search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private College"

    • போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி.

    இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கிடந்தது. அதனை மோப்ப நாய் கவ்வி எடுத்தது.

    அதனை போலீசார் கைரேகை நிபுணர்களிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் சந்தேகப்படும் படியான யாருடைய நடமாட்டமும் இல்லை. எனவே கொலையாளிகள் கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன்பேரில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    • தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் ஏ. ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நகராட்சி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இதனை நம்பி கணேசன் தனது பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற பணத்தை சேர்த்து ரூ.35 லட்சத்தை ராம லிங்கத்திடம் அளித்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி குமரேசன், சந்தோஷ்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே திருக்காஞ்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் கணேசன் (வயது52). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அதே தொழிற்சாலையில் நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே இடத்தில் இருவரும் வேலை பார்த்து வந்ததால் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

    இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ராமலிங்கம் தனக்கு தெரிந்த நாகர் கோவில் ஆண்டாள் குளம் பகுதியை சேர்ந்த குமரேசன் (45) மற்றும் கேரள மாநிலம் இடிக்கி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(46) ஆகியோர் மூலம் காரைக்காலில் தனியார் கல்லூரி ஒன்று விலைக்கு உள்ளதாக கணேசனிடம் தெரிவித்தார்.

    அந்த கல்லூரியை விலைக்கு வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ராமலிங்கம் கூறினார். இதனை நம்பி கணேசன் தனது பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற பணத்தை சேர்த்து ரூ.35 லட்சத்தை ராம லிங்கத்திடம் அளித்தார்.

    அந்த பணத்தை ராம லிங்கம் குமரேசன் மற்றும் சந்தோஷ்குமாரிடம் வழங்கி யதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கல்லூரியை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு ராமலிங்கத்திடம் பலமுறை கணேசன் கேட்டார்.

    அதற்கு கணேசன் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தார்.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கணேசன் இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி குமரேசன், சந்தோஷ்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு கல்லூரிகளில் மே 9-ந்தேதி முதல் கிடைக்கும்.
    • மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

    • திருச்சி கல்லூரியில் இளையோர் இன்னும் ஏற்றமுற சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி
    • 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர்

    திருச்சி:

    திருச்சி புனித வளனார் கல்லூரியில் புனித லூர்தன்னை ஆலய வளாகத்தில் உள்ள தெரேசா மக்கள் மன்றத்தில் இஞ்ஞாசியார் வழியில் உயர்வையே நோக்கிய உன்னதம் என்ற மைய நோக்கோடு இளையோர் இன்னும் ஏற்றமுற... என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்பா இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர். புனித லூர்தன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், இஞ்ஞாசியாரின் தாராள மனம் வேண்டி என்ற ஜெபத்துடன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

    இக்பா அமைப்பின் செயலாளர் முனைவர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ வரவேற்றார். புனித வளனார் அறிவியல், கலைமனைகளின் அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ ஆசியுரையில் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பங்குகளில் இருந்து 91 இளையோர் பங்குபெறுவது இக்பாவின் வெற்றி வரலாற்றின் முதல் படி என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.

    முதல் அமர்வு கருத்துரை யாளராக மாநில ஆலோசகர் மரிய அன்னராஜ் ஐக்கப் இளையோருக்கான இனிகோ என்ற தலைப்பில் ஆளுமைப் பண்புகளை மேலும் மேலும் வளர்த்து உயர்வடைய உன்னத வழிமுறைகளை விளக்கினார்.

    இரண்டாவது அமர்வில் மதுரை லொ யோலா தொலைக்காட்சி இயக்குநர் சேவியர் அந்தோனி எழுவீர், எழுவீர் இளையோரே என்ற தலைப்பில் மதர் தெரேசா வின் தாராளமனதுடன் ஆற்றிய அரும்பணி பற்றியும், தன்னுடைய நிறை, குறைகளை இறைவனிடம் ஒப்படைத்து, அல்லவை நீக்கி நல்லவை பெருக்கும் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகளை கண்ணதாசன் அற வுரைகளைப் பற்றியும், மனித வாழ்வு கெடும் பல்வேறு நிலைகள் பற்றிய பழமொழிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இளைய கடவுள் எங்கள் இயேசு என்ற மறையுரை யுடன் திருப்பலியை திருச்சி குருகுல முதல்வர் எல்.அந்துவான் நிறைவேற்றினார். இளையோரே முக்காலத்தையும் இணைக்கும் தலைவர்கள் என்று வாழ்த்தினார்.

    மூன்றாம் அமர்வில் திருச்சி கார்மல் சமூக சேவை மைய இயக்குநர் சுரேஷ் வாருங்கள், இளையோரே, வரலாறு படைக்க என்ற தலைப்பில் இன்றைய மாய உலகில், இளையோர் பெற வேண்டிய தலைமைப் பண்புகளை இடுக்கண் என்ற குறும்படம் மூலம் விளக்கினார்.

    இறுதி அமர்வில் திருச்சிலுவை கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி இளை யோரோடு எனது அனுபவம் என்ற தலைப்பில் இயேசுவோடு பவுல் வாழ்ந்ததைக் குறி ப்பிட்டு நாமும் அப்படியே இயேசுவின் வல்லமையில் என்றும் நிறைவாழ்வு வாழவேண்டும் என்று எழுச்சியுரை ஆற்றினார்.

    இக்பா தலைவர் முனைவர் கே.எஸ்.அருள் சாமி நன்றி தெரிவித்து பேசுகையில், வருங்காலத்தில் இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, ஆளுமைத்திறன், இனிகோ வழியில் ஆன்மீகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று சிறந்த இறைமக்களாக விளங்க இக்பா மாதந்தோறும் பயிற்சிகளை சிறந்த வல்லுநர் குழு மூலம் நடத்தும் என்று உறுதி அளித்தார்.

    இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும், சேவியர் அந்தோனி எழுதிய இளையோருக்கான இனிகோ என்ற ரூ.500 மதிப்புள்ள அரிய நூல் முனைவர் ச.சாமிமுத்து குடும்பத்தினரின் நிதிய ஏற்பாட்டால் இலவசமாக வழங்கப்பட்டது.

    • காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட தாரை காமராஜபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் இஸ்மாயில்(வயது61). இவர் நேற்று மாலை பஸ் நிலையம் வந்து விட்டு திருப்பி தனது டீ கடைக்கு செல்வதற்காக தாராபுரம் பூளவாடி பிரிவு அருகே சென்றார்.

    அப்போது தனியார் கல்லூரி பேருந்து இஸ்மாயில் மீது மோதியது .இதில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார். இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தனியார் கல்லூரி காவலாளி கார் மோதி பலியானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). இவரது மனைவி சரஸ்வதி .

    மாரியப்பன் மதுரையில் உள்ள கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சைக்கிளில் சமயநல்லூர்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் ரத்த வெள்ள த்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் திண்டு க்கல் மாவட்டம் சின்னாள பட்டியை சேர்ந்த தினேஷ் பாபு மீது ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவுக்கு, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றதால் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெருவளூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகத்தின் 2-வது மகள் பிரதீபா (வயது 19). கடந்த ஆண்டு இவர் பிளஸ்-2 தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் தனது டாக்டர் கனவு நிறைவேறும் என்றிருந்த பிரதீபாவுக்கு பேரிடியாக நீட் தேர்வு அமைந்தது.

    கடந்த ஆண்டு பிரதீபா நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. அதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால், அடுத்த ஆண்டில் கூடுதல் மதிப்பெண் பெற்று அரசு கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்று அதற்கு தயாராகி வந்தார்.

    ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வில் பிரதீபா 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இதில் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று காலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அந்த கிராமத்துக்குள் வந்த பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த வளத்தி போலீசார் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தடுத்துநிறுத்தினர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அவர்கள், ‘நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். பிரதீபா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கலெக்டர் கந்தசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.

    ஆனாலும் அரசியல் கட்சியினர் கலெக்டர் பரிந்துரையை ஏற்று அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதனால் போலீசார் செஞ்சி தி.மு.க. எம்.எல்.ஏ. மஸ்தான் உள்பட சுமார் 100 பேரை கைது செய்து, சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.

    பின்னர் பிரதீபாவின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மஸ்தான் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பிரதீபா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    பிரதீபாவின் தந்தை சண்முகம் கூறும்போது, “பிரதீபா டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். நானும், என் மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்துவிட்டதால் நான் டாக்டராக முடியாது, அதனால் விஷம் குடித்துவிட்டேன் என்று பிரதீபா கூறினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எங்கள் மகளை ‘நீட்’ தேர்வு கொன்றுவிட்டது. என் மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். என் மகளை போன்று ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

    பிரதீபா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், “நான் 2018 மே 6-ந் தேதி தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவி. தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டிருந்ததால், அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மாணவியின் கடிதத்தில் தமிழ் மொழி வினாக்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NEET2018 #Pratheeba TNStudentSuicide 
    ×