என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 5 தொழிற்சாலைகளுக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
Byமாலை மலர்30 Oct 2018 12:51 PM GMT (Updated: 30 Oct 2018 12:51 PM GMT)
டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #DenguFever
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காக்களூர் தொழிற்பேட்டையில் இன்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் அதிகாரிகள் டெங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
தொழிற்சாலைகளில் உள்ள குடோன், தண்ணீர் தொட்டிகளில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய வகையில் சுகாதாரமற்ற முறையில் பராமரித்ததற்காக 5 தொழிற்சாலைகளுக்கும் 2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள 350 தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அபராதம் விதித்த தொழிற்சாலைகள் சீர் செய்யாவிட்டால் மேலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
தமிழக அரசின் ஆவின் பால் தொழிற்சாலையில் ஆய்வில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய வகையில் இல்லாவிட்டாலும், தூய்மையாக வைத்திருக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழ் செல்வன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, விஜயகுமாரி மண்டலா துணை அலுவலர் சபாநாயகம் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். #DenguFever
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X