஸ்-அப் எண்ணிற்கு, மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால் அதை உடனே இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்தந்த நுகர்வோர், தங்கள் பகுதிக்கு கொடுக்கப்பட்ட செல் போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    நாகை - 9445853931, வெளிப்பாளையம்-9445853933, நாகூர் - 9445853934, திருமருகல்-9445853931, கங்களாஞ்சேரி- 9445853935, சிக்கல்-9445853940, வேளாங்கண்ணி- 9445853938, கீழ்வேளூர் -– 9448583936, திருக்குவளை- –9445853937, திருப்பூண்டி- –9445853939, வேதாரண்யம்-–9445853941, வாய்மேடு-9445853942, கரியா பட்டினம்- –9445853943, விழுந்தமாவடி- –9445853944 ஆகிய செல்போன் நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    அனைத்து மின் நுகர்வோர் இந்த சிறப்பு ஏற்பாடுகளை பயன்படுத்தி ஆதார் எண்களை இணைத்து வருகிற 31-ந் தேதிக்குள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    இடி, மின்னல், மழையின் போது ஏற்படும் மின்கசிவு மற்றும் மின் பழுது காரணமாக விபத்து நேரிடுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. இதை தவிர்க்க அனைத்து மின்நுகர்வோரும் ஆர்.சி.டி., எனப்படும் உபகரணத்தை அவரவர் மின் இணைப்பில் பொருத்திக் கொண்டால் விபத்து தவிர்க்க முடியும் என தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட மின்வாரியத்தினர் கூறியதாவது:-

    மின் இணைப்பில், இ.எல்.சி.டி., (எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் உபகரணம் ஏற்கனவே மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே மின் கசிவு மற்றும் மின் பழுதால் மின் விபத்து நேரிடுவது தொடர்வதால் அந்த உபகரணத்தை காட்டிலும் கூடுதல் பலன் தரும் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்த உபகரணத்தை மின் இணைப்பில் பொருத்திக் கொள்ளும் போது மின் கசிவு மற்றும் மின் பழுதின் போது மின்சாரம் பாய்ந்தால் உடனடியாக அந்த மின் இணைப்பு தாங்கிய மீட்டர் செயலிழக்கும் (டிரிப்). இதனால் காயம், உயிர் சேதம் ஏற்படாது.

    புதிதாக மின் இணைப்பு வாங்குவோர் உட்பட அனைவரும் கட்டாயம் ஆர்.சி.டி., உபகரணம் பொருத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சந்தையில் ஒருமுனை இணைப்புக்கான ஆர்.சி.டி., உபகரணம் 800 முதல் 1,200 ரூபாய், மும்முனை மின் இணைப்புக்கான ஆர்.சி.டி., 2,500 முதல் 2,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு மின்வாரியத்தினர் கூறினர்.கடந்த நாட்களில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பலவித மின் விபத்துக்களை சுட்டிக்காட்டி மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
    • சேதமடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார், மின்சார வாரியத்திற்கு கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பம் அகற்றப்பட்டு புதிதாக மின் கம்பம் நட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில்ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி செல்வகுமார் மின்வாரிய உதவி மின் பொறியாளர் (சீர்காழி மேற்கு) சுமத்திரா, ஊர் பொதுமக்கள் எலக்ட்ரீசியன் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது.
    • கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லையில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஆரம்பத்தில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்தது,

    பின்னர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கல்லூரிக்கு என்ற தனி இடத்தை தேர்வு செய்து, கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரசு கல்லூரியாக மாறியது. அரசு கல்லூரியாக மாறிய பின்பு, கல்லூரி கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டண தொகை 17 மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்தது.

    மின்சார வாரியம், பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பை துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மின் கட்டண தொகை அதிகமான நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நன்னிலம் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் நன்னிலம் அரசு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதனால் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கவுரவ பேராசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தரப்பட்ட மின்னிணைப்பு, மின் கட்டண பாக்கியை துண்டிக்கப்பட்டது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுஜித் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
    • சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ருத்திராயம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித் (வயது 22). பெயிண்டர். இவருக்கும் மகேஷ் என்ற பெண்ணுக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    கடந்த 20-ந் தேதி இவர் தனது மனைவியிடம் கஞ்சம்பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சுஜித் கஞ்சம்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் மர்மமான முைறயில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுஜித்தின் உடலை ஆய்வு செய்த போது அவர் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுஜித் திருட்டுத்தனமாக கள் எடுத்து குடிக்க மரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் விவசாயியான பனைமரத்து ேதாட்டத்தை சேர்ந்த துரை (59), ஊத்துபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (45), ருத்திராயம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் (49), கிழக்குவலவை சேர்ந்த பழனிசாமி (57), தாசம்பாளையத்தை சேர்ந்த வெங்கிட்டான் (50), கஞ்சம்பள்ளியை சேர்ந்த முத்துக்குமார் (50) ஆகியோரை கைது செய்தனர்.

    சுஜித் மின்சாரம் தாக்கி இறந்தது குறித்து முக்கிய குற்றவாளியான துரையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு போதிய வருமானம் இல்லை. இதனையடுத்து எனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் எடுத்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். அதன்படி 110 தென்னை மரத்தில் இருந்து கள் எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தேன். இரவு நேரத்தில் நான் வீட்டிற்கு சென்ற போது தென்னை மரத்தில் இருந்து கள் திருட்டு போனது. இதனை தடுப்பதற்காக 110 தென்னை மரங்களிலும் இரும்பு கம்பியால் சுற்றி இரவு நேரத்தில் மட்டும் அதில் மின்சாரம் செலுத்தி வந்தேன். இதனால் கள் திருட்டு குறைந்தது. கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போதையில் இருந்த சுஜித் கள் குடிப்பதற்காக எனது ேதாட்டத்துக்கு வந்துள்ளார். நான் விற்பனையை முடித்து விட்டு சென்று விட்டேன். இதனையடுத்து அவர் தென்னை மரத்தில் மின் இணைப்பு இருப்பது தெரியாமல் கள் எடுப்பதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி இறந்தார். மறுநாள் காலையில் ேதாட்டத்துக்கு சென்ற நான் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் கள் குடிக்க வந்த 5 பேருடன் சேர்ந்து சுஜித்தின் உடலை சிறிது தூரம் கொண்டு சென்று போட்டு விட்டு வந்தோம்.

    சட்டவிரோதமாக மின் இைணப்பு கொடுத்து இருந்தால் விசாரணை நடத்தி போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் தென்னை மரங்களில் சுற்றி இருந்த இரும்பு கம்பிகளை அகற்றினேன். பின்னர் ஏதும் தெரியாதது போல இருந்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். கைது செய்யப்பட்ட 6 பேர் மீது கொலைக்கு நிகரான உயிரிழப்பை ஏற்படுத்துதல், ஆதாரங்களை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print