என் மலர்
நீங்கள் தேடியது "டெங்கு கொசு"
- டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
- சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக புறநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உள்பட 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும், அவர்களை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்தியூர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 100 -க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது:- அந்தியூர் காலனியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், அந்தியூர் காலனி பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் இருப்பவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
அப்பகுதியில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மருந்து தெளிக்கப்பட் டுள்ளது. அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
- தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் ஏ. ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நகராட்சி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






