search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "factories"

    • சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர்.
    • திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாடும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சமூக நலன் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்க உறுப்பினர்கள் குழு தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிலாளர்கள் குழு தலைவர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர். அப்போது அவர்களிடம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறினோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளிட்ட திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தோம். பசுமை சார் உற்பத்தியை கவுரவித்து, அங்கீகார சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அப்போது திருப்பூர் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பதாக சுவிட்சர்லாந்து குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.
    • ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் குமாா் நகா் மின்சார வாரிய துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ராஜகுமாரி தலைமை வகித்தாா்.

    இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வணிகப் பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனா். திருப்பூா் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மின்சார வாரிய அலுவலகத்திலும் ஏதேனும் காரணங்களை கூறி முரண்பாடாக நடந்து கொள்கின்றனா்.

    இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு தாமதமின்றி விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேசினார். #vaiko #parliamentelection

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்கு உறுதிகளை மோடி நிறை வேற்றவில்லை.

    ஜிஎஸ்டியால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம். பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக மாறி விடும்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது.

    இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா? பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார். #vaiko #parliamentelection

    டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #DenguFever
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

    தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

    ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
    கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    நாமக்கல்:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சி மீதும், ஆளும்கட்சியினர் எதிர்க்கட்சியினர் மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். உளவுத்துறையின் தோல்வி, சமூக விரோதிகள் ஊடுருவல் என்று விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மை குற்றவாளி மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்பது யாராலும் பேசப்படுவது இல்லை.

    மாசு கட்டுபாட்டு வாரியம் ஆலைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்குகிறது. ஆனால் அந்த நிபந்தனை பின்பற்றப்படுகிறதா? என கண்துடைப்புக்கு மட்டுமே ஆய்வு செய்கிறார்கள்.

    மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் பெருகி விட்ட காரணத்தால் கழிவு பொருட்களால் நிலத்தடிநீர், காற்று மாசுபடுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் தோல்நோய் வந்து அழியபோவது பொதுமக்கள் என்பதை உணர வேண்டும். இந்த விஷயத்தில் தவறு செய்யும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொங்குநாட்டில் சாயக்கழிவுகள் மற்றும் தோல் கழிவுகள் நேரடியாக நீர்நிலைகளில் கலக்கப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கொங்குநாடு மக்கள் வாழ தகுதி இல்லாத இடமாக மாறிவிடும். இதேபோல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளும் கழிவுகளை நேரடியாக நீர்நிலைகளில் கலக்கின்றன. கொங்கு மண்டலத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடும் தொழிற்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

    சட்டசபையில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் பரிசீலனை செய்வதாக கூறி உள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள் விரும்பவில்லை. ஆக்கபூர்வமாக விவாதம் செய்வதையே விரும்புகின்றனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அது தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் அமைப்பாக இருக்க வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெருவாரியான மக்கள் செய்து வரும் பெண்கள் பூப்பெய்தும் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். அந்த கூட்டத்தில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி கமலிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராசன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் துரை, செல்வம், சின்ராஜ், விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    ×