search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue mosquito"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
    • உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.

    உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.

    • ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்
    • அதிகாரி உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது.

    இதனால் ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.

    அதன்படி பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்து வருகின்றனர்.

    • திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    • தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் ஏ. ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நகராட்சி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் ஊற்றினர்
    • தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரிஅடுத்த பட்டணம் ஊராட்சியில் சுகாதாரத்துறைசார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திமிரி சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, மணி, சுகாதார ஆய்வாளர் கவின் ஆகியோர் தலைமையிலான தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கொசு மருந்து அடித்தல், வீடு, வீடாக சென்று தண்ணீரில் குளோரின் தெளித்தல், சாலைகளில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார்.
    • 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி, ஜூலை.5-

    தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு, கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறையுடன், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலக்டர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் தேங்காவண்ணம், தொட்டிகள், உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள் போன்றவற்றை அகற்றியும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெ ச்சரி க்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் என்றால் தாமாகவே கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான ரத்த பரிசோதனைகளை செய்து கொண்டு, காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நட பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி குழுவினர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமையில் ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு கொசுவை உருவாக்கக்கூடிய தண்ணீர் தேங்க கூடிய பொருள்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் கூறியதாவது, பகலில் தான் டெங்கு கொசு கடிக்கும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே மூன்று நாட்களுக்கு மேல் நல்ல தண்ணீரை பிடித்து வைத்திருப்பதால் டெங்கு கொசு உருவாகிறது. நல்ல தண்ணீரை உடனுக்குடன் பிடித்து அதை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

    காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் எனவும், தேங்காய் சிரட்டை, பழைய டயர்கள், உரித்து மட்டைகளை தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றார். சுகாதார மேற்பார்வையாளர் தவமணி, சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

    கொசுக்கள் உற்பத்தியானதை தடுக்காத 35 சுகாதார ஆய்வாளர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் குற்ற மெமோ நடவடிக்கை எடுத்துள்ளனர். #Dengu
    சென்னை:

    சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.

    வடக்கு, சென்ட்ரல், தெற்கு மண்டலத்திற்கு தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் துணை கமி‌ஷனர் (சுகாதாரம்) ஆகியோர் வீடுவீடாக சென்று கொசுக்களை அழிக்கும் பணியில் களம் இறங்கி உள்ளனர்.

    சுகாதார அலுவலர் (எஸ்.ஓ.) சுகாதார ஆய்வாளர் (எஸ்.ஐ) பற்றாக்குறையால் டெங்குவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் 200 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். இது தவிர பிறப்பு, இறப்பு சான்றிதழ் பணிகளை பதிவு செய்ய 32 பேர் ஈடுபடவேண்டும்.

    ஆனால் மொத்தமே 106 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற இடங்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. இதனால் 3 வார்டுகளை ஒரு சுகாதார ஆய்வாளர் கவனிக்கின்ற நிலை தற்போது உள்ளது.

    டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த களப்பணியாளர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் நேரம் பாராமல் வேலையில் பயன்படுத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையால் இருக்கின்ற ஊழியர்களை வைத்து நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகளை கவனிக்க முடியாமல் திணறுவதால் வீடுகளிலும், பொது இடங்களிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகிவிடுகின்றன.

    ஒரு இடத்தை ஆய்வு செய்து விட்டு மீண்டும் வருவதற்குள் அதே இடத்தில் கொசுக்கள் முட்டையிடுகின்றன. தொடர்ந்து கண்காணித்து கொசுக்களை அழிக்க தேவையான அளவு ஆய்வாளர்கள் இல்லாததால் டெங்கு பாதிப்பு இன்னும் குறையவில்லை.

    இதற்கிடையில் சுகாதார ஆய்வாளர்களின் தீவிர களப்பணியை தாண்டி கொசுக்கள் உற்பத்தியானதை மண்டல அதிகாரிகள் நேரில் பார்த்து விட்டால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு ‘குற்ற மெமோ’ வழங்கப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் 3 வட்டாரத்திலும் சேர்த்து 35 சுகாதார ஆய்வாளர்கள் மீது இந்த மெமோ நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    தெற்கு மண்டலத்தில் மட்டும் 12 பேர் மீதும் வடக்கு, சென்ட்ரல் மண்டலத்தில் தலா 10 பேர் வீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக குறைபாடுகளை வைத்துக் கொண்டு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முறையற்ற செயல் என்றும் நேரம் பாராமல் உழைத்தும் பயன் இல்லை என்றும் சுகாதார ஆய்வாளர்கள் வேதனை அடைகின்றனர்.

    வேலைப்பளு, மெமோ நடவடிக்கை போன்றவற்றால் மனஅழுத்தம் அடைந்துள்ள ஆய்வாளர்கள் கமி‌ஷனர் மற்றும் துணை கமி‌ஷனரை சந்தித்து முறையிட்டனர். தெற்கு மண்டல அதிகாரி தொடர்ந்து குற்றமெமோ வழங்கி வரும் செயல் வேதனை அளிக்கிறது என்றும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தை கண்டுபிடித்து தண்டிக்கும் நோக்கத்தோடு அவர் செயல்படுவதாக முறையிட்டனர்.

    இது குறித்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி கூறியதாவது:-

    தேவையான ஆட்களை நியமித்து வேலைகளை வாங்குவது தான் முறையாகும். 4 வருடமாக காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இருக்கின்ற ஊழியர்களை வைத்து சமாளிக்கிறோம். எந்த அளவிற்கு களப்பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இந்த நேரத்தில் வேலை செய்கிறோம். ஆனால் அதையும் மீறி கொசுக்கள் இருப்பதை கண்டு பிடித்து எங்களை தண்டிப்பது வேதனையான செயல். டெங்குவை கட்டுப்படுத்த முதலில் சுகாதார ஆய்வாளர்களை முழுமையாக நியமிக்க வேண்டும். அதை செய்யாமல் தண்டிக்கும் செயலில் ஈடுபடுவது நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என்றார். #tamilnews
    டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க தவறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் செந்திரகுமார நாடார் கல்லூரி வளாகங்களில் கலெக்டர் சிவஞானம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்லூரி வளாகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக அரசு அலுவலர்கள், அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வீடுகள், கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 1,921 இடங்களில் லார்வா புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
    டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்த 2 அரிசி ஆலைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #Dengu
    காஞ்சீபுரம்:

    தமிழகம் முழுவதும் டெங்கு-பன்றிக் காய்ச்சல் நோய் பரவி உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா உத்தரவுப்படி நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சுகாதார கேடாக இருக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு, தாயண்குளம், பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி 2 அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கலெக்டர் பொன்னையா அந்த 2 அரிசி ஆலைகளுக்கு தலா 12 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #Dengu
    கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். #Dengu
    திருவாரூர்:

    திருவாரூர் காட்டுக்கார தெரு, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நகர் பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.

    அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    மேலும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பள்ளி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொது வெளியில் கொட்ட வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengu
    கோழித்தீவன உற்பத்தி ஆலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததையடுத்து காஞ்சீபுரம் கலெக்டர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். #Dengu
    காஞ்சீபுரம்:

    டெங்கு-பன்றி காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு-பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் அதிரடி ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலு செட்டிசத்திரம், திருப்புட்குழி, ஆரியபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரிய பெரும்பாக்கத்தில் உள்ள கோழித்தீவன உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்த போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ஆலையை உடனடியாக சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலவலர் திருஞானசம் மந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் ஒரகடம் தொழிற்சாலை பகுதிகள், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஏற்கனவே ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது இருந்தார். #Dengu
    டெங்கு கொசுக்கள் ஒரு நாளைக்கு 1,500 முட்டையிடும். அதனை சாதாரணமாக நினைக்காமல் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #Dengue
    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் தொழிலாளிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் விழா மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் இன்று காலை கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தொழிலாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோயம்பேடு மார்கெட் மேனேஜிங் கமிட்டி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    அடுத்த கட்டமாக அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிக்க இருக்கிறோம். டெங்கு காய்ச்சலுக்கு அனைத்து அரசு மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். காய்ச்சலால் மரணம் என்பது முக்கியமாக தடுக்கப்பட வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் வந்தால் 5-ல் இருந்து 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து 1,200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.



    ஒரு கொசு 21 நாள் உயிர் வாழும். கொசு ஒரு நாளைக்கு 1,500 முட்டையிடும். அதனால் அதனை சாதாரணமாக நினைக்கக்கூடாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள காய்கறி சங்கங்கள் அல்லது கூட்டமைப்பு எந்த உதவியாக இருந்தாலும் தெரிவிக்கலாம். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு 5 லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய பெருமை வணிகர் சங்கங்களையே சாரும். காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். காய்ச்சலால் ஒருவர் இறப்பதை அரசு அனுமதிக்காது.

    கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்கிறோம். மருத்துவமனை அமைக்க இடம் தாருங்கள். மருத்துவமனையை அமைத்து தருகிறோம். அதுவரை தினமும் 2 மருத்துவ முகாம் அமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். #MinisterVijayabaskar #Dengue

    ×