search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "misused"

    • தஞ்சை கோட்டம், திருவையாறு உபகோட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு குறித்து கூட்டாய்வு செய்தனர்.
    • 5 மின் இணைப்புகளை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.45 ஆயிரத்து 985 அபராதம் விதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் கலைவேந்தன் தலைமையில் தஞ்சை மின் பகிர்மான வட்டம், தஞ்சை கோட்டம், திருவையாறு உபகோட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு குறித்து கூட்டாய்வு செய்தனர்.

    உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், வருவாய் பிரிவு அதிகாரிகளை கொண்ட 10 குழுவினர் 527 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர்.

    இதில் 5 மின் இணைப்புகளை தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.45 ஆயிரத்து 985 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அனைத்து மின் நுகர்வோர்களும் மின் இணைப்புகளை முறையாக பயன்படுத்துமாறும், மின் கட்டணத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறும் தஞ்சை செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டார்.

    ‘எனது ஆதார் தகவலை வைத்துக் கொண்டு, எனக்கு பாதிப்பை ஏற்படுத்துங்கள்’ என டிராய் தலைவர் ஆர்.எஸ் ஷர்மா சவால் விடுக்க, கிடைத்த பதிலடியால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு அவர் உள்ளாகியுள்ளார். #Aadhaar #TRAI #RSSharma
    புதுடெல்லி:

    ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வருகிறது. ஆதார் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாக அரசும் பலமுறை அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான சந்தேகங்கள் அவ்வப்போது வெடிக்கின்றன.

    இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும் ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொதுமேலாளருமான ஆர்.எஸ் ஷர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு, “உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த விவரத்தை வைத்துக் கொண்டு, எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள்' என பதிவிட்டிருந்தார்.

    ஆதார் திட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வரும் ஷர்மாவின் இந்த திடீர் சவால் ட்விட்டரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சவாலுக்கு பதிலடியாக, பிரான்ஸை சேர்ந்த எல்லியட் ஆல்டர்சன் என்ற பாதுகாப்பு நிபுணர், ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.

    “வெளியிடப்பட்ட தகவல்கள் போதும் என நினைக்கிறேன். அதனால் நிறுத்திக்கொள்கிறேன். ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பதை தற்போது புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்” என எல்லியட் ஆல்டர்சன் ஷர்மாவுக்கு பதில் கூறியிருந்தார்.



    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல், “செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக நான் சவால் விடுக்கவில்லை. என்னுடைய ஆதார் எண் மூலம் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் என்ன செய்யமுடியும்? என்பதே சவால்” என மீண்டும் ஷர்மா ட்வீட் செய்திருந்தார்.

    எனினும், சமாளிக்கும் விதமான ஷர்மாவின் பதில் நெட்டிசன்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. “உங்களது பிறந்ததேதி, செல்போன் எண், பான் கார்டு எண், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதார் எண் மூலம் எடுத்துவிடலாம் என்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?” என பலர் ஷர்மாவிடம் கேட்டுள்ளனர்.

    மேலும், “பல அடி நீளத்தில் சுவர் கட்டி ஆதார் தகவல்களை பாதுகாப்பது இப்படிதானா?” எனவும் பலர் கேட்டுள்ளனர். 

    எல்லியட் ஆல்டர்சன் வெளியிட்ட தகவல்களை ஆதார் இல்லாமலேயே எளிதாக எடுத்துவிடலாம் எனவும் பலர் ஷர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

    மேற்கண்ட இந்த நிகழ்வால் மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்தான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
    ×